😱யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்📱
32 Posts • 1M views
Senthilvel Achari
745 views
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் சுப்பிரமணிய சர்மாவின் தாயார் கனக மகாலட்சுமி (66) தன் மகனோடு வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை சமையலறையில் மின்கசிவு ஏற்பட்டதால் தீயில் மாமியார் கனக மகாலட்சுமி சிக்கிக் கொண்டதாக லலிதா கதறி உள்ளார். உடனே தகவல் அறிந்து பொதுமக்கள் தீயை அணைத்து மகாலட்சுமியை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதில், மாமியாருடன் இருப்பதை நான் விரும்பவில்லை. Youtubeல் முதியோரை கொலை செய்வது எப்படி என்று ஆய்வு செய்தேன். அதன்படி மாமியாரிடம் அன்பாக பழகத் தொடங்கினேன். சம்பவத்தன்று திருடன் போலீஸ் ஆட்டம் விளையாடலாம் என்று மாமியாரை அழைத்தேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அவருடைய கண்களை ஒரு துணியால் கட்டிவிட்டேன். கைகளையும் கட்டினேன். இதற்கு முன்பாக பெட்ரோலை தயாராக வைத்திருந்தேன். சமையலறைக்கு அவர் வந்ததும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டேன். அவர் அழகிய போது கீழே தள்ளினேன். அவருடைய அலறல் வெளியே கேட்காமல் இருக்க டிவியை அதிக சத்தமாக வைத்து சீரியல் பார்த்தேன். பிறகு ஸ்விட்ச் போர்டு மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினேன். இதற்குள் மாமியார் தீயில் கருகி இறந்துவிட்டார். ஆனால் வீட்டில் இருந்து புகை வந்ததால் அனைவரும் வந்துவிட்டனர். அவர்களை நம்ப வைப்பதற்காக மின்கசிவு என்று நாடகம் ஆடினேன் என்று மருமகள் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருமகள் லலிதாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #😱யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்📱 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗
5 likes
14 shares
Cholan News
1K views
#😱யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்📱 #📢 நவம்பர் 09 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள் ஆந்திராவில் திருடன் போலீஸ் விளையாடலாம் என மாமியாருக்கு கண்களில் துணியை கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலம், வேப்பகுண்டா, அப்பன்னபாலத்தில் உள்ள வர்ஷினி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர் வெள்ளிக்கிழமை இரவு கோயில் பணிகளுக்காக வெளியே சென்றபோது, பக்கத்து குடியிருப்பில் உள்ளவர்கள் சுப்பிரமணியத்திற்கு போன் செய்து உங்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாய் கனக மகாலட்சுமி இறந்துவிட்டார் அவரது மகள் காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்ததும் போலீசாருக்கு த தகவல் தெரிவித்த சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றார் வீட்டில் எவ்வாறு தீ பிடித்தது என்று விசாரித்தபோது டிவி.யில் திடிரென மின்கசிவு ஏற்பட்டு வெடித்து தீ பிடித்ததாக லலிதா தேவி கூறினார் ஆனால் மின்கசிவுக்கான எந்தவித தடயமும் இல்லாமல் பெட்ரோல் வாசனை வீசியதால் இது விபத்து இல்லை என்று சந்தேகமடைந்த போலீசார் லலிதா தேவியின் செல்போன் பெற்று ஆய்வு செய்தனர் அதில் யூடியூப்பில் அவர் பார்த்த வீடியோக்களில் பெரும்பாலும் 'ஒரு கொலையை எப்படி விபத்தாக மாற்ற முடியும்? போன்ற வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில், சுப்பிரமணியம் தனது மனைவியின் நடத்தை குறித்த தனது சந்தேகங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் லலிதா தேவியை தங்கள் பாணியில் விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தான் மீது தனது மாமியார் எப்போது பார்த்தாலும் தகாத வார்த்தைகளாலும், எப்போதும் அவமானப்படுத்தி வந்ததால அவரை கொலை செய்ததாக கூறினார். ஒரு பெட்ரோல் பங்க்கில் பாடிட்லில் வாங்கி வந்த பெட்ரோலை வீட்டில் மறைத்து வைத்ததாகவும் வெள்ளிக்கிழமை, தனது கணவர் வெளியே சென்ற பிறகு, பிள்ளைகளை வேறொரு அறையில் ஒளிந்திருந்தபோது, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தனது மாமியாரை ஒரு பருத்தி துணியால் கண்களைக் கட்டி, பின்னர் கை, கால்களையும் கயிறுகளால் கட்டினார். அதன்பிறகு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது மாமியார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ சில நொடிகளில் பரவி கனகமஹாலட்சுமி உயிருடன் எரிந்தார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மகள் ஸ்ரீநயனா தீயில் காயமடைந்தார்
17 likes
9 shares