
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் பாரத போர் நடக்கப்போவது உறுதி செய்யப்பட்ட காலகட்டம் அது. பஞ்ச பாண்டவர் மற்றும் கௌரவர் ஆகிய இரு தரப்பினரும் பாரத யுத்தத்தில் தங்களுக்கு ஆதரவாகப் போர் புரிவதற்கு, தங்களால் இயன்ற அனைத்து வகையிலும் முயற்சி செய்து பெரும் படைகளைத் திரட்டத் தொடங்கினர்.
யுகத்தை மாற்றவிருக்கும் ஒரு மாபெரும் யுத்தத்திற்கு உலகமே தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் அனைத்திற்கும் காரணகர்த்தாவான அந்தப் பரந்தாமன் கண்ணனோ, எதையும் அறியாதவன் போலத் துயில் கொண்டிருந்தான். துவாரகையின் அரசனான கிருஷ்ண பரமாத்மாவிடம் மாபெரும் சேனை இருந்தது. அதற்கு 'நாராயணி சேனை' என்று பெயர். அந்த நாராயணி சேனையை யார் தம்முடைய தரப்பில் வைத்துப் போரிடுகிறார்களோ, அவர்களுக்குப் போரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
நாராயணி சேனையைத் தன் தரப்பில் போர் புரிய வேண்டி, கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்கு காண்டீபதாரி அர்ஜுனனும், அஸ்தினாபுர யுவராஜன் துரியோதனனும் ஒரே நேரத்தில் சென்றனர். இவர்கள் சென்ற நேரத்தில், அழகு கண்ணன் சயன கோலத்தில் ஆழ்ந்த நித்திரை கொண்டிருந்தான்.
முதலில் அங்கு பிரவேசித்த துரியோதனன், கண்ணன் உறக்கத்தில் இருப்பதைப் பார்த்ததும் அவரை எழுப்ப வேண்டாம் என்று எண்ணி, கண்ணனின் தலைக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தான். சற்று தாமதமாக வந்த அர்ஜுனன், தன் நண்பனும் பரந்தாமனுமாகிய கண்ணன் நித்திரையில் இருப்பதைப் பார்த்ததும், கண்ணனின் பாதங்களுக்கு அருகில் தரையில் அமர்ந்து, அவர் உறங்கும் அந்தச் சயன கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்துக் கண்ணன் கண் விழித்தான். அவன் கண் விழிக்கும்போது, அவனது பார்வை நேராகத் தனது காலுக்கு அருகில் தன்னை அன்போடு பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனனின் மேல் விழுந்தது. அதாவது, கண்ணனின் கோணத்தில் அவர் முதலில் கண்டது அர்ஜுனனைத் தான். "வா அர்ஜுனா!" என்று கூறியபடி எழுந்து உட்கார்ந்தான். அப்போதுதான் தனது தலைக்கு மேல் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த துரியோதனனைக் கண்டான். "அடடா! துரியோதனா! என்ன ஆச்சரியம். உங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் காண்பதில் மகிழ்ச்சி. இருவரும் போருக்காக உதவி கேட்க வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்" என்றான்.
"உங்கள் இருவருக்கும் கொடுக்க என்னிடம் இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒருபுறம் எந்தவித ஆயுதமும் ஏந்தாத நிராயுதபாணியாக நான் இருப்பேன். மறுபுறம் என்னுடைய பரந்து விரிந்த சேனை, நாராயணி சேனை இருக்கும். இந்தப் போரில் நானும் என்னுடைய நாராயணி சேனையும் எதிர் எதிராகத்தான் இருப்போம்" என்றான்.
மேலும், "இங்கு முதலில் வந்தது நீயாக இருக்கலாம் (துரியோதனனைப் பார்த்து). ஆனால் நான் முதலில் கண்டது அர்ஜுனனை அல்லவா! எனவே, முதலில் அர்ஜுனன் வேண்டுவதைத் தான் நான் தர வேண்டும். அதுவே தர்மம்" என்றான்.
இதனால் துரியோதனன் பெரும் ஏமாற்றம் அடைந்தான். அர்ஜுனன் எப்படியும் மாபெரும் நாராயணி சேனையை கண்ணனிடம் வேண்டிப் பெற்றுவிடுவான் என்று மனதிற்குள் அலறினான்.
ஆனால் கண்ணனின் இரண்டு தேர்வுகளைக் கேட்ட அர்ஜுனன், ஒரு நொடி கூட யோசிக்காமல், "கிருஷ்ணா, நீ கடவுளின் அம்சமாவாய். இந்த மாபெரும் நாராயணி சேனை போரை வெல்லும் வலிமை பெற்றதாக இருக்கலாம். ஆனால் அந்தப் படைகள் எனக்கு வேண்டாம். நான் வேண்டுவது உன்னைத்தான் கண்ணா!" என்று கூறி கண்ணனின் பாதம் பணிந்தான்.
இதைக் கேட்டதும் துரியோதனன் பெருமூச்சு விட்டான். மனதிற்குள் அர்ஜுனனை நினைத்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டான். "முட்டாள், மடையன் இந்த அர்ஜுனன்! மாபெரும் சேனையை விடுத்துத் தனி மனிதனைத் தேர்வு செய்துள்ளான்" என்று எண்ணிக் கொண்டான். "எனக்கு இப்போதும் மாபெரும் சேனை கிடைத்துவிட்டது. இந்த லட்சக்கணக்கான வீரர்களை வைத்துத் தாராளமாக நான் போரில் வென்றுவிடுவேன்" என்று இறுமாப்பு கொண்டான்.
ஆனால், அதன் பின் நடந்த கதையை உலகம் அறியும். பாண்டவர்களுக்குப் போதுமான படைபலம் இல்லையென்றாலும், இறை சொரூபமான கண்ணன் பாண்டவர்கள் பக்கம் இருந்ததால் இறுதியில் பாண்டவர்களே வென்றனர்.
எங்கே தர்மத்தின் உருவமான கண்ணன் இருக்கிறாரோ, அங்கேதான் வெற்றி கிடைக்கும் என்பதுதான் உண்மையான ஞானம். வெறும் உடல் பலத்தையும் வீரர்களின் எண்ணிக்கையையும் நம்பிப் போரில் பிரவேசித்த துரியோதனனை விட, கடவுளிடம் சரணடைந்த அர்ஜுனனே இறுதியில் வென்றான். நாமும் உலக நியதிகள் மற்றும் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு எதிராக இருந்தாலும், எப்போதும் கடவுளைச் சரணடைய வேண்டும். யார் நம்மைப் கைவிட்டாலும் நாம் நம்பிய ஆன்மீகம் நம்மை கைவிடாது.
சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
- மகாபாரத உபகதைகள்
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் அழித்த தலம்: திருக்கண்டியூர் பிரம்ம கண்டேஸ்வரர் 🙏✨
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
"தன் தலை போனாலும் பரவாயில்லை, தன் ஆணவம் அழிய வேண்டும்" என்று உணர்த்தும் உன்னத தலம்!
தஞ்சாவூருக்கு மிக அருகில் அமைந்துள்ள அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் திருத்தலத்தைப் பற்றி இன்று காண்போம்.
📖 தல வரலாறு: பிரம்மனின் ஆணவம் அடங்கிய கதை
ஒரு காலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் என்பதால், "நானும் சிவனுக்கு நிகரானவனே" என்ற ஆணவம் பிரம்மனுக்கு ஏற்பட்டது.
இந்த ஆணவத்தை அடக்கி, உலகிற்கு உண்மையை உணர்த்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார் (கொய்தார்). பிரம்மனின் 'கண்டத்தை' (கழுத்தை/தலையை) சிவன் நறுக்கிய தலம் என்பதால் இது "திருக்கண்டியூர்" என்று அழைக்கப்படுகிறது.
✨ ஆலயத்தின் சிறப்புகள்:
இறைவன்: ஸ்ரீ பிரம்ம கண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை
அட்டவீரட்ட தலம்: சிவனின் எட்டு வீரச் செயல்கள் நடந்த இடங்களில் இதுவும் ஒன்று.
சாப விமோசனம்: பிரம்மனின் தலை சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டது (பிரம்மஹத்தி தோஷம்). சிவன் இங்குள்ள திருக்கண்டியூர் மற்றும் அருகிலுள்ள திருத்தலங்களில் பிச்சாடனராக வேடமேற்று சாப விமோசனம் பெற்றார் என்பதும் வரலாறு.
🙏 ஏன் இங்கு செல்ல வேண்டும்?
ஆணவம் நீங்க: நம்மிடம் இருக்கும் தேவையற்ற அகந்தையை நீக்கி, மன அமைதி பெற வேண்டி இங்கு வழிபடலாம்.
படைப்பு தோஷம் நீங்க: ஜாதக ரீதியான தோஷங்கள் மற்றும் பிரம்மஹத்தி தோஷங்களுக்கு இது சிறந்த பரிகாரத் தலம்.
அரிய காட்சி: இங்கு பிரம்மாவிற்கு தனி சன்னதி உள்ளது. சரஸ்வதியுடன் அமர்ந்த கோலத்தில் பிரம்மாவை தரிசிப்பது மிகவும் விசேஷம்.
அமைவிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
சிவநாமத்தை போற்றுவோம்! ஆணவம் துறந்து அமைதி பெறுவோம்🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
#கோயில் #தெரிந்து கொள்வோம் *இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசயக் கோயில்*🌷!
பொதுவாக, அனைத்துக் கோயில்களும் அதிகாலையில் நடை திறந்து இரவில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், மதுரையில் உள்ள ஒரு கோயில் இரவில் மட்டுமே திறந்திருக்கும் என்பது அதிசயமான உண்மை.
காலதேவி அம்மன் கோயில் சூரியன் மறைந்ததும் திறக்கப்பட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தப்படுகிறது. இந்தக் கோயில் மதுரை மாவட்டம் சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது. உலகிலேயே இரவு முழுவதும் திறந்திருக்கும் ஒரு கோயில் என்றால் அது இதுதான்.
இந்தக் கோயிலில் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் கூட்டம் மிகுதியாக இருக்கும். பொதுவாக, ஒருவரின் நல்ல மட்டும் கெட்ட நேரங்களை தீர்மானிப்பது அவருடைய ராசி மற்றும் நட்சத்திரங்கள். இந்தக் கோயிலில் 27 நட்சத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறார் இந்த கோயிலின் மூலவர் தெய்வமான கால தேவி அம்மன்.
கோயில் கோபுரத்திலேயே 'நேரமே உலகம்' என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஒருவருடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவருடைய நேரம்தான் வழி வகுக்கிறது என்பதை சொல்கிறது இந்த வாசகம். புராணங்களில் காணக்கூடிய காலராத்திரியைத்தான் இந்தக் கோயிலில் கால தேவியாக வழிபடுகின்றனர். அவருடைய இயக்கத்தில்தான் 14 லோகங்களும் பஞ்சபூதங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் செயல்படுகின்றன என்று நம்புகின்றனர் மக்கள். இந்தக் கோயிலின் கருவறையும் விமானமும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொன்னால் அதற்கான பரிகாரத்தில் மக்கள் இறங்குவார்கள். இந்த கால தேவி அம்மன் கோயிலில் வந்து வழிபாடு செய்தால் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறும் என்பது மக்களின் நம்பிக்கை. கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்ட நேரம் அகன்று, நல்ல நேரம் வரும் என்பது மக்களின் தீராத நம்பிக்கை.🌹
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #🚹உளவியல் சிந்தனை
#பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் வருடம் சித்திரை மாதம் 24ம் நாள் 07-மே-26, வியாழக்கிழமை குருவாரம் நற்
பலன்களை அள்ளி வழங்கும் தேய்பிறை சஷ்டி விரத நாளில் சரவண ஜெனிதன் ,
பன்னிருகையான் பவள நிற செவ்வேள் பார்வதி புத்ரன் பாலசுப்ரமண்யனை நம் வாழ்வில்
பங்கெடுத்து பிரச்சனைகள், ஏற்படுத்தி துன்பங்களை தரும் தீவினைகளை அழித்திட
பரிபூரணமான பக்தியோடு நம்பிக்கையுடன் போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
ஆறு முகங்களைக் கொண்டவரே , சந்தனம் பூசப்பட்ட திருமேனி, அகன்ற மார்புடையவரே , தெய்வீக மயில் வாகனத்தில் வீற்றிருப்பவரே , சிவபெருமானின் புதல்வா , தேவ சேனாபதி, சுப்ரமண்யா உனை சரணடைகிறேன்.
ஷடாநநம் சந்தநலேபிதாங்கம், மஹோரஸம் திவ்யமயூரவாஹநம், ருத்ரஸ்ய ஸூநும் ஸுரலோகநாதம்
ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
ஜ்வலிக்கும் வடிவம் கொண்டவரே, தேவர்களால் வணங்கப்படுபவரே, மயில் மீது அமர்ந்தகுமரனே,
மன்மதனைப் போன்ற அழகான வடிவம் கொண்டவரே சுப்ரமண்யா உனை நான் சரணடைகிறேன்.
ஜாஜ்வல்யமாநம் ஸுரவ்ருந்தவந்த்யம், குமார தாராதட மந்திரஸ்தம், கந்தர்பரூபம் கமநீயகாத்ரம்
ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
பன்னிரு கையனே, பன்னிரு கண்களை கொண்டவரே, வேதங்களின் வடிவமே, சூலம் வாள் ஏந்தியவரே ஆதிசேஷனின் அவதாரமாய், அழகான ரூபம் கொண்டவரே சுப்ரமண்யா உனை நான் சரணடைகிறேன்
த்விஷட்புஜம், த்வாதஸ திவ்யநேத்ரம், த்ரயீதனும் ஸூலமஸீ ததாநம், ஸேஷாவதாரம் கமநீயரூபம்
ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
அசுரர்களை போரில் வெல்பவரே, சிறந்த தேவரே, சக்தி ஆயூதம் ஏந்திய குமாரனே உனை நான் சரணடைகிறேன்
ஸுராரிகோராஹவஸோபமாநம், ஸுரோத்தமம் ஸக்திதரம் குமாரம், ஸுதார ஸக்த்யாயுத ஸோபிஹஸ்தம் ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
வேண்டிய வரங்களை அளிப்பவரே, ஈசனின் புதல்வா, நினைத்ததை அளிக்கும் காமதேனு போன்றவரே, கங்கையில் பிறந்தவரே, யாவர்க்கும் நன்மைசெய்பவரே சுப்ரமண்யா உன்னை நான் சரணடைகிறேன்
இஷ்டார்த்த ஸித்தீப்ரதம்,ஈச புத்ரம்,இஷ்டாந்நதம் பூஸுரகாமதேநும் ,கங்கோத்பவம் ஸர்வஜநாநுகூலம் ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே
🙏🦚🐓
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉








