
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
*நாளை சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்.*
🌜🌛🌜🌛🌜🌛🌜🌛🌜
வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்களே ஏன்.?
🌜
சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
🌜
*#மூன்றாம்_பிறை_உருவான_கதை*
🌜
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானைv நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.
சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.
🌜
*#பலன்கள்*
🌜
அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்s வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
*கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.*
🌜
*#நான்காம்_பிறையை_ஏன்_பார்க்கக்_கூடாது ?*
🌜
ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் வருந்திய சந்திரனோ, தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார், ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.
🌜
நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை எப்படித் தவிர்க்கலாம்? இதற்கும் புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம். ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு ஆளானார் mகண்ணன். இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்துவிடுபட்டார்.
🌜
காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.
🌜
திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும். #மூன்றாம்🌙 பிறை 🕉️சந்திர தரிசனம் ##🌙மூன்றாம் பிறை சந்திர தரிசனம் #🌙சந்திர தரிசனம்🔯 #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
நாள் : பராபவ வருடம் வைகாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17.5.2026
🌞
திதி : இன்று அதிகாலை 02.09 வரை அமாவாசை. பின்னர் இரவு 11.45 வரை பிரதமை. பின்பு துவிதியை.
🌞
நட்சத்திரம் : இன்று மாலை 04.01 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
🌞
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 04.01 வரை சித்தயோகம். பிறகு அமிர்த யோகம்.
🌞
நல்ல நேரம்..
காலை : 08.15 முதல் 09.00 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
🌞
ராகுகாலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
🌞
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
🌞
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
🌞
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
🌞
சந்திராஷ்டம நட்சத்திரம்
மாலை 04.01 வரை சித்திரை பின்பு சுவாதி
🌞
வழிபாடு
🙏 சூரிய நாராயணனை வழிபாடு செய்துவர தடைகள் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
🌞
எதற்கெல்லாம் சிறப்பு?
சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
🌞
பயனற்ற மரங்களை வெட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌞
ஹோமம் செயல்களை செய்வதற்கு உகந்த நாள்.
🌞
கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள். #📸பக்தி படம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள்
#🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள் #🌻வாழ்த்துக்கள்💐
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #💐வாழ்த்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🤩Sunday Special💥 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻வாழ்த்துக்கள்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #🌞சூரிய பகவான் வழிபாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️
#🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍
#🙏🏻கார்த்திகை விரதம் *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
நாள் : பராபவ வருடம் வைகாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 16.5.2026
🌑
திதி : இன்று அதிகாலை 03.58 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
🌑
நட்சத்திரம் : இன்று மாலை 05.34 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
🌑
அமிர்தாதியோகம்: இன்று மாலை 05.34 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
🌑
நல்ல நேரம்..
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
🌑
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
🌑
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
🌑
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
🌑
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
🌑
சந்திராஷ்டம நட்சத்திரம்
மாலை 05.34 வரை அஸ்தம் பின்பு சித்திரை
🌑
வழிபாடு
🙏 முருகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.
🌑
விரதாதி விசேஷங்கள் :
கிருத்திகை
அமாவாசை
🌑
எதற்கெல்லாம் சிறப்பு?
நீர்நிலை சாதனங்களை சோதனை செய்ய சிறந்த நாள்.
🌑
செங்கல் சூளைக்கு நெருப்பிடுவதற்கு உகந்த நாள்.
🌑
சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
🌑
குலதெய்வ வழிபாடு செய்ய ஏற்ற நாள். #🕉️ஓம் முருகா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #💐வாழ்த்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞











