#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் சமர்ப்பித்த செப்பு பட்டயம் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது*
ஹரி ஓம்
காகபுஜண்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ ஆசிர்வதிக்கட்டும் அன்பே சிவம்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் ஸ்வாமி ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் விநாயகருக்கென்று ஆகம விதிப்படி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட ஆலயமாகும். இந்த தலம் அகத்தியர், உரோமசர், காகபுஜண்டர் உள்ளிட்ட ரிஷிகளால் வணங்கப்பட்ட தலமாகும்.
ஸ்மார்த்த மார்க்கத்தை நிறுவிய ஆதிசங்கரர் நடைபயணமாக பாண்டியநாட்டின் கொற்கை பகுதிக்கு வந்த போது அவருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது இத்தலத்தில் தங்கியிருந்தார். ஆயிரத்தெண் விநாயகர் மீது கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாட திருச்செந்தூருக்கு சென்று அங்குள்ள இலை விபூதியை உண்டால் வயிற்றுவலி தீரும் என அசரீரி ஒலித்தது அதன் படி ஆதிசங்கரரும் திருச்செந்தூருக்கு சென்று இலை விபூதி சாப்பிட்டு சுப்ரமணிய புஜங்கம் பாடி வயிற்றுவலியில் இருந்து விடுபட்டார்.
பின்பு ஆறுமுகமங்கலத்திற்கு வந்து தாம் பாடிய கீர்த்தனையை ஓலை சுவடிகளிலும், செப்பு பட்டயத்திலும் ஆவணப்படுத்தினார்.
அந்த ஓலை சுவடியும், செப்பு பட்டயமும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா ஆறாம் திருநாளன்று மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு காண்பிக்கப்படும
ஆத்ம நமஸ்கார்
ஷிரி சூர்தர் மகாதேவ்