வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔

117 Posts • 644K views
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அந்தோணி போதே சேர்ந்தவர் கங்கம்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்ன மல்லையா என்பவருக்கும் கடந்த சில வருடங்கள் முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் மட்டும் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்னும் இல்லையா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார.... எனவே கங்கம்மா அவரது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நரசிம்மலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது நரசிம்மலு கங்கம்மா வீட்டிற்கு வந்து தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இதனை அறிந்த கங்கம்மாவின் மூத்த மகனான 15 வயதுடைய வீரேந்திரா அவரது தாயின் செயலை கண்டித்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த கங்கம்மா அவரது காதலன் நரசிம்மலுவுடன் சேர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 10 தேதி இரவோடு இரவாக வீரேந்திராவை கொலை செய்து யாருக்கும்தெரியாமல் உடலை சுடுகாட்டில் புதைத்திருக்கிறார். பின்னர் மறுநாள் மாலை காவல் நிலையத்திற்கு சென்று காலை முதல் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீரேந்திராவை இரண்டு வருடங்களாக தேடி வந்த நிலையில் கங்கம்மா பணத்திற்கு ஆசைப்பட்டு நீதிமன்றத்தில் "இரண்டு வருடங்களாக போலீசார் மகனை கண்டுபிடிக்கவில்லை" என வழக்கு பதிவு செய்திருக்கிறார. இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கங்கம்மாவின் செல்போன் கால் ஹிஸ்டரி மூலம் போலீசாருக்கு கங்கம்மாவின் கள்ள காதல் குறித்து தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்டமாககங்கம்மாவிடம் விசாரணை நடத்தியதில் அவரே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை கொன்று நடனமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீரேந்திராவின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்த போலீசார் கங்கம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கங்கம்மா நேரு முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கங்கம்மாவின் உடலை அடக்கம் செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான கள்ள காதலன் நரசிம்மலுவை தேடி வருகின்றனர். பெட்ரா தாயே கள்ளக்காதலை கண்டித்ததால் 15 வயது மகனை கொன்று புதைத்து இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
4 likes
9 shares
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி..... பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்களது சட்டவிரோத உறவைக் கண்டித்த ரகு, தங்களது தொடர்புக்கு இடையூறாக இருப்பார் எனக் கருதி, இருவரும் இணைந்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ரகுவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் உடலை அருகில் இருந்த தோட்டத்தில் புதைத்துவிட்டு, கணவர் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக பங்காரி நாடகமாடியுள்ளார்.... கணவர் நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ரகுவின் அண்ணன் லகமன்னா, சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் பங்காரியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பாணியை மாற்றி விசாரித்ததில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை ராம ராணாவுடன் சேர்ந்து கொலை செய்து உடலைத் தோட்டத்தில் புதைத்ததை பங்காரி ஒப்புக் கொண்டார்.... இதையடுத்து பங்காரி மற்றும் ராம ராணா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் அடையாளம் காட்டிய தோட்டத்திலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு ரகுவின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிக்கோடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கள்ளத்தொடர்புக்காகக் கணவனைக் கொன்று 6 மாதங்கள் உடலைத் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
14 likes
9 shares
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே, தவறான தொலைபேசி அழைப்பு மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால், 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவியும் அவரது காதலனும் ஊர்ப் பஞ்சாயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... ககுடி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும் ஷோபா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஷோபாவின் செல்போனுக்கு வந்த தவறான அழைப்பு மூலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் தீவிரமடைந்த இந்த கள்ளக்காதலால் மயங்கிய ஷோபா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளைத் தவிக்கவிட்டு பாலாஜி நாயக்குடன் ஓட்டம் பிடித்தார்.... மனைவியைக் காணவில்லை என்று சிரஞ்சீவி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அண்மையில் கள்ளக்காதலால் கணவர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகளைக் கண்டு எச்சரிக்கையான சிரஞ்சீவி, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேடிக்கொண்டே மனைவியையும் தீவிரமாகத் தேடி வந்தார். இறுதியில் ஷோபாவும் பாலாஜி நாயக்கும் பெங்கிலபள்ளியில் தங்கியிருந்து, குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதை சிரஞ்சீவி கண்டுபிடித்தார். உடனடியாக உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இருவரையும் பிடித்து பஞ்சாயத்தார் முன் ஆஜர்படுத்தினார்.... கோயிலில் நடந்த கிராமப் பஞ்சாயத்து விசாரணையின் போது, சிரஞ்சீவியை வழியிலிருந்து அகற்றுவதற்காக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலைக் காதலன் பாலாஜி நாயக் ஒப்புக்கொண்டார். சிரஞ்சீவியின் சுதாரிப்பால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அவர் உயிர் தப்பினார். முதலில் புகாரைக் தீவிரமாக விசாரிக்காத காவல்துறை மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் :
9 likes
20 shares