திருநீற்றுச் சுவடு
2K views •
#கோவில் ஆன்மிக சிந்தனைகள் #ருத்ர ஆன்மிக தகவல்கள் #🕉️லிங்கா ஸ்ரீ ஆன்மிக தகவல்கள்🕉️ #ஆன்மிக தகவல்கள் & சிறப்பு பூஜைகள்🕉️ #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
நற்பவி என்றால் மிக உயர்ந்த மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை அருளியது காகபுஜண்ட மகரிஷி.
பண்டைய நூல்களில் இந்த மந்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் இது ஒரு மோகன மந்திரம் ஆகும்!
நற்பவி!! நற்பவி!! நற்பவி!!
என்று சொல்லிக்கொண்டே இருக்க உங்கள் கஷ்டங்கள் மட்டுமல்லாது உலக மக்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
நற்பவி என்றால் நல்லது உண்டாகட்டும் நல்லது நடக்கட்டும் என அர்த்தம் ஆகும்.
புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழியா பேரின்ப நிலையை அடைய “நற்பவி”பேருதவியாக இருக்கும் என மகிரிஷி காக புஜண்டர் அருளுகின்றார்.
இதை எப்ப வேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்.
இந்த மந்திரம் ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்க்கு இணையானது என்பதால் இதை எல்லோரும் கார், வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்று கொள்ளலாம்.
இதை உச்சரிப்பவர்களுடைய சொந்த கஷ்டங்கள் மட்டுமின்றி உலக மக்களுடைய கஷ்டங்களும் உடனடியாக விலகி எங்கெங்கும் எவ்வெவர்க்கும் நன்மையே உண்டாகும் என்பது கருணைமலை காகபுஜண்டர் வாக்கு ஆகும்.
12 likes
21 shares