#😨பிச்சைக்கார பெண்ணை கொன்று சீரழித்த கொடூரன்😱 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
என்னத்த கவித எழுதி
என்னத்த போங்க
இந்தப் பக்கம் திரும்புனா
பட்டப் பகல்ல
அம்புட்டு பேரு பாக்க
வெட்டிக் கொல்லுறாங்க...
அந்தப் பக்கம் திரும்புனா
ஆடை அவுக்கிறது
மார்பை தொடறதெல்லாம்
பாலியல் குற்றத்துல வராது
பாலியல் சீண்டல்னு
அளந்து வுடுறாங்க...
மாட்டு மூத்திரத்தை குடி
ஹிந்திய படினு
அது ஒருபக்கம்
நாகரீகம் மறந்த
சமூக மாற்றத்தை நோக்கி
போன்னு புடிச்சி தள்ளுறாங்க
பள்ளிக்கூடம்
படிக்கிற பசங்க எல்லாம்
கஞ்சா அடிக்கிற அளவு
மலிவா கிடைக்கிது
சோத்துக்கு தான்
நட்டுக் குத்தலா
நாள் முழுக்க பாடு படனும் போல
வீட்ட விட்டுப் போனா
புள்ள திரும்பி
வந்து சேருமான்ற பயத்தை
இந்த நூற்றாண்டுலையும்
எந்த அரசும் போக்கல..
உழைப்புக்கு ஏத்த ஊதியம் இல்ல
நல்லவனுக்கு இங்க
மதிப்பும் இல்ல
குடிக்கிறதும் கூத்தடிக்கிறதும்
ஹீரோயிசம்னு
சினிமாக்காரங்க
வலுவா காட்டுறாங்க...
பெண்ணியம்னு சொல்லீட்டு
என்னத்தையெல்லாமோ
அவுக பத்திரமா வீட்டுக்குள்ள
இருந்துக்கிட்டு
ரீல்ஸா எடுத்துப் போடுறாங்க
பாத்துட்டு வெறி ஏறிப் போயி
நம்ம அப்பாவி பெண் குழந்தைங்கள
நாசம் பண்றாங்க...
வாங்கற விலைக்கு
உணவுப் பொருள் இல்ல
விக்குறவனுக்கு கிடைக்கிற லாபம்
வெளைய வச்சவனுக்கு
கிடைக்கிறதில்ல...
நாடு நாசமாப் போகுது
போகட்டும் நாமளும்
சேந்து நாசமாப் போவோம்
கவித எழுதுறேன்னு
கண்டதையும் எழுதி
மனச ஆத்திக்கிடுவோம்
நமக்கு வேற வழி என்ன இருக்கு???
ரூபன் 🙏🙏🙏


