RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#இரவுவணக்கம் #🙏வணக்கம்💐
🙏வணக்கம்💐 - Good ILi@ இரவு வணக்கம் உலகம் உறங்கலாம் ஆனால் உங்கள் லடசியங்கள் விழித்திருக்கடடும் ஆழ்மனதில் விதைக்கப்படும் நம்பிக்கையே காலையில் உங்களை உற்சாகமாக எழ வைக்கும் ! இனிய இரவு" நல் Good ILi@ இரவு வணக்கம் உலகம் உறங்கலாம் ஆனால் உங்கள் லடசியங்கள் விழித்திருக்கடடும் ஆழ்மனதில் விதைக்கப்படும் நம்பிக்கையே காலையில் உங்களை உற்சாகமாக எழ வைக்கும் ! இனிய இரவு" நல் - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் #முருகன்* 🦚 🌿🌹*திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும்*. சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி *அதை விக்ரகம் மீது முழுதாக தடவி* பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும் போது நிறைய தண்ணீர் இருக்கும். சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும். 🌿🌹வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பெருமான் கந்தவேல் திருச்செந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான்.அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார். 🌿🌹இறைவனுக்கு அளிக்கப் படும் சோடக உபகாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன். அங்கிருந்த பக்தர்களிடம்' உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள் என்று கேலி செய்தார். 🌿🌹அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரித்துக் கொண்டு ஆம் எங்கள் சண்முகருக்கு வியர்க்கும் என்று கூறி முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன். 🌿🌹வீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில் ஆம் அவர் மனைவி திடீரென கடுமையான வயிற்று வலியினால் துடித்தார். சூலை நோய் என்பார்கள் இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும். முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்து கொண்டார். உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் என்று கேட்டார். 🌿🌹அவர் கூறிய உபாயத்தின் படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று முருகப் பெருமானே என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்க முடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கி தருகிறேன். என்று மனமுருக வேண்டிக்கொள்ள எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனி பெருங்கருணையினால் லுசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயதக்க வகையில் உடனடியாக நீக்கியது. 🌿🌹முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்து லுசிங்டன் பிரபு சொண்ணபடியே வெள்ளிப் பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் லூசிங்டன் 1803 என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் லூசிங்டன் 1803 என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் மாநகரின்* மையப்பகுதியான* உக்கடத்தில், *பழமையும் ஆன்மீகப் பெருமையும் வாய்ந்த அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள்* திருக்கோயில் ஒரு மிகச்சிறந்த வழிபாட்டுத் தலமாகும். இக்கோயிலின் சிறப்பம்சங்களை இந்தப் பதிவில் காண்போம். அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் - உக்கடம், கோவை 🛕✨ அபூர்வமான இரட்டை சொர்க்க வாசல்கள்! 🚪🙌 பொதுவாக வைணவத் தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு நோக்கிய ஒரு சொர்க்க வாசல் மட்டுமே திறக்கப்படும். ஆனால், இக்கோயிலின் மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், இங்கு தெற்கு மற்றும் வடக்கு என இரண்டு திசைகளிலும் சொர்க்க வாசல்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு கொண்ட கோயில்கள் மிகவும் அரிதானவை. சோழர் காலத்துப் பொக்கிஷம் 👑📜 பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் மீது தீராத பக்தி கொண்ட சோழ மன்னன் ஒருவன், கொங்கு நாட்டுப் பகுதிக்கு வந்தபோது அங்கேயே பெருமாளைத் தரிசிக்க விரும்பி, காஞ்சி வரதராஜரின் நினைவாக இந்தக் கோயிலை எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. கோயிலின் தனித்துவமான சிறப்புகள்: இரட்டை நுழைவு வாயில்கள்: சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு உத்ராயணம் மற்றும் தட்சிணாயணம் என இரண்டு தனித்தனி நுழைவு வாயில்கள் இங்கு உள்ளன. லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு: கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதியான லட்சுமி ஹயக்ரீவர் இங்கு பஞ்சலோக மூர்த்தியாகத் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இவரை வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. மூலவர் தரிசனம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நின்ற கோலத்தில் கரிவரதராஜப் பெருமாள் மிக அழகாகக் காட்சியளிக்கிறார். கூடவே பூமி நாயகி மற்றும் நீளா நாயகி தாயார்களையும் இங்கு தரிசிக்கலாம். வழிபாட்டு பலன்கள்: 🌸 கல்வி மற்றும் கலைகளில் மேன்மை அடைய ஹயக்ரீவர் வழிபாடு. மன அமைதி மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் பெருக கரிவரதராஜப் பெருமாள் வழிபாடு. அனுமன் சன்னதியில் வேண்டிக்கொள்ள தடைகள் நீங்கி வெற்றி கிட்டும். 📍 அமைவிடம்: உக்கடம் பேருந்து நிலையம் அருகில், லட்சுமி நரசிம்மர் கோயில் பின்புறம், கோயம்புத்தூர். ⏰ தரிசன நேரம்: காலை: 06:00 AM - 10:00 AM மாலை: 05:00 PM - 08:00 PM
ஆன்மீக - வடக்குச்சொர்க்கலாeல் وم  reddiyuraanmigam Illulg' இரட்டைசொர்க்கவாசல்கள் இரட்டைநுழைவுவாயில்கள் கரிவரதராஜப் பெருமாள்திருக்கோயில் உக்கடம் வடக்குச்சொர்க்கலாeல் وم  reddiyuraanmigam Illulg' இரட்டைசொர்க்கவாசல்கள் இரட்டைநுழைவுவாயில்கள் கரிவரதராஜப் பெருமாள்திருக்கோயில் உக்கடம் - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் லஷ்மி நரசிம்ஹாய நமஹ_* கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டிய பகவான் நரசிம்மர்- விளக்கும் எளிய கதை... திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் பால் போன்றவை. மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும். எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடிக்க விரும்பும் நாம், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை! மேலும், நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர். மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா? வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா? இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர். சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார். பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியா காலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார். தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார். வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார். நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினாலும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம். தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர். சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார். இப்படிக் கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்! சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார். “ஸந்தாத்ரே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும்.🙏🌹
ஆன்மீக - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ்*பாரத போரில்* துரியோதனனின் உயிர் பிரியாமல்* இருந்ததற்கான காரணம் தெரியுமா?*🌹 பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் தங்களது உயிரை விட்டனர். கௌரவர் படைக்கு அன்று துரியோதனன் தலைமை ஏற்று நடத்திச் சென்றான். அன்றைய போரில் பகவான் கிருஷ்ணரின் சைகையின்படி துரியோதனனின் தொடையில் அடித்து அவனை சாய்த்தான் பீமன். துரியோதனனை உயிர் போகும்படி பீமன் அடித்தும் அவனது உயிர் அவனது உடலை விட்டுப் பிரியாமல் இருந்தது. இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் தனது ஞான சக்தியால் உணர்ந்து கொண்டார். அதன்படி துரியோதனனின் மனதில் இருந்த மூன்று கேள்விகள் அவனது உயிரை அவன் உடலை விட்டுப் பிரியாமல் செய்திருந்தன. அந்த மூன்று கேள்விகளை துரியோதனன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்க, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த சாதுர்ய பதில்களை இந்தப் பதிவில் காண்போம். கேள்வி 1: அஸ்தினாபுரத்தை சுற்றிலும் மதில்களை எழுப்பி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? பதில்: நீங்கள் அஸ்தினாபுரத்தை சுற்றிலும் மதில்களை எழுப்பி இருந்தால் நான் நகுலனை அனுப்பி அந்தக் கோட்டை சுவர்களை தரைமட்டமாக்கச் செய்திருப்பேன். ஏனென்றால், நகுலன் அளவிற்கு வேகமாகக் குதிரையைச் செலுத்தக்கூடியவர் யாருமில்லை. கேள்வி 2: துரோணாச்சாரியாரின் மறைவிற்குப் பின்னால் அசுவத்தாமனை நாங்கள் தளபதியாக்கி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? பதில்: நீங்கள் அசுவத்தாமனைச் சேனாதிபதி ஆக்கிருந்தால் நான் தருமனை கோபப்படச் செய்திருப்பேன். ஏனென்றால், தருமனின் கோபத்திற்கு முன்னால் எப்பேர்ப்பட்ட மகாவீரனும் எரிந்து சாம்பலாகி விடுவான். கேள்வி 3: நாங்கள் விதுரரை மகாபாரதப் போரில் கலந்து கொள்ளச் செய்திருந்தால் நீங்கள் என்ன செய்திருபீர்கள்? பதில்: ஒருவேளை விதுரர் உங்களுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் கலந்திருந்தால் நானே அவருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் இறங்கி இருப்பேன் என்று பகவான் கிருஷ்ணர் கூறினார். இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை கிடைத்த பின்னர் துரியோதனனின் மனம் சாந்தி அடைந்து அவன் உயிர் அவனது உடலை விட்டுப் பிரிந்தது.🙏🌹
ஆன்மீக - tll tll - ShareChat
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *இன்று* *கூர்ம* *ஜெயந்தி* 🌹 🪷 கூர்ம ஜயந்தி நிகழ்வை முன்னிட்டு 🪷 வைஷ்ணவ ஆழ்வார்கள் தங்கள் திவ்ய பிரபந்தம் பாசுரங்களில், விஷ்ணுமூர்த்தியின் தசாவதாரங்களை, குறிப்பாக கூர்ம (ஆமை) அவதாரத்தை மிகுந்த பக்தியுடன் புகழ்ந்துள்ளனர். பாலசமுத்திர மந்தனம் நடைபெற்றபோது மந்தர மலையைத் தாங்கி, தேவர்களை காத்த அந்த கூர்ம அவதாரத்தை ஆழ்வார்கள் அழகாக விவரித்துள்ளனர். அவற்றில் சில முக்கிய குறிப்புகள்: 🌻 பொய்கை ஆழ்வார் (முதல் ஆழ்வார்): முதல் திருவந்தாதியில், கூர்ம அவதாரத்தின் சிறப்பை அவர் குறிப்பிடுகிறார். பாலசமுத்திர மந்தனத்தின் போது மந்தர மலையின் பாரத்தைத் தாங்குவதற்காக விஷ்ணு ஆமை வடிவம் எடுத்த மகிமையை அவர் புகழ்கிறார். 🌻 திருமங்கை ஆழ்வார்: பெரிய திருமொழியில், கூர்ம அவதாரத்தில் மந்தர மலையைத் தாங்கிய இறைவனின் பாதுகாப்புத் தன்மையையும், தெய்வீக ரூபங்களையும் அவர் வர்ணிக்கிறார். 🌻 நம்மாழ்வார்: திருவாய்மொழியில், விஷ்ணுவின் பல அவதாரங்களைப் பற்றி கூறும்போது, உலகில் சமநிலையை நிலைநிறுத்திய கூர்ம அவதாரத்தை அவர் வணங்குகிறார். 🌻 கோதா தேவி (ஆண்டாள்): கோதா தேவி தனது நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை பாசுரங்களில் விஷ்ணுவின் தசாவதாரங்களை அழகாகப் புகழ்ந்துள்ளார். இதில் கூர்ம அவதாரத்திற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன. 🪷 பாலசமுத்திர மந்தனம் (க்ஷீர சாகர மந்தனம்): தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற பாலசமுத்திரத்தை மந்தனம் செய்தபோது, மந்தர மலை கடலில் மூழ்கத் தொடங்கியது. அப்போது விஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து, அந்த மலையை தனது முதுகில் தாங்கினார். 🪷 பாசுரங்களில் உள்ள குறிப்புகள்: நாச்சியார் திருமொழி: வாரணம் ஆயிரம் போன்ற பகுதிகளில், கோதா தேவி இந்த தெய்வீக செயலைப் புகழ்ந்து பாடுகிறார். சமுத்திர மந்தனம் மற்றும் மகாலட்சுமி வெளிப்பட்ட நிகழ்வை கவிதை நயத்துடன் விவரிக்கிறார். திருப்பாவை: சில பாசுரங்களில், கடலில் உறங்கும் இறைவனையும், மந்தன நிகழ்வில் அவர் செய்த உதவியையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன (எ.கா., “ஆழி மழைக் கண்ணா” போன்ற பாசுரங்கள்). 🪷 கூர்ம அவதாரத்தின் சிறப்புகள் (பாசுரங்களில்): அமிர்தத்தைப் பெற சமுத்திரம் மந்தனம் செய்யப்பட்டபோது, மந்தர மலை மூழ்காமல் இருக்க, விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து அதை தனது முதுகில் தாங்கியதை ஆழ்வார்கள் விரிவாகப் புகழ்கின்றனர். 🪷🪷🪷🪷🪷
ஆன்மீக - و రామానుజ సంతోష్ మహేంద و రామానుజ సంతోష్ మహేంద - ShareChat
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
🤣 லொள்ளு - ShareChat
00:18
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *கருமாதி*
ஆன்மீக - ShareChat
00:08