
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் குருவோ அவர் சிவன்.*
எவர் சிவனோ அவர் ஜகத்குரு.*
குருவைக் காட்டிலும் அதிகமான
தத்துவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான
தவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான
ஞானம் இல்லை.
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை.
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை.
குருவிற்கு சமமான உயர்வுமில்லை.
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்.
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி.
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்.
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்.
முக்திக்கு மூலம் குருவின் கிருபை.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!
#பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் #முருகன்* 🦚
🌿🌹*திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும்*. சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி *அதை விக்ரகம் மீது முழுதாக தடவி* பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும் போது நிறைய தண்ணீர் இருக்கும். சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
🌿🌹வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பெருமான் கந்தவேல் திருச்செந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான்.அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.
🌿🌹இறைவனுக்கு அளிக்கப் படும் சோடக உபகாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன். அங்கிருந்த பக்தர்களிடம்' உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள் என்று கேலி செய்தார்.
🌿🌹அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரித்துக் கொண்டு ஆம் எங்கள் சண்முகருக்கு வியர்க்கும் என்று கூறி முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.
🌿🌹வீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில் ஆம் அவர் மனைவி திடீரென கடுமையான வயிற்று வலியினால் துடித்தார். சூலை நோய் என்பார்கள் இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும். முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்து கொண்டார். உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் என்று கேட்டார்.
🌿🌹அவர் கூறிய உபாயத்தின் படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று முருகப் பெருமானே என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்க முடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கி தருகிறேன். என்று மனமுருக வேண்டிக்கொள்ள எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனி பெருங்கருணையினால் லுசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயதக்க வகையில் உடனடியாக நீக்கியது.
🌿🌹முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்து லுசிங்டன் பிரபு சொண்ணபடியே வெள்ளிப் பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் லூசிங்டன் 1803 என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் லூசிங்டன் 1803 என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் மாநகரின்* மையப்பகுதியான* உக்கடத்தில், *பழமையும் ஆன்மீகப் பெருமையும் வாய்ந்த அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள்* திருக்கோயில் ஒரு மிகச்சிறந்த வழிபாட்டுத் தலமாகும். இக்கோயிலின் சிறப்பம்சங்களை இந்தப் பதிவில் காண்போம்.
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் - உக்கடம், கோவை 🛕✨
அபூர்வமான இரட்டை சொர்க்க வாசல்கள்! 🚪🙌
பொதுவாக வைணவத் தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு நோக்கிய ஒரு சொர்க்க வாசல் மட்டுமே திறக்கப்படும். ஆனால், இக்கோயிலின் மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், இங்கு தெற்கு மற்றும் வடக்கு என இரண்டு திசைகளிலும் சொர்க்க வாசல்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு கொண்ட கோயில்கள் மிகவும் அரிதானவை.
சோழர் காலத்துப் பொக்கிஷம் 👑📜
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் மீது தீராத பக்தி கொண்ட சோழ மன்னன் ஒருவன், கொங்கு நாட்டுப் பகுதிக்கு வந்தபோது அங்கேயே பெருமாளைத் தரிசிக்க விரும்பி, காஞ்சி வரதராஜரின் நினைவாக இந்தக் கோயிலை எழுப்பியதாக வரலாறு கூறுகிறது.
கோயிலின் தனித்துவமான சிறப்புகள்:
இரட்டை நுழைவு வாயில்கள்: சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு உத்ராயணம் மற்றும் தட்சிணாயணம் என இரண்டு தனித்தனி நுழைவு வாயில்கள் இங்கு உள்ளன.
லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு: கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதியான லட்சுமி ஹயக்ரீவர் இங்கு பஞ்சலோக மூர்த்தியாகத் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இவரை வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
மூலவர் தரிசனம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நின்ற கோலத்தில் கரிவரதராஜப் பெருமாள் மிக அழகாகக் காட்சியளிக்கிறார். கூடவே பூமி நாயகி மற்றும் நீளா நாயகி தாயார்களையும் இங்கு தரிசிக்கலாம்.
வழிபாட்டு பலன்கள்: 🌸
கல்வி மற்றும் கலைகளில் மேன்மை அடைய ஹயக்ரீவர் வழிபாடு.
மன அமைதி மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் பெருக கரிவரதராஜப் பெருமாள் வழிபாடு.
அனுமன் சன்னதியில் வேண்டிக்கொள்ள தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.
📍 அமைவிடம்: உக்கடம் பேருந்து நிலையம் அருகில், லட்சுமி நரசிம்மர் கோயில் பின்புறம், கோயம்புத்தூர்.
⏰ தரிசன நேரம்:
காலை: 06:00 AM - 10:00 AM
மாலை: 05:00 PM - 08:00 PM
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉










