RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் லஷ்மி நரசிம்ஹாய நமஹ_* கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டிய பகவான் நரசிம்மர்- விளக்கும் எளிய கதை... திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் பால் போன்றவை. மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும். எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடிக்க விரும்பும் நாம், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை! மேலும், நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர். மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா? வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா? இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர். சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார். பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியா காலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார். தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார். வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார். நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினாலும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம். தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர். சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார். இப்படிக் கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்! சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார். “ஸந்தாத்ரே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும்.🙏🌹
ஆன்மீக - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ்*பாரத போரில்* துரியோதனனின் உயிர் பிரியாமல்* இருந்ததற்கான காரணம் தெரியுமா?*🌹 பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் தங்களது உயிரை விட்டனர். கௌரவர் படைக்கு அன்று துரியோதனன் தலைமை ஏற்று நடத்திச் சென்றான். அன்றைய போரில் பகவான் கிருஷ்ணரின் சைகையின்படி துரியோதனனின் தொடையில் அடித்து அவனை சாய்த்தான் பீமன். துரியோதனனை உயிர் போகும்படி பீமன் அடித்தும் அவனது உயிர் அவனது உடலை விட்டுப் பிரியாமல் இருந்தது. இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் தனது ஞான சக்தியால் உணர்ந்து கொண்டார். அதன்படி துரியோதனனின் மனதில் இருந்த மூன்று கேள்விகள் அவனது உயிரை அவன் உடலை விட்டுப் பிரியாமல் செய்திருந்தன. அந்த மூன்று கேள்விகளை துரியோதனன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்க, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த சாதுர்ய பதில்களை இந்தப் பதிவில் காண்போம். கேள்வி 1: அஸ்தினாபுரத்தை சுற்றிலும் மதில்களை எழுப்பி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? பதில்: நீங்கள் அஸ்தினாபுரத்தை சுற்றிலும் மதில்களை எழுப்பி இருந்தால் நான் நகுலனை அனுப்பி அந்தக் கோட்டை சுவர்களை தரைமட்டமாக்கச் செய்திருப்பேன். ஏனென்றால், நகுலன் அளவிற்கு வேகமாகக் குதிரையைச் செலுத்தக்கூடியவர் யாருமில்லை. கேள்வி 2: துரோணாச்சாரியாரின் மறைவிற்குப் பின்னால் அசுவத்தாமனை நாங்கள் தளபதியாக்கி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? பதில்: நீங்கள் அசுவத்தாமனைச் சேனாதிபதி ஆக்கிருந்தால் நான் தருமனை கோபப்படச் செய்திருப்பேன். ஏனென்றால், தருமனின் கோபத்திற்கு முன்னால் எப்பேர்ப்பட்ட மகாவீரனும் எரிந்து சாம்பலாகி விடுவான். கேள்வி 3: நாங்கள் விதுரரை மகாபாரதப் போரில் கலந்து கொள்ளச் செய்திருந்தால் நீங்கள் என்ன செய்திருபீர்கள்? பதில்: ஒருவேளை விதுரர் உங்களுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் கலந்திருந்தால் நானே அவருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் இறங்கி இருப்பேன் என்று பகவான் கிருஷ்ணர் கூறினார். இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை கிடைத்த பின்னர் துரியோதனனின் மனம் சாந்தி அடைந்து அவன் உயிர் அவனது உடலை விட்டுப் பிரிந்தது.🙏🌹
ஆன்மீக - tll tll - ShareChat
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *இன்று* *கூர்ம* *ஜெயந்தி* 🌹 🪷 கூர்ம ஜயந்தி நிகழ்வை முன்னிட்டு 🪷 வைஷ்ணவ ஆழ்வார்கள் தங்கள் திவ்ய பிரபந்தம் பாசுரங்களில், விஷ்ணுமூர்த்தியின் தசாவதாரங்களை, குறிப்பாக கூர்ம (ஆமை) அவதாரத்தை மிகுந்த பக்தியுடன் புகழ்ந்துள்ளனர். பாலசமுத்திர மந்தனம் நடைபெற்றபோது மந்தர மலையைத் தாங்கி, தேவர்களை காத்த அந்த கூர்ம அவதாரத்தை ஆழ்வார்கள் அழகாக விவரித்துள்ளனர். அவற்றில் சில முக்கிய குறிப்புகள்: 🌻 பொய்கை ஆழ்வார் (முதல் ஆழ்வார்): முதல் திருவந்தாதியில், கூர்ம அவதாரத்தின் சிறப்பை அவர் குறிப்பிடுகிறார். பாலசமுத்திர மந்தனத்தின் போது மந்தர மலையின் பாரத்தைத் தாங்குவதற்காக விஷ்ணு ஆமை வடிவம் எடுத்த மகிமையை அவர் புகழ்கிறார். 🌻 திருமங்கை ஆழ்வார்: பெரிய திருமொழியில், கூர்ம அவதாரத்தில் மந்தர மலையைத் தாங்கிய இறைவனின் பாதுகாப்புத் தன்மையையும், தெய்வீக ரூபங்களையும் அவர் வர்ணிக்கிறார். 🌻 நம்மாழ்வார்: திருவாய்மொழியில், விஷ்ணுவின் பல அவதாரங்களைப் பற்றி கூறும்போது, உலகில் சமநிலையை நிலைநிறுத்திய கூர்ம அவதாரத்தை அவர் வணங்குகிறார். 🌻 கோதா தேவி (ஆண்டாள்): கோதா தேவி தனது நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை பாசுரங்களில் விஷ்ணுவின் தசாவதாரங்களை அழகாகப் புகழ்ந்துள்ளார். இதில் கூர்ம அவதாரத்திற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன. 🪷 பாலசமுத்திர மந்தனம் (க்ஷீர சாகர மந்தனம்): தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற பாலசமுத்திரத்தை மந்தனம் செய்தபோது, மந்தர மலை கடலில் மூழ்கத் தொடங்கியது. அப்போது விஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து, அந்த மலையை தனது முதுகில் தாங்கினார். 🪷 பாசுரங்களில் உள்ள குறிப்புகள்: நாச்சியார் திருமொழி: வாரணம் ஆயிரம் போன்ற பகுதிகளில், கோதா தேவி இந்த தெய்வீக செயலைப் புகழ்ந்து பாடுகிறார். சமுத்திர மந்தனம் மற்றும் மகாலட்சுமி வெளிப்பட்ட நிகழ்வை கவிதை நயத்துடன் விவரிக்கிறார். திருப்பாவை: சில பாசுரங்களில், கடலில் உறங்கும் இறைவனையும், மந்தன நிகழ்வில் அவர் செய்த உதவியையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன (எ.கா., “ஆழி மழைக் கண்ணா” போன்ற பாசுரங்கள்). 🪷 கூர்ம அவதாரத்தின் சிறப்புகள் (பாசுரங்களில்): அமிர்தத்தைப் பெற சமுத்திரம் மந்தனம் செய்யப்பட்டபோது, மந்தர மலை மூழ்காமல் இருக்க, விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து அதை தனது முதுகில் தாங்கியதை ஆழ்வார்கள் விரிவாகப் புகழ்கின்றனர். 🪷🪷🪷🪷🪷
ஆன்மீக - و రామానుజ సంతోష్ మహేంద و రామానుజ సంతోష్ మహేంద - ShareChat
#ஆன்மீக #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
ஆன்மீக - ஆலயத்துக்குசெல்வதும் ஆண்டவனைதரிசிப்பதும் Arch 40 9.> Arct ஆன்மீகம் அல்லஃ அடுத்தவருக்கு LaXman தீங்குசெய்யாமல் nane பிறரை LaXman பபிழைக்காமல் ஏமாற்றிப் Chi எல்லாஉயிர்களிடமும் அன்பு காட்டி Archana; chal அமைதியோடு வாழும் [06o வாழ்க்கைதான் உண்மையானஅன்மீகம் ! 0 ஆலயத்துக்குசெல்வதும் ஆண்டவனைதரிசிப்பதும் Arch 40 9.> Arct ஆன்மீகம் அல்லஃ அடுத்தவருக்கு LaXman தீங்குசெய்யாமல் nane பிறரை LaXman பபிழைக்காமல் ஏமாற்றிப் Chi எல்லாஉயிர்களிடமும் அன்பு காட்டி Archana; chal அமைதியோடு வாழும் [06o வாழ்க்கைதான் உண்மையானஅன்மீகம் ! 0 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - 6 (5 4600160)L_W வாழ்க்கை ஒரு பெண்ணிடம் தான் உள்ளது. ೧೧ ೧ %60[/6. ( அந்த வாழ்க்கை அந்த ஆண் தேர்ந்தெடுக்கும் பெண்ணை பொறுத்தே உள்ளது. (  6 (5 4600160)L_W வாழ்க்கை ஒரு பெண்ணிடம் தான் உள்ளது. ೧೧ ೧ %60[/6. ( அந்த வாழ்க்கை அந்த ஆண் தேர்ந்தெடுக்கும் பெண்ணை பொறுத்தே உள்ளது. ( - ShareChat
#ஆன்மீக #🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள்
ஆன்மீக - புண்ணியமே உனக்குதுணை சேமித்துவைத்த செல்வம் பிறருக்கே போகும் அழகான உடல் தீயில் கரையும் எலும்புகள் அனைத்தும் கங்கையில் கலையும் மகன் செய்யும் திதி உணவு காகங்களுக்கு போகும் நீவிரும்பி பயன்படுத்திய பொருட்கள் யாருக்காக? ஆனால் நீசெய்ததானம் தர்மத்தின் புண்ணியபலன் மட்டுமே உனக்கே சொந்தம் இதை அறிந்து அனைவரும் வாழ்ந்தால் உலகமே அமைதியாகும் புண்ணியமே உனக்குதுணை சேமித்துவைத்த செல்வம் பிறருக்கே போகும் அழகான உடல் தீயில் கரையும் எலும்புகள் அனைத்தும் கங்கையில் கலையும் மகன் செய்யும் திதி உணவு காகங்களுக்கு போகும் நீவிரும்பி பயன்படுத்திய பொருட்கள் யாருக்காக? ஆனால் நீசெய்ததானம் தர்மத்தின் புண்ணியபலன் மட்டுமே உனக்கே சொந்தம் இதை அறிந்து அனைவரும் வாழ்ந்தால் உலகமே அமைதியாகும் - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - உங்கள் சப்தம் தரையில் கிசுகிசுக்கலாம் ஆனால் அது வானத்தில் இடி முழக்கமாய் கேட்கிறது அதுதான் சுஜூத்தின் வலிமை. உங்கள் சப்தம் தரையில் கிசுகிசுக்கலாம் ஆனால் அது வானத்தில் இடி முழக்கமாய் கேட்கிறது அதுதான் சுஜூத்தின் வலிமை. - ShareChat
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
🤣 லொள்ளு - ShareChat
00:18
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *கருமாதி*
ஆன்மீக - ShareChat
00:08