#பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் வருடம் சித்திரை மாதம் 24ம் நாள் 07-மே-26, வியாழக்கிழமை குருவாரம் நற்
பலன்களை அள்ளி வழங்கும் தேய்பிறை சஷ்டி விரத நாளில் சரவண ஜெனிதன் ,
பன்னிருகையான் பவள நிற செவ்வேள் பார்வதி புத்ரன் பாலசுப்ரமண்யனை நம் வாழ்வில்
பங்கெடுத்து பிரச்சனைகள், ஏற்படுத்தி துன்பங்களை தரும் தீவினைகளை அழித்திட
பரிபூரணமான பக்தியோடு நம்பிக்கையுடன் போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
ஆறு முகங்களைக் கொண்டவரே , சந்தனம் பூசப்பட்ட திருமேனி, அகன்ற மார்புடையவரே , தெய்வீக மயில் வாகனத்தில் வீற்றிருப்பவரே , சிவபெருமானின் புதல்வா , தேவ சேனாபதி, சுப்ரமண்யா உனை சரணடைகிறேன்.
ஷடாநநம் சந்தநலேபிதாங்கம், மஹோரஸம் திவ்யமயூரவாஹநம், ருத்ரஸ்ய ஸூநும் ஸுரலோகநாதம்
ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
ஜ்வலிக்கும் வடிவம் கொண்டவரே, தேவர்களால் வணங்கப்படுபவரே, மயில் மீது அமர்ந்தகுமரனே,
மன்மதனைப் போன்ற அழகான வடிவம் கொண்டவரே சுப்ரமண்யா உனை நான் சரணடைகிறேன்.
ஜாஜ்வல்யமாநம் ஸுரவ்ருந்தவந்த்யம், குமார தாராதட மந்திரஸ்தம், கந்தர்பரூபம் கமநீயகாத்ரம்
ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
பன்னிரு கையனே, பன்னிரு கண்களை கொண்டவரே, வேதங்களின் வடிவமே, சூலம் வாள் ஏந்தியவரே ஆதிசேஷனின் அவதாரமாய், அழகான ரூபம் கொண்டவரே சுப்ரமண்யா உனை நான் சரணடைகிறேன்
த்விஷட்புஜம், த்வாதஸ திவ்யநேத்ரம், த்ரயீதனும் ஸூலமஸீ ததாநம், ஸேஷாவதாரம் கமநீயரூபம்
ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
அசுரர்களை போரில் வெல்பவரே, சிறந்த தேவரே, சக்தி ஆயூதம் ஏந்திய குமாரனே உனை நான் சரணடைகிறேன்
ஸுராரிகோராஹவஸோபமாநம், ஸுரோத்தமம் ஸக்திதரம் குமாரம், ஸுதார ஸக்த்யாயுத ஸோபிஹஸ்தம் ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
வேண்டிய வரங்களை அளிப்பவரே, ஈசனின் புதல்வா, நினைத்ததை அளிக்கும் காமதேனு போன்றவரே, கங்கையில் பிறந்தவரே, யாவர்க்கும் நன்மைசெய்பவரே சுப்ரமண்யா உன்னை நான் சரணடைகிறேன்
இஷ்டார்த்த ஸித்தீப்ரதம்,ஈச புத்ரம்,இஷ்டாந்நதம் பூஸுரகாமதேநும் ,கங்கோத்பவம் ஸர்வஜநாநுகூலம் ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
🙏🦚🐓