செய்தி துளிகள்

1K Posts • 865K views
Makkal Mugam
584 views 7 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை காட்டுத் தீ என்பது பேரழிவினை ஏற்படுத்தும் சூழல்சார் பிரச்சனையாகும். பொதுவாக கோடை காலங்களில் போதுமான மழை இன்றி வெப்பம் அதிகமாகும்போது காடுகளில் தீ ஏற்படுகிறது. காட்டுத்தீ ஏற்பட அதிகரித்து வரும் வெப்ப நிலை, வறட்சி, மரங்களின் உராய்வு தன்மை, இடி மின்னல் தாக்கம் ஆகியவைகள் காரணமாக இருந்தாலும், புகைப்பிடிப்பவர்கள் தூக்கியெறியும் நெருப்புகளாலும், வனத்தையொட்டியுள்ள விவசாய நிலங்களில் நெருப்பு வைப்பதாலும், சிறுவன மகசூல் மற்றும் மேய்ச்சல் புல் தீவனத்திற்காகவும், தேன் எடுத்தல் மற்றும வனஉயிரினங்களை விரட்டுவதற்காகவும் நெருப்புகள் பயன்படுத்தப்படுத்துதல் போன்ற மனித செயல்பாடுகளினாலேயே காட்டிற்குள் அதிகமாக தீ நிகழ்வுகள் ஏற்படுகிறது. இத்தீயினால் காடுகள் பாதிப்படையும்போது வனவளமும், மண்வளமும் அழிந்து வன உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, உணவிற்காகவும், குடிநீர் தேவைக்காவும் வனஉயிரினங்கள் வனத்தைவிட்டு வெளியேறி மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்து மனித வனஉயிரின முரண்கள் ஏற்படுகிறது. வனத்திற்குள் செல்வதும், வனத்தீ ஏற்படுத்துவதும், அதற்கு உடந்தையாய் இருப்பதும் தமிழ்நாடு வனச்சட்டம் 1882, வனஉயிரினம் (பாதுகாப்பு) சட்டம், 1972-யின்படி தண்டைக்குரிய குற்றச்செயல் என்பதுடன், குண்டாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். 2025-2026 நிதியாண்டில் ஈரோடு வனக்கோட்டத்தில் வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, காட்டுத் தீ பரவலைக் குறைக்கும் நோக்கில் 372.5 எக்டர் பரப்பளவில் அந்நிய களைச்செடிகள் அகற்றதுல், 235 கிலோமீட்டர் தொலைவிற்கு தீத்தடுப்பு கோடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிப்ரவரி 2026 மாதத்தில் அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி மற்றும் ஈரோடு வனச்சரகங்களில் தீத்தடுப்பு விழிப்புணர்வு வாரம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் தீயணைப்பு துறையினருடன் இணைந்து நடத்தப்பட்டு, காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கோடைக்காலங்களில் வன உயிரினங்கள் நீர்த்தேவைக்காக வனப்பகுதிகளை விட்டு வெளியே வராமல் தடுக்க, சூரிய ஒளியால் இயக்கப்படும் மோட்டார் அமைப்புகள் மூலம் வனத்திற்குள் உள்ள நீர்த்தொட்டிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன், வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் மற்றும் பிற நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு, வன உயிரினங்களுக்கு தேவையான நீர் ஆதாரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. வனத்திற்குள் காட்டுத்தீயினை உடனடியாக கண்டறிந்து அறிவிப்பு செய்யும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல், தீ கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், களப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு தீத்தடுப்பு நெறிமுறைகளில் பயிற்சி அளித்தல், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காட்டுத்தீயைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு மாவட்டத்தில் வனத்தீயினை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு “வனத் தீ கட்டுப்பாட்டு அறை” அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஈரோடு மாவட்டத்திலுள்ள, காப்புக்காடு மற்றும் காப்பு நிலங்களில் ஏற்படும் தீ நிகழ்வுகள், வனக்குற்றங்கள், பயிர்சேதம், மனித – வனஉயிரின முரண் களைதல், வன-உயிரின இறப்பு மற்றும் மீட்பு ஆகியவை குறித்து பொது மக்களால் தெரிவிக்கப்படும் புகார் / மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. கோடைகாலம் நெருங்கி வருவதால் வனத்திற்குள் ஏற்படும் தீ தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தங்களது தகவல்கள் / புகார் / கருத்துக்கள் ஆகியவற்றை 1800-425-1107 என்கிற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத்தெரிவிக்கப்படுகிறது.
9 likes
8 shares