தூய்மைப் பணியாளர்கள்
17 Posts • 2K views
Rationalist
605 views
போராடுவதற்கென இடம் கிடையாது. சென்னையில் ஒதுக்கப்படும் இடமெல்லாம் யாருக்கும் தெரியாத ஒதுங்கிடங்களே! அதிகாரிகளின் வழக்கமான அறுவறுப்பான யுக்தி என்பது பொதுநல வழக்கென பதிவு செய்வார்கள். எந்த அக்கறையுமில்லாதவர்களையும், அநாமதேய நபர்களைக் கொண்டு வழக்கை தொடுக்க வைப்பார்கள். அந்த வழக்கிற்கு ஏற்றார்போல அரசு வழக்கறிஞர் வாதம் செய்வார். அதிகாரிகள் விளக்கம் தருவார்கள். இந்த நாடகத்தை நன்கு அறிந்தும், அதிகாரவர்க்கத்திற்கேற்ப தீர்ப்பு வரும். திமுகவோ, அதிமுகவோ கண்டுகொள்ள மாட்டார்கள், நீதிமன்ற உத்தரவு என கைவிரிப்பார்கள். இதைப்போல ஆயிரக்கணக்கான ஏழைகளின் வீடுகள் பொதுநல வழக்கு எனும் நாடகத்தால் இடிக்கப்பட்டன. இது ஒரு கூட்டு அராஜகபோக்கு. இந்த நாடக-பொதுநல ஆர்வலர்களை எங்கும் காணமுடியாது, யாரும் கண்டதும் இல்லை. இதே சமயம், பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக போராடும் அமைப்பு வழக்குப்தொடர்ந்தால் அபராதத்தொகையோடு நிராகரிக்கப்படும் நிகழ்வுகளும் உண்டு. இன்று நாட்டில் நடப்பது அதிகாரவர்க்கம்-ஆட்சியாளர்கள்-நீதிமன்றம்-தனியார்நிறுவன கூட்டு நடவடிக்கை ஆட்சி. இதை எதிர்கொள்ள பெரும் ஒற்றுமையும், அரசியல் தெளிவும் தேவை. இது தேர்தல் வழியே தீர்க்கப்படக்கூடிய சிக்கல் அல்ல. வீதிகளில் தீர்க்கப்பட வேண்டிய போராட்டம். போராடாமல் தீர்வு இல்லை. தொழிலாள தோழர்களுடன் மே17 இயக்கம் கைகோர்த்து நிற்கும். #📺அரசியல் 360🔴 #தமிழ்த்தேசியம் #தூய்மைப் பணியாளர்கள் #✍️மே17 இயக்கக் குரல் #💪 மே17 இயக்கம்
7 likes
9 shares