வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔

101 Posts • 644K views
நீ என்கூடதான் தொடர்புல இருக்கனும்" - 5 வருட கள்ளக்காதல்.. கணவனோடு மீண்டும் சேர்த்த மனைவி! ஆத்திரத்தில் தீவைத்த காதலன் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேலின் மகன் சின்ன கெங்குராஜ் (47) என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சிலகாலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துகொண்டிருந்த� #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
106 shares
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சிவகுமாரின் மனைவி சுஜாதாவுக்கும், அவரது நண்பரான அச்சுதானந்தனுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அச்சுதானந்தனின் மனைவி பரிமளா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரிடம் எச்சரித்துள்ளார்..... இந்நிலையில், சம்பவத்தன்று சுஜாதா தனது கணவரை செல்போனில் அவசரமாக வீட்டிற்கு அழைத்ததையடுத்து, கதவு திறக்கப்படாததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று சிவகுமார்பார்த்தார். அப்போது தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுஜாதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்; இந்தத் தகவலறிந்த அவரது கள்ளக் காதலன் அச்சுதானந்தனும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோத்தகிரி காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், சுஜாதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
20 shares
விளையாட்டாக ஆரம்பிக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள் நாளடைவில் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி, இறுதியில் கொலை, தற்கொலை போன்ற விபரீதங்களிலும் முடிந்து விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் பெரும் மனவேதனைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (48). இவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சிவகுமாரின் நண்பரான காம்பாய்கடை பகுதியைச் சேர்ந்த அச்சு என்ற அச்சுதானந்தனுக்கும், சுஜாதாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அச்சுதானந்தனின் மனைவி பரிமளா, சுமார் 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரை தொடர்புகொண்டுள்ளா... அப்போது தனது கணவரை கண்டிப்பதாகவும், சிவகுமாரும் தனது மனைவி சுஜாதாவை கண்டிக்குமாறும் பரிமளா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று சுஜாதா தனது கணவர் சிவகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு, அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து கடையிலிருந்து உடனடியாக வீட்டிற்கு சென்ற சிவகுமார், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுஜாதாவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஜாதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுஜாதா உயிரிழந்த தகவலை அறிந்த அச்சுதானந்தன் மனவேதனையில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.... இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜாதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம், கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
3 shares