
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💔 💕விஷம் 💔
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#🧓பிரதமர் மோடி #📺அரசியல் 360🔴 #🔶பாஜக பாரதம் பிரதமர்*பனி பிரதேசத்திலும் மெநொ(*mono) ரயிலை அமைத்தார் ராணுவத்திற்காக
*ஜெய் பாரத் மாதா கி*
#தெரிந்து கொள்வோம் #🌦️வானிலை மாற்றம்❄️ #📷நினைவுகள் #👌அருமையான ஸ்டேட்டஸ்
#🙏ஆன்மீகம் #பத்தி #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் பயம் போக்கும் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில்*🌹
எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.
இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு சிவன் சயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி. 850-ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133-வது தேவாரத்தலம் ஆகும்.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, நட்டுவன், பிள்ளையார் சந்திடு தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார்.
மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு-சற்று தடித்த உயர்ந்த பாணம், உள் சுற்றில் வெண்ணெய் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.
தெற்கு நோக்கிய சன்னதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம் கதை சூலம் ஏந்தி இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தாகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலாவடிவம் உள்ளது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர். மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.
தலபெருமை:
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். குப்த கங்கை ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழிகூற வேண்டும் என வேண்டினாள் அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோச்சனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும். காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த தங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியைவிட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது
கார்த்திகை ஞாயிறு:
தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர், இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார் ஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால் நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை
கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் இங்கு அபயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள். துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள். ராகுவும் கேதுவும் ஓரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே. காண முடியும் என்று கூறப்படுகிறது.
_பகிர்வுசிஎஸ்வி_
யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய
்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார் எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம் காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தலவரலாறு
எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என்று எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இன்றவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, `வேண்டும் வரம் கேள் என்றார்
அதற்கு எமனும், `இறைவர் அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர் திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் ரோத பிரம்மா பிடித்து என்னை வாட்டுகிறது பாவமும் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை என்றார்.
எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், `எமதர்மனே இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என்று கூறமாட்டார்கள் நோய் வந்ததாலும் வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என்றும் கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும் நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமடுக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு. மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய் இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்னரே என்னை தரிசிப்பார்கள் என்று அருளினார். அதன்படி இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல் வழியாடு நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீவாஞ்சியம் 610 110 திருவாரூர் மாவட்டம்.🌹
#பத்தி #😍குட்டி கதை📜
*ஓ மனிதனே இதைப் படித்து நீ திருந்திக் கொள் இக்கதையில் ஓர் உண்மை இருக்கிறது*🌹
ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.
தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.
ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.
இவனை_நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.”
என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரன் கெஞ்சினான்,
நான் உங்களுக்கு பத்து
வருடங்களாக சேவை செய்தேன்,
நீங்கள் இப்படி ஒரு தண்டனையை
எனக்குத் தரலாமா?
தயவுசெய்து என்னை அந்த
நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு
முன் பத்து நாட்கள் அவகாசம்
ஒன்று தாருங்கள்! ”
ராஜா ஒப்புக்கொண்டார்.
அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.
காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார்.
அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.
அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.
பத்து நாட்கள் முடிந்தது.
வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.
அவன் தூக்கி எறியப்பட்டபோது, அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.
இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
இதைப் பார்த்து திகைத்த அரசன்,
_பகிர்வுசிஎஸ்வி_
"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?"
என்றான்.
வேலைக்காரன் பதிலளித்தான்,
"நான் பத்து நாட்களுக்கு
மட்டுமே இந்த நாய்களுக்கு
சேவை செய்தேன், அவை என்
சேவையை மறக்கவில்லை.
நான் உங்களுக்கு பத்து
வருடங்கள் சேவை செய்தும்
என் முதல் தவறைக்கூட
மன்னிக்காமல் நான் உங்களுக்கு
செய்த அனைத்தையும் மறந்து
என்னை தண்டிக்க
உத்தரவிட்டீர்கள்!"
அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.
நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம்.
ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை.
இருக்கிறார்கள்.
தவறு செய்வது மனித சுபாவம்.
இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•••
மன்னிப்போம்•••மறப்போம்••🌹•!
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் மூன்று படைவீடுகள்*
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.
*மலேசியாவின் மூன்று படைவீடுகள்*
பத்துமலை முருகன், கல்லுமலை முருகன், தண்ணீர் மலை முருகன்
இம்மூன்று ஆலயங்களைப் பற்றியும் இந்த தைப்பூச விழாக் காலத்தில் அறிந்து கொள்வோம். இவ்விழாக்களில் தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிகஅளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தைப்பூசத்தன்று ஐந்து மாநில அரசுகள் பொதுவிடுமுறை அளிப்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.
*கோலாலம்பூர் பத்துமலை*
மலேசியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் புகழ்பெற்றதாகவும், உலக அளவில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாகவும் திகழ்வது, கோலாம் பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் ஆகும்.
இங்கு மூலவராக விளங்குவது, வேல் மட்டுமே. இம்மலை சுண்ணாம்புக் கற்களால் ஊசிப்பாறைகள் கொண்டு உருவான இயற்கை குகையாகும்.
இந்த மலையின் வயது நாற்பதுகோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்துமலை என்ற பெயர், பத்துமலை அருகே ஓடும் கங்கை பத்து என்ற ஆற்றின் பெயரால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாலயம் சுமார் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கி.பி. 1891-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கே. தம்புசாமி பிள்ளை, பத்துமலைக் குகையில் 400 அடி உயரத்தில் சுப்பிரமணிய சுவாமியின் வேலினை நிறுவி, வழிபாட்டினைத் தொடங்கினார்.
இன்று இவ்வாலயத் திருப்பணி மற்றும் 140 அடி உயர முருகப்பெருமான் சிலை அமைக்கும் பணி டான்ஸ்ரீ டத்தோ நடராஜா தலைமையில் நான்காண்டுகள் நடைபெற்று, 2006-ம் ஆண்டு இச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
பத்துமலை அடிவாரத்தில், முருகப்பெருமான் சிலை, விண்ணை முட்டி கம்பீரமாக காட்சி தருகின்றது.
*அமைவிடம்* மலேசிய நாட்டின் தலைநகரமாய் திகழும் கோலாலம்பூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் பத்துமலை அமைந்துள்ளது. இது சிலாங்கூர் மாநிலம், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
*பினாங்கு தண்ணீர்மலை*
மலேசிய நாட்டின் தனித்தீவு நகரம் பினாங்கு. மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இதில் உள்ளது தண்ணீர்மலை முருகன் ஆலயம்.
சோழமன்னன் வென்ற கடாரம் என்ற ஊர், இத்தீவின் அருகேயுள்ள கிடா என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது.
நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாக பினாங்கும், கோலாலம்பூரும் திகழ்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகரத்தார் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி, ஐந்து ஏக்கர் பரப்பில் தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயம் அமைத்துள்ளனர்.
இதுதவிர, இவர்கள் காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், இன்று தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் கொடிமலை முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.
அதன்பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகே தண்ணீர்மலை முருகன் கோவில் பெரிய அளவில் வெளியே தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்து அறப்பணி வாரியம் புதிய கோவில் கட்ட முன்வந்தது.
மலையின் இடைப்பகுதியில் இருந்த முருகன் ஆலயம், புதிய முயற்சியின் பயனால், மலையுச்சி பகுதி தேர்வு செய்யப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட படிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. சுமார் நானூறு அடி உயரத்தில் ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
*ஈப்போ கல்லுமலை*
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஈப்போ.
பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போ, கோடீஸ்வரர்களின் பூமி என்ற அடைமொழியால் வழங்கப்படுகிறது.
கிந்தா என்ற நதியும், சுங்கை பிங்கி, சுங்கை பாரி என்ற துணைநதிகளும் பாயும் ஊர் இது. சுண்ணாம்புக் குன்றுகள் நிறைந்த நகரம். வெள்ளீயம் அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்ட பூமியும் இதுவே.
இங்கே மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம், சென்ரோ மலைக்குகையில் இருந்து வந்தது. கி.பி. 1889-ல் நிலச்சரிவு விபத்தால் மலையடிவாரத்திற்கு கி.பி. 1930-ல் இடம் பெயர்ந்த இவ்வாலயம், இன்று கம்பீரமாய் எழுந்து நிற்கிறது.
இவ்வாலயத்தில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, அலகுக் குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
ஆலயம் கிந்தா நதிக்கரையில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் ஏழு கலசங்களைத் தாங்கி பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது.
உள்ளே விசாலமான பிரகாரம், நடுவில் பிரம்மாண்ட முன்மண்டபம் அமைந்துள்ளது. விநாயகர், அம்மன், நடராஜர் சபை, அரச மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. மயில்கள் நிறைந்த தனிப்பகுதியும் இருக்கிறது.
ஆலயத்தின் நடுப்பகுதியில், கல்லுமலை சுப்பிரமணியர், திருச்செந்தில் நாதனின் மறுவடிவமாக சிரித்த முகத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரே ஈப்போ மக்களை காத்தருளும் இறைவன்.
ஈப்போ நகரில் குனோங்கிலோ பகுதியில், ஜாலான் ராஜா மூசா அசீஸ் சாலையில் கல்லுமலையின் அடிவாரத்தில், கிந்தா நதிக்கரையோரம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது.
#🤣 லொள்ளு #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅






