#Trichy Dharma✨💯
*❤️அம்மா❤️*
மெழுகு ஒன்று உயிராய் வந்து நமக்காய்
ஒளியைதந்து உருகும் ஓவியம் அம்மா.............
நிலாச்சோறு ஊட்டி தினமும்
நீண்ட கதை பலவும் சொல்லி
தொட்டில் தூங்க செய்யும்
தேவதையின் வடிவம் இவள் தானே!.......
காலைமுதல் வேலை செய்து
கைரேகை தேய்ந்தாலும் கூட
கவனிப்பில் குறையிருக்கா
கரைசேர்க்கும் காலங்கரைவிளக்கு அவளே.........
கணவனோடு பூட்டிய மாடாய்
கால்கடுக்க இவள் உழைப்புமிருக்கும்,
வறுமையின் நிறங்கள் வாழ்வில்
படிந்தால்கூட -இவள் எதார்த்த சிரிப்பு
படுதாவாய் அதை போட்டே மறைக்கும்.......
தெரியாத ஒன்றை தேடி வாழ்கை
வண்டி ஓடும்போது
கடையாணி போலவந்து
வாழ்வை காக்கும் சாமியும் இவளே.....
கஞ்சி கூழு வாழ்கை தந்தாலும்கூட
நெஞ்சில் ஒரு கருவறை அமைத்து
கடைசிவரை கணவனை சுமக்கும்
பிஞ்சு மனசுக்காரி இவளாகிறாளே!...
பிள்ளை வயிற்றை தடவிபார்த்து சொறூட்டும்
அட்சயா பத்திரமம் இவள்மனது,
இவள்
போர்த்திவிடும் மாறாப்புதுணி
இதம்தரும் மயிலிறகு................
சிறு தேனீ போலே அம்மாவின்
உழைப்புமிருக்கும் அவளோடு
இருக்கும் தருணமெல்லாம்
தேன்துளிசுவையாய் தித்திக்குமே........
*மகளிர் தின வாழ்த்துக்கள்....*
🌹🌹🌹💐💐💐