வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
63 Posts • 629K views
சம்பவத்தன்று இரவு கணவருக்கு ஆசையாகப் பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார். அதில் 20 தூக்க மாத்திரைகளை அரைத்துக் கலந்துள்ளார். அதைச் சாப்பிட்ட நாகராஜு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் இரவு 11:30 மணியளவில் கள்ளக்காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கோபி நாகராஜுவின் மார்பில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொள்ள, லட்சுமி மாதுரி தலையணையால் முகத்தை அழுத்தி கணவரைக் கொலை செய்துள்ளார். கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, இருவரும் பயப்படவோ அல்லது அங்கிருந்து தப்பிக்கவோ முயலவில்லை. மாறாக அதிகாலை வரை லட்சுமி மாதுரி தனது கள்ளக்காதலனுடன் அமர்ந்து செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார். அதன் பின்னரே கோபி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிகாலையில் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி லட்சுமி மாதுரி அழுது நாடகமாடியுள்ளார். இறுதிச் சடங்கின் போது நாகராஜுவின் காதில் இரத்தம் வழிந்ததும், மார்பு எலும்புகள் உடைந்திருப்பதைப் பார்த்தும் அவரது தந்தைக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இது குறித்து புகாரளிக்க, பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறி இறந்தது உறுதியானது. லட்சுமி மாதுரியின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் கோபியுடன் பேசியதும், கொலைக்குப்பின் ஆபாசப் படங்களைப் பார்த்ததும் ஆதாரங்களுடன் சிக்கியது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗
15 likes
11 shares
இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, உயிரிழந்தவரின் காதுக்கு அருகே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கணவரைக் கொன்றுவிட்டு, அவரது சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் அந்தப் பெண் தனது மொபைலில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார். கொலையாளி பெண்ணின் இந்த வக்கிரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠
11 likes
11 shares
நாகாச்சி பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரும், டிராவல்ஸ் தொழில் செய்து வந்த பாண்டி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சசிகலாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வேறொரு நபருடன் திருமணமும் செய்து வைக்கப்பட்டது. நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த போதிலும், சசிகலாவால் தனது பழைய காதலை மறக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் சசிகலா தனது காதலன் பாண்டியுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் தனது கணவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், சசிகலா பாண்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி சசிகலாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மன உளைச்சலில் இருந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயரச் செய்தி, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு சென்றிருந்த பாண்டிக்கு அவர் ஊர் திரும்பும் வழியில் தெரியவந்தது. தருமபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே வந்தபோது தனது காதலி இறந்த செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போன பாண்டி, அங்கேயே சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகால பிரிவிற்குப் பிறகும் காதலை மறக்க முடியாமல் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு மரணங்கள் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #📢ஜனவரி 19 முக்கிய தகவல் 😃 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
10 likes
13 shares