#⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள்
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கிளைமேக்ஸ் காட்சியில முழுமை பெற மாதிரி ஒரு வசனம் இருக்கும் ஆனா இந்த படத்திலும் இந்த காட்சி இந்த படத்தோட ஆணி வேரா இருக்கும்,. ❣️
அதுவரைக்கும் சசிகுமார் பத்தி தெரியாத அந்த ஆளு கடைசில ஊருக்கு போகும்போது அவருடைய பெயரை கேட்பார்..!!
அப்துல் மாலிக் ❣️என்று சொல்லும்போது அவர் கண்ணில் தண்ணி வந்துட்டு சசிகுமார் கட்டிபிடிச்சதுக்கு அப்புறம் பேக்ரவுண்ட்ல ஒரு சாங் ஓடும் பாருங்க
நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும் அன்புடைய தோட்டம் ஆகும் எல்லா ஊருமே ❣️
Movie peaked here - அயோத்தி ❣️
ரூபன் 🩷🩷🩷
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖love feel🌹
தீபாவளி ❣️
உங்கள உயிருக்குயிரா காதலிச்சுட்டு கடைசில 'யார் நீ?' அப்படின்னு கேட்டுருக்காங்களா? பில்லு ஃபேஸ் பண்ண அதே சிச்சுவேஷன்...!!
சுசிக்கு நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் எல்லாமே மறந்துருச்சுன்னு சொல்றப்போ, பில்லு டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணுவான். டாக்டர் சொல்லுவாரு, 'ஒருவேளை மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் அவளுக்கு ஞாபகம் வந்துட்டா, இப்ப நடந்துட்டு இருக்க விஷயங்கள் ஏன் உன்னைக் கூட அவ மறக்க நிறைய வாய்ப்பு இருக்கு' அப்படின்னு.
அப்போ சுசி சொல்லுவா, 'நானே உன்ன மறந்துருன்னு தெரியலன்னு சொன்னாலும், கேவலமா திட்டி விரட்டினாலும், கழுத்தை புடிச்சு வெளிய தள்ளினாலும் என்னை விட்டுற மாட்டல்ல... நீ இல்லன்னா நான் செத்துருவேன் பில்லு' அப்படின்னு.
ஒரு ஸ்டேஜ்ல அவளுக்கு எல்லாமே மறந்துரும். அப்போ பில்லு சுசி கிட்ட போய் நடந்தது எல்லாமே சொல்லும்போது, அவ 'எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல, தயவு செஞ்சு நீ போயிரு' அப்படின்னு சொல்லுவா.
அத்தனை அடியும் வாங்கிட்டு பில்லு வாயிலிருந்து வர ஒரே ஒரு வார்த்தை 'சுசி'யா மட்டும்தான் இருக்கும்.
லிப்ட்ல சுசியோட புடவை ஃபுல்லா மாட்டிரும், அப்போ பில்லுவோட ஷர்ட்ட சுசிக்கு கொடுக்கும்போது அந்த ஷர்ட்ட மோந்து பாப்பா... பில்லுவ பாப்பா... பில்லுவ ஞாபகம் இருக்காது, ஆனா அந்த வாசனை அவளுக்கு எங்கயோ பரிச்சயப்பட்ட வாசனை மாதிரி தான் இருக்கும்...!
ஒரு பொண்ண லவ் பண்ண வைக்கிறதுக்காக எவ்வளவோ எஃபோர்ட் போடுறவங்கள பாத்திருப்போம். ஆனா இங்க 'நீ என்னதான் லவ் பண்ற' அப்படின்னு நம்ப வைக்கிறதுக்காக பில்லு போட்ட எஃபோர்ட்ஸ் எல்லாமே கடைசில கண்கலங்க வச்சிரும்.
ஆனா இது எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய் அவங்க அப்பா கையை உதறி விட்டுட்டு பில்லு கிட்ட போய் 'ஐ லவ் யூ பில்லு' அப்படின்னு சுசி சொல்லும்போது, பில்லு ரொம்ப ஆசையா 'ஞாபகம் வந்துருச்சா சுசி?' அப்படின்னு கேப்பான். அதுக்கு அவ சொல்லுவா, 'சத்தியமா எனக்கு ஞாபகம் வரல ஆனா எனக்காக நீ உயிரே கொடுக்கிற அளவுக்கு இவ்வளவு விஷயங்கள் பண்ணிருக்க, என்னால இத பாத்துட்டு இருக்க முடியல'ன்னு ரெண்டு பேரும் சேர்ற அந்த ஒரு மொமெண்ட்...
ஞாபகம் வரலைன்னாலும், அன்னைக்கும் பில்லுவ லவ் பண்ணா... இப்பயும் பில்லுவ லவ் பண்றா. சோ எல்லாத்தையும் மாத்தக்கூடிய பவர் இந்த லவ்வுக்கு இருக்கு அப்படின்றத பில்லு ப்ரூவ் பண்ணிருப்பான்."❣️
யுவன் இசையில் ஒவ்வொரு பாடலும் வேற லெவல்ல நம்மளை பீல் பண்ணவைக்கும்❣️
ரூபன் 🩷🩷🩷
#😨பிச்சைக்கார பெண்ணை கொன்று சீரழித்த கொடூரன்😱 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
என்னத்த கவித எழுதி
என்னத்த போங்க
இந்தப் பக்கம் திரும்புனா
பட்டப் பகல்ல
அம்புட்டு பேரு பாக்க
வெட்டிக் கொல்லுறாங்க...
அந்தப் பக்கம் திரும்புனா
ஆடை அவுக்கிறது
மார்பை தொடறதெல்லாம்
பாலியல் குற்றத்துல வராது
பாலியல் சீண்டல்னு
அளந்து வுடுறாங்க...
மாட்டு மூத்திரத்தை குடி
ஹிந்திய படினு
அது ஒருபக்கம்
நாகரீகம் மறந்த
சமூக மாற்றத்தை நோக்கி
போன்னு புடிச்சி தள்ளுறாங்க
பள்ளிக்கூடம்
படிக்கிற பசங்க எல்லாம்
கஞ்சா அடிக்கிற அளவு
மலிவா கிடைக்கிது
சோத்துக்கு தான்
நட்டுக் குத்தலா
நாள் முழுக்க பாடு படனும் போல
வீட்ட விட்டுப் போனா
புள்ள திரும்பி
வந்து சேருமான்ற பயத்தை
இந்த நூற்றாண்டுலையும்
எந்த அரசும் போக்கல..
உழைப்புக்கு ஏத்த ஊதியம் இல்ல
நல்லவனுக்கு இங்க
மதிப்பும் இல்ல
குடிக்கிறதும் கூத்தடிக்கிறதும்
ஹீரோயிசம்னு
சினிமாக்காரங்க
வலுவா காட்டுறாங்க...
பெண்ணியம்னு சொல்லீட்டு
என்னத்தையெல்லாமோ
அவுக பத்திரமா வீட்டுக்குள்ள
இருந்துக்கிட்டு
ரீல்ஸா எடுத்துப் போடுறாங்க
பாத்துட்டு வெறி ஏறிப் போயி
நம்ம அப்பாவி பெண் குழந்தைங்கள
நாசம் பண்றாங்க...
வாங்கற விலைக்கு
உணவுப் பொருள் இல்ல
விக்குறவனுக்கு கிடைக்கிற லாபம்
வெளைய வச்சவனுக்கு
கிடைக்கிறதில்ல...
நாடு நாசமாப் போகுது
போகட்டும் நாமளும்
சேந்து நாசமாப் போவோம்
கவித எழுதுறேன்னு
கண்டதையும் எழுதி
மனச ஆத்திக்கிடுவோம்
நமக்கு வேற வழி என்ன இருக்கு???
ரூபன் 🙏🙏🙏
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥
அழுகை என்பது அது வெளிப்படும் இடத்தைப் பொறுத்து அதற்கான மதிப்பை பெறுகிறது...,
ஆனால்...,
எங்கும் வெளிப்படுத்த இயலாமல் தனி அறைக்குள் நான் விடும் தீராத கண்ணீரின் மதிப்பை யார் அறிவார்...,
நான் கொண்ட மாறாத காதலின் வெளிப்பாடு தான் இந்த தீராத அழுகை என்பதை யார் உணர்வார் உன்னைத் தவிர...,
புரிந்துகொண்டாயா என்னை உன்னில் உணர்ந்தாயா சொல்லடி ......!
ரூபன் 💔💔💔
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥
ஒரு கவிதை என்ன செய்யுமென்று
தானே கேட்கிறீர்கள் ..
ஆம் யாருமே இல்லையென்றெண்ணுபவனுக்கு ஒரு ஆறுதலாயிருக்கும்..
தனிமையில் தேநீர் அருந்திக் கொண்டிருப்பவனுக்கு
துணையாய் இருக்கும்..
சக மனிதனை நம்பி ஏமாந்து
நொந்து கிடப்பவனை கரம் கொடுத்து
தூக்கி விடும் ..
வாழவே முடியாதென்று
தற்கொலைக்கு புறபட்டவனை
தடுத்து வாழவைக்கும்..
தோல்வியின் விளிம்பில்
துவண்டு கிடப்பனை எழுப்பி
தன்னம்பிக்கை கொடுக்கும்..
ஒரு நல்ல கவிதை சக மனிதனின்
ஆறுதலை விட அதிகம்
ஆற்றுப்படுத்தும்..
ஒரு கவிதை இத்தனையும்
செய்யும்..
Ruban ❤️❤️❤️
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥
விலகி செல்பவரை விட்டுவிடுங்கள்...
வலிக்கதான் செய்யும்... ஆனால்..
இன்னமும் உடனிருந்து ஒருநாள் விருப்பமே இல்லாமல் தான் இவ்வளவு நாட்கள் இருந்தேன் என சொல்லும் பொழுது....
வரும் வலி அதைவிடக் கொடுமையாய் இருக்கும் ..
அதனால் விலக நினைக்கும் பொழுதே வழியனுப்பி விடுங்கள்...
ரூபன் 💔💔💔
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ #💑கணவன் மனைவி காதல்💞
உங்களுக்கு தேவையான ஒன்றை பற்றிப் பலமுறை விவாதித்தும், எதிர்முனையில் எந்த மாற்றமும் இல்லாதபோது, இனி நான் இல்லை என்று முடிவு எடுக்கும் அந்த நொடியில் தான் வாழ்க்கை மேம்படத் தொடங்குகிறது...
யாரோ ஒருவர் தொடர்ந்து உங்களை உடைத்துக்கொண்டே இருக்கும் போது , நாம் சரி செய்ய வேண்டும் என்கிற அந்தப் பதற்றம் நம்மை விட்டு நீங்கும் அந்தத் தருணம் மிகவும் அமைதியானது, ஐந்தாவது முறை பேசிய அதே விஷயத்தை, ஆறாவது முறை பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று தோன்றும் போது வலிகளுடன் கலந்து ஒரு மாற்றம் நிகழ்கிறது...
அது நீங்கள் அவர்களை வெறுத்து விட்டீர்கள் என்றில்லை மாறாக அவர்களால் நீங்கள் வெறுக்கப்பட்டீர்கள் என்பதால்,
அல்லது உங்களுக்கு அன்பு இல்லை என்பதாலும் அல்ல, மாறாக, கசப்பான அந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்,
அவர்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ, அதைத்தான் செய்வார்கள்...
கசப்பான உண்மை என்னவென்றால்,
யாரும் இந்த உண்மையை எதிர்கொள்ள விரும்புவதில்லை. நீங்கள் முதல் முறை சொன்னபோதே அவர்கள் அதைக் கேட்டார்கள், உங்கள் முகம் வாடியதைக் கவனித்தார்கள், அவர்களின் செயலால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் கண்டும், அந்த இழப்பு அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை...
பலமுறை பேசியும் ஒருவரது நடத்தை மாறவில்லை என்றால், அது மறதியோ அல்லது குழப்பமோ அல்ல, அது ஒரு முடிவு, உங்கள் நிம்மதியை விட அவர்களின் சந்தோசமே முக்கியம் என்று அவர்கள் எடுத்த தெளிவான முடிவு...
இதை நீங்கள் உணர்ந்துவிட்டால், எல்லாம் மாறிவிடும்,
அவர்களைப் புரிய வைக்க வேண்டும் என்று இனி நீங்கள் வார்த்தைகளைத் தேட மாட்டீர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே எல்லாம் புரியும், ஆனால் உங்கள் கருத்தை ஏற்க அவர்களுக்கு விருப்பமில்லை...
அவர்களுக்குப் புரியும் வகையில் உங்கள் உண்மைகளை மென்மையாக்க மாட்டீர்கள்...
அவர்கள் பெற மறுக்கும் தெளிவுக்காக இனி நீங்கள் பொறுப்பேற்க மாட்டீர்கள்...
நீங்கள் மெதுவாக விலகிவிடுவீர்கள். எந்த அறிவிப்போ, விளக்கமோ இன்றி அமைதியாக ஒதுங்குவீர்கள், உங்கள் வார்த்தைகளைத் தொடர்ந்து அலட்சியம் செய்தவர்களுக்கு, உங்கள் கடைசி விளக்கத்தைப் தெரிந்துக்கொள்ள அவர்களுக்கு நேரமும், விருப்பமும் இல்லை...
உங்கள் மதிப்பைக் கண்டறிந்து கொள்ளுங்கள்,
உங்கள் தேவைகள் ஒருவருக்கு வசதியாக இல்லை என்பதற்காக, அதை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் மன அமைதி விவாதத்திற்குரியது அல்ல..
ஒருவர் உங்களைத் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறார் என்றால், அதுவே அவர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த பதில், அந்தப் பதிலுக்கு மேல் பேசுவதற்கு எதுவுமே இல்லை தானே சிலருக்கு இதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இருந்தாலும் பிடிவாதம் ஒன்று வெளியே வர விடாது...
யாராவது அவர்கள் யார் என்பதை மீண்டும் மீண்டும் காட்டினால், அதை அப்படியே நம்புங்கள், அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள்...
உதாசீனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்... ✍️
ரூபன் ❤️❤️❤️❤️
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥
"உறவுகள் முறியலாம், மனுஷங்க நம்மளை விட்டுப் போகலாம்.
ஆனா அவங்க விட்டுட்டுப் போன அந்த நினைவுகள் இருக்கே...
அது என்னைக்குமே நம்மளை விட்டுப் போகாது.
காலம் மாறலாம், புதுப் புது ஆளுங்க நம்ம வாழ்க்கையில வரலாம்,
ஆனா சில நினைவுகள்
மட்டும் அழியாத மை மாதிரி
மனசுக்குள்ள அப்படியே தங்கிடும்.
ஒரு காலத்துல ஒன்னா நடந்த தூரம், பேசுன பேச்சு, சிரிச்ச சிரிப்பு...
இதெல்லாம் இன்னைக்கு வெறும் நிழலா இருக்கலாம்.
ஆனா அந்த நிழலைத் தேடிப் போகும்போது தான் புரியும்,
நாம எவ்வளவு தூரம் அந்தத் தொலைஞ்சு போன உறவை இன்னும் சுமந்துட்டு இருக்கோம்னு.
சில நேரத்துல அது சந்தோஷத்தைத் தரும்,
ஆனா பல நேரத்துல
ஆறாத வலியத்தான் கொடுக்கும்.
உண்மையச் சொல்லப்போனா,
நாம கடந்து வந்த பாதைக்கு அந்த நினைவுகள் தான் சாட்சி.
சில சமயம் சிரிக்க வைக்கும், சில சமயம் அழ வைக்கும். ஆனா எல்லாத்தையும் தாண்டி, வாழ்க்கையை எப்படி வாழணும்னு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது இந்த நினைவுகள் தான்..
நினைவுகள் ஒரு ஆறுதல்,
ஆனா அதே சமயம் அது ஒரு பெரிய வேதனை. நம்மகிட்ட இருந்து பிரிஞ்சு போனவங்க விட்டுட்டுப் போன ஒரே சொத்து இதுதான்...
அது நம்ம மனசுல ஒரு அழியாத ஓவியமா எப்பவும் இருக்கும்! 🕯️💔"
ரூபன் ❤️❤️❤️❤️
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💑கணவன் மனைவி காதல்💞
உங்கள் துணை ஒருவரைப் பற்றி
"இந்த உறவு உனக்கு வேண்டாம், என்று சொன்னால், அதை வெறும் சொல்லாகப் பார்க்காதீர்கள், அது உங்கள் உறவைக் காக்க அவர் விடுக்கும் அபயக்குரல்...
உங்களுக்குச் சரியாகத் தோன்றும் ஒரு நட்பு அல்லது உறவு, உங்கள் துணையின் மனதில் ஏதோ ஒரு ரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு ஆழமான காதலில், உங்கள் துணையின் மனநிம்மதியை விட உங்களுக்கு வேறு எதுவும் மேலானது அல்ல...
நீங்கள் இருவரும் ஒரு அழகான, சரியான காதலை வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஏதோ ஒரு #சைத்தான் நண்பன் என்ற பெயரிலோ அல்லது உறவு என்ற வேடத்திலோ உங்களுக்குள் நுழையக்கூடும்...
அவர் வெறும் நண்பர்தானே,
இதில் என்ன தவறு இருக்கிறது,
என்று நீங்கள் ஆயிரம் நியாயங்கள் பேசலாம். ஆனால், அந்த நபர் உங்கள் துணைக்கு விருப்பமானவர் இல்லை என்றால், அதற்காக உங்கள் துணையை நோகடிக்காதீர்கள்...
அவருடன் சண்டை போட்டு, அவரை மனரீதியாகக் காயப்படுத்தி,
எனக்கு அந்த நட்புதான் வேண்டும், அந்த உறவுதான் முக்கியம், என்று பிடிவாதம் பிடித்து உங்கள் உயிரான துணையைப் பிரியாதீர்கள்...
இறுதியில், அந்த இடையில் வந்த உறவு மெல்ல மெல்ல நச்சாக மாறி, உங்களை உங்கள் துணையிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிடும். ஒரு அந்நியருக்காக உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் வரப்போகும் துணையின் மனதை உடைப்பது தற்கொலைக்குச் சமம்...
மீட்க முடியாத இழப்பும், ஆறாத வடுவாக மாறும்.
ஒருமுறை நம்பிக்கை உடைந்துவிட்டால், அதன் பிறகு நீங்கள் காலடியில் விழுந்து கதறினாலும், ரத்தம் சொட்டச் சொட்ட அழுதாலும், ஏன் உங்கள் உயிரையே மாய்த்துக்கொண்டாலும் கூட, இழந்த அந்தப் பழைய காதலையோ, அந்தத் துணையின் நம்பிக்கையையோ உங்களால் மீட்டெடுக்க முடியாது...
காயப்பட்ட இதயம் ஒரு கல்லாக மாறிவிடும். நீங்கள் எத்தனை வருடங்கள் போராடினாலும், எத்தனை தூது அனுப்பினாலும் அவர் உங்களை மன்னிக்கவும் மாட்டார், மீண்டும் அந்தப் பழைய இடத்தைத் தரவும் மாட்டார். காலங்காலமாகச் சேர்த்து வைத்த அன்பு, ஒரே ஒரு தவறான பிடிவாதத்தால் சாம்பலாகிவிடும்...
இருண்டு போகும் வாழ்க்கயின் வலியும் வேதனையும்
துணையை இழந்த பிறகுதான் நரக வாழ்க்கை தொடங்கும். தற்காலிகமான ஒரு உறவுக்காக உங்கள் #பொக்கிஷத்தை இழந்த அந்த நிமிடம் முதல் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் மறைந்துவிடும்...
தூக்கமில்லாத இரவுகளாக தலையணை நனையும் அளவுக்குக் கண்ணீர் விட்டாலும், உங்கள் துணையின் மடியில் கிடைத்த அந்த அமைதி மீண்டும் கிடைக்காது...
மனச்சோர்வும் தனிமையும் உங்களை நீங்களே அழித்து கொல்லு(ள்ளு)ம் அளவிற்கு சுற்றிலும் ஆயிரம் பேர் இருந்தாலும், உங்கள் துணையின் அந்த ஒரு இல்லாமை உங்களைத் தனிமைச் சிறையில் தள்ளும்...
உணவு இல்லாது,எதை உண்டாலும் இறங்காது, எதைப் பார்த்தாலும் அவர் நினைவே வந்து வாட்டும்...
முடிவில்லாத மன உழைச்சலுக்குள் உங்களை தள்ளும்,
அன்று அவர் பேச்சைக் கேட்டிருக்கலாமே என்ற குற்ற உணர்வு உங்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்...
வாழ்க்கையே ஒரு இருண்ட குகையாக மாறிவிடும். தனிமையும், வெறுமையும் உங்களைச் சூழ்ந்து, நீங்கள் வாழும் ஒவ்வொரு நொடியும் ஒரு மரண வேதனையைத் தரும்...
உங்கள் உறவை நேசியுங்கள், கொண்டாடுங்கள், முன்னுரிமை கொடுங்கள், இடையில் வந்தவர்கள் இடையில் போய்விடுவார்கள். ஆனால், கடைசி மூச்சு வரை கை கோர்த்து நிற்கப்போவது உங்கள் துணை மட்டுமே...
துணையின் உள்ளுணர்வை நம்புங்கள், உங்கள் துணை ஒருவரைப் பற்றி எச்சரிக்கிறார் என்றால், அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அதைச் சந்தேகமாகப் பார்க்காமல் அக்கறையாகப் பாருங்கள்...
பிடிவாதத்தைத் தவிருங்கள், ஒரு அந்நியருக்காக உங்கள் துணையை நோகடிப்பது, உங்கள உறவை நீங்களே தீ வைப்பதற்குச் சமம்...
இருக்கும் போதே பற்றிக்கொள்ளுங்கள்
யாரோ ஒரு அறிமுகமில்லாத அல்லது தற்காலிகமான உறவுக்காக, உங்கள் வாழ்வின் #பொக்கிஷமான அந்த உறவை இழந்துவிட்டு, இறுதி மூச்சு வரை நிம்மதி இழந்து நரக வாழ்க்கை வாழாதீர்கள்...
இழந்த பிறகு அழுவதில் பயமில்லை, இருக்கும் போதே அந்த அன்பைப் பற்றிக்கொள்ளுங்கள். அந்த இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்...
துணையை இழந்துவிட்டு இருளில் தவிப்பதை விட, துணையின் சொல்லுக்கு மதிப்பளித்து ஒளியோடு வாழ்வதே புத்திசாலித்தனம்...
மறுபடியும் சொல்கிறேன் நாணயதையும் சில்லறையையும் ஒரே அளவில் பார்க்காதீர்கள், சில சில்லறைக்காக உங்கள் நாணயத்தை #மாணிக்கத்தை தொலைத்து நிம்மதி இழந்து மரண படுக்கை வரைக்கும் செத்து மடியாதீர்கள்... ✍️
ரூபன் 🙏🙏🙏🙏
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🎬 சினிமா
5 சிறந்த காட்சிகள் அங்காடி தெரு படத்திலிருந்து
1. செல்வராணி வேலை போனாலும் பரவாயில்லை, வா பார்த்துக்கலாம்னு அவன்பா... வேலை இல்லைன்னா நான் எப்படி குடும்பத்தைக் காப்பாத்துவேன் அப்படின்னு காதலியத் தகாத வார்த்தை சொல்லி வார்த்தையாலயே கொன்றுவான். செல்வராணி இறந்ததுக்கப்புறம் அந்த கடை முன்னாடி அவளோட ரத்தம் அப்படியே காட்டுவாங்க. அங்கிருந்து ஒரு ஸ்மூத் ட்ரான்சிஷன் எடுத்து அடுத்த நாள் காலையில ஒரு பெரிய அழகான ரங்கோலி கோலம் இருக்கும். நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இறந்தாலும் பரவாயில்லை, அடுத்த நாள் நீயும் எல்லா மனிதர்களாலும் கடந்து போற ஒரு பக்கமாயிடுவே அப்படின்றத அந்த இடத்துல அவ்வளவு தெளிவா சொல்லியிருப்பாங்க...!!
2
செல்வராணியோட மரணம் லிங்குவ நடுங்க வைக்கும். கனிய அவன் கொஞ்சம் கொஞ்சமா அவாய்ட் பண்ணுவான். கனி எக்கச்சக்கமான வார்த்தைகள் விட்டதுக்கப்புறம் லிங்கு சொல்லுவான்... மாட்டிக்கிட்டா உன்ன வச்சு காப்பாத்த எங்கப்பனும் சொத்து சேர்த்து வைக்கல, மாப்பிள்ளைக்கு ஒரு லட்சம் சீர் செய்ய உங்கப்பனுக்கும் வக்கில்லைனு. அதானே ரியாலிட்டி?
3. பழிக்கு பழி அப்படின்ற மாதிரி லிங்குவும் கனி ஏலச்சீட்டு நடத்துறதை சொல்லி மாட்டிவிட்டரலாம்னு ஒரு அட்டெம்ப்ட் பண்ணுவான். கனி அழுதுகிட்டே வெளியில அடி வாங்கிட்டு வருவா. கனி சொல்லுவா... தொடக்கூடாத இடத்தைத் தொட்டு harassment பண்ணாலுமே பொறுத்துகிட்டேன் எல்லாமே இந்த வேலைக்காக தான் அப்படின்னு நம்மளையே உரைய வச்சிரும் கனியோட ஸ்டேட்மென்ட்...!!!
4. லிங்குவோட தங்கச்சி ஒரு தடவை தெரியாதவங்க கிட்ட அவங்க அண்ணன் வேலை செய்யுற கடையோட பேக் கேக்கப் போவா. அந்த பேக் அவளுக்கு கிடைச்சதும் எங்க அண்ணனே என் கூட இருக்கிற மாதிரி நினைச்சு ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க - மில்லியன் டாலர் ஸ்மைல். அப்படியே கட் பண்ணா இந்த பக்கம் கனியோட தங்கச்சி வயசுக்கு வந்துருவா. வேலை கொடுத்த அம்மா நாயைக் கட்டிப் போடுற இடத்துல அவளை உட்கார வைப்பாங்க வீட்டுக்கு தீட்டுனு சொல்லிட்டு. ஒரு கோவில்ல உள்ள வாமா இந்த கோவில் தீட்டு கிடையாதுன்னு சொல்லும்போது அந்தப் பொண்ணு சிரிக்கிற சிரிப்பு... அதுவும் மில்லியன் டாலர் ஸ்மைல்தான்...!!!
5. ஒரு காதல் வெளியில தெரிஞ்சுட்டா வேலையே போயிடும்னு நினைச்ச லிங்குவுக்கும், கனி கை, கால் போனதுக்கு அப்புறம் கூட நான் அவ கூட நிப்பேன்டா யாரு தயவும் எனக்கு வேணாம்னு கனிய கல்யாணம் பண்ணி அதே ஸ்ட்ரீட்ஸ்ல வாழ்ந்து காட்டுன லிங்குவுக்கும் எவ்வளவு வித்தியாசம். உனக்கு கை இல்லனாலும் பரவாயில்லை, கால் இல்லனாலும் பரவாயில்லை, நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, உனக்கு கான்ஃபிடன்ஸ் இருந்தா போதும் இந்த ஊர்ல பிழைச்சுக்கலாம்."
அங்காடி தெரு 💔
,
ரூபன் ❤️❤️❤️❤️













