வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔

133 Posts • 642K views
மத்திய பிரதேசச் சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.... இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத் தனது காதலனுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது கணவரிடம் வந்து அதே வீட்டில் காதலனையும் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார். இதற்கு கணவர் முற்றிலும் மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவனின் இந்த மறுப்பால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரது தலையை அடித்து உடைத்துவிட்டு, காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு அனுமதி வழங்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தை நாடியுள்ளார். 4 பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், கணவனைத் தாக்கியதோடு மட்டுமில்லாமல் காதலனை வீட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நிலையத்திற்கே சென்ற விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
39 likes
20 shares
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அந்தோணி போதே சேர்ந்தவர் கங்கம்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்ன மல்லையா என்பவருக்கும் கடந்த சில வருடங்கள் முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் மட்டும் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்னும் இல்லையா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார.... எனவே கங்கம்மா அவரது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நரசிம்மலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது நரசிம்மலு கங்கம்மா வீட்டிற்கு வந்து தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இதனை அறிந்த கங்கம்மாவின் மூத்த மகனான 15 வயதுடைய வீரேந்திரா அவரது தாயின் செயலை கண்டித்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த கங்கம்மா அவரது காதலன் நரசிம்மலுவுடன் சேர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 10 தேதி இரவோடு இரவாக வீரேந்திராவை கொலை செய்து யாருக்கும்தெரியாமல் உடலை சுடுகாட்டில் புதைத்திருக்கிறார். பின்னர் மறுநாள் மாலை காவல் நிலையத்திற்கு சென்று காலை முதல் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீரேந்திராவை இரண்டு வருடங்களாக தேடி வந்த நிலையில் கங்கம்மா பணத்திற்கு ஆசைப்பட்டு நீதிமன்றத்தில் "இரண்டு வருடங்களாக போலீசார் மகனை கண்டுபிடிக்கவில்லை" என வழக்கு பதிவு செய்திருக்கிறார. இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கங்கம்மாவின் செல்போன் கால் ஹிஸ்டரி மூலம் போலீசாருக்கு கங்கம்மாவின் கள்ள காதல் குறித்து தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்டமாககங்கம்மாவிடம் விசாரணை நடத்தியதில் அவரே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை கொன்று நடனமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீரேந்திராவின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்த போலீசார் கங்கம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கங்கம்மா நேரு முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கங்கம்மாவின் உடலை அடக்கம் செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான கள்ள காதலன் நரசிம்மலுவை தேடி வருகின்றனர். பெட்ரா தாயே கள்ளக்காதலை கண்டித்ததால் 15 வயது மகனை கொன்று புதைத்து இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
4 likes
8 shares
தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் நாராயணகேட் பகுதியை சேர்ந்தவர்கள் முத்தியம் - கல்பனா தம்பதி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். தனக்கு சொந்தமான நிலத்தில் முத்தியம் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் நாராயணகேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்பனா செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கல்பனாவிற்கு அதே மருத்துவமனையில் பணியில் இருந்த மனூரு மண்டலம் எல்கோயி கிராமத்தைச் சேர்ந்த சிண்டூ என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறி உள்ளது. மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு நாளும் காதலனுடன் நேரத்தைச் செலவழித்துவிட்டு கல்பனா வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். : ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய டிரைவர்... விசாரிக்காத போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வீட்டில் இருந்தாலும் அடிக்கடி போனிலேயே நேரத்தைச் செலவழித்து இருக்கிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் முத்தியம், மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு இருக்கிறார். தங்கள் உறவுக்கு கணவன் முத்தியம் தடையாக இருப்பதாக நினைத்த கல்பனா, காதலன் சிண்டூவுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். கொலை திட்டத்தின்படி கடந்த 16ஆம் தேதி இரவு, கணவனுக்கு அதிக அளவில் கல்பனா மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து இருக்கிறார். அதன்படி போதையில் முத்தியம் தூங்கிய பிறகு, காதலன் சிண்டூவை வீட்டிற்கு வரவழைத்து இருக்கிறார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து முத்தியம் ரெட்டியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கிராமத்தின் எல்லையில் உள்ள தங்கள் விவசாய நிலத்திற்கு உடலை எடுத்துச் சென்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி புதைத்து விட்டனர். மேலும் அந்த இடத்தில் கற்களைப் போட்டு குழி தோண்டப்பட்ட அடையாளம் தெரியாமல் செய்து விட்டனர். இரு நாட்கள் கடந்த நிலையில் கணவன் காணாமல் போய்விட்டதாக முத்தியம் ரெட்டியின் பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் கல்பனா தெரிவித்து இருக்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கல்பனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவருடைய நடவடிக்கைகளை கண்காணிப்பில் வைத்தனர். அப்போது அவர் அடிக்கடி தனது காதலன் சிண்டூவிற்கு போன் செய்வது தெரிந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் இரண்டு பேரையும் பிடித்து தனித்தனியாக விசாரிக்க உண்மை வெளிவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த முத்தியம் ரெட்டியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் தாசில்தார் முன்னிலையில் அங்கேயே உடற்கூறு ஆய்வு நடத்தி, குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர். கல்பனா, சிண்டூ ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #📢 மே 26 முக்கியதகவல்கள் 👍 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
12 likes
10 shares