
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
#🌸🙏 புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை 🙏 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை 4.10.2025
☘️
திதி : இன்று பிற்பகல் 02.38 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
☘️
நட்சத்திரம் : இன்று காலை 07.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
☘️
அமிர்தாதியோகம்: இன்று காலை 07.22 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
☘️
நல்ல நேரம்...
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
☘️
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
☘️
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
☘️
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
☘️
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
☘️
சந்திராஷ்டம நட்சத்திரம்
காலை 07.22 வரை புனர்பூசம் பின்பு பூசம்
☘️
வழிபாடு
🙏 சிவபெருமானை வழிபட கவலைகள் குறையும்.
☘️
விரதாதி விசேஷங்கள் :
சனி மஹா பிரதோஷம்
☘️
எதற்கெல்லாம் சிறப்பு?
பழைய கணக்குகளை முடிப்பதற்கு சிறந்த நாள்.
☘️
அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.
☘️
குருமார்களை சந்திக்க நல்ல நாள்.
☘️
கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏🏼ஓம் நமசிவாய #💐வாழ்த்து
#✨பிரதோஷம்🕉️ #சனி 🐄மஹாப்பிரதோஷம் #🙏பெருமாள் #💐வாழ்த்து #🙏🏼ஓம் நமசிவாய
#✡️ராசிபலன் #📸பக்தி படம் #✨கடவுள் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯 #✨கடவுள்
#சனி 🐄மஹாப்பிரதோஷம் #✨பிரதோஷம்🕉️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #💐வாழ்த்து
#📸பக்தி படம் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏அம்மன் துணை🔱
#🙏பெருமாள் #✨கடவுள் #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💵மகாலக்ஷ்மி
#🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐வாழ்த்து #✨பிரதோஷம்🕉️
*சனி மஹா பிரதோஷத்துக்கு மட்டும் ஏன் அத்தனை விசேஷம்.?*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.
☘️
ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 1 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம்.
☘️
*சனி மஹா பிரதோஷ வழிபாடு*
☘️
இந்த சனி மஹா பிரதோஷம் புரட்டாசி 18ம் தேதி, ஆங்கில தேதியில் 04-10-2025 வரவிருக்கிறது. இந்த நாளில் சிவன் வழிபாடு அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும். எதுவுமே செய்ய முடியாதவர்கள் கூட “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி வீட்டிலேயே பூஜை அறையில் எம்பெருமானை வணங்குவது சிறப்பான பலனை கொடுக்கும்.
☘️
உங்கள் வீட்டு பக்கத்தில் சிவபெருமான் கோவிலிருந்தால் அந்த ஆலயத்திற்கு சென்று வழக்கம் போல வில்வ இலைகளை வாங்கி கொடுத்து உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நந்தி தேவரை வணங்குங்கள். பிறகு சிவபெருமானை வணங்குங்கள். இந்த சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர்.
☘️
இவர் அபிஷேகத்திற்கு உங்களால் என்ன பொருட்கள் வாங்கி தர முடியுமோ, அதை வாங்கி கொடுக்கலாம் உங்கள் கஷ்டங்கள் தீரும். அதிலும் குறிப்பாக மூன்று அபிஷேக பொருட்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. என்னென்ன. அந்த பொருட்களை நாம் சிவபெருமானுக்கு எதற்காக வாங்கி தரப் போகின்றோம்.?
☘️
நந்தி தேவருக்கு நார்த்தங்காய் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்தால் உங்கள் கடன் சுமை குறையும். சொந்த நிலம் வாங்குவதில், சொந்த வீடு வாங்குவதில் பிரச்சனை இருந்தால், அந்த பிரச்சனைகள் விலகும். வீடு சம்பந்தப்பட்ட, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலக நார்த்தங்காய் அபிஷேகம் நந்தி தேவருக்கு செய்து வையுங்கள். வாடகை வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது சரியாகும்.
☘️
வெண்தாமரைப் பூவை வாங்கி கொடுத்து எம்பெருமானை வழிபாடு செய்தால், உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கடன் சுமை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. வெண்தாமரை கிடைப்பது அரிது என்பவர்கள் செந்தாமரை வாங்கி கொடுக்கலாம். தவறு கிடையாது. கூடுமானவரை வென்றாமரைக்கு முயற்சி செய்யுங்கள். இன்றைக்கே பூ கடைக்காரரிடம் சொன்னால் நாளை மாலைக்குள் அந்த பூ உங்கள் கையை வந்து சேரும்.
☘️
இளநீர், அந்த சிவபெருமானை குளிர வைக்கக்கூடிய இந்த இளநீர் அபிஷேகம் மிக மிக சிறந்தது. வீட்டில் இருப்பவர்களுடைய வேலைவாய்ப்பு நன்றாக இருக்க வேண்டும் தொழில் வளம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், ஈசனுக்கு அபிஷேகம் செய்ய இளநீர் வாங்கி தர வேண்டும்.
☘️
உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் நல்ல வேலை கிடைக்கவில்லை, கை நிறைய சம்பாதிக்கவில்லை, அல்லது பிள்ளைகள் சுறுசுறுப்பாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள், அவர்களுக்கு சுறுசுறுப்பு வந்து நல்லபடியாக வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்றாலும் இந்த இளநீரை நீங்கள் சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.
☘️
இதெல்லாம் விட, *உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில் அர்ச்சகரிடம் போய் கேளுங்கள். உங்களுக்கு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய எந்த பொருட்கள் தேவை என்று. அவர் அந்த கோவிலில் இல்லாத ஒரு சில பொருட்களை உங்களுக்கு சுட்டிக்காட்டுவார். அந்த பொருளை உங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொண்டு போய் கொடுப்பது மேலும் சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.* நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான பரிகாரங்கள் எல்லா நன்மைகளையும் செய்யும் #🤔 ஆன்மீக சிந்தனைகள்