முதல்வர் மு.க.ஸ்டாலின்

143 Posts • 146K views
alxstma
580 views 1 days ago
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? விஜயகாந்த் என்ற ஆளுமையின் நிழலில் இருந்து வெளியே வந்து, இன்று தேமுதிகவின் கேப்டனாகவே கிட்டத்தட்ட பிரேமலதா விஜயகாந்த் உருவெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் பிரேமலதாவின் வருகை திமுக கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக சென்னையில் அவர் மேற்கொண்ட சூறாவளிப் பிரச்சாரம், அறிவாலய வட்டாரங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையை சுழற்றியடித்த பிரச்சாரப் புயல் தனது கட்சி வேட்பாளர்களுக்காக மட்டும் உழைக்காமல், 'கூட்டணி தர்மம்' காப்பதில் பிரேமலதா காட்டும் வேகம் வியப்பாக உள்ளது. வட சென்னை முதல் தென் சென்னை வரை, தி.மு.க வேட்பாளர்களுக்காக அவர் மைக்கை பிடிக்கும்போது தொண்டர்களிடையே ஒரு புது உற்சாகம் பற்றிக்கொள்கிறது. தொடக்கத்தில் தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இணைந்தபோது, 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவி என்பது "அதிகப்படியான தாராளம்" என்றும், தேமுதிகவின் தற்போதைய வாக்கு வங்கிக்கு இது மிதமிஞ்சிய ஒதுக்கீடு என்றும் அரசியல் விமர்சகர்கள் முணுமுணுத்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரேமலதா மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரம் அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கியுள்ளது. கூட்டணி வேட்பாளர்களுக்காக அவர் காட்டும் அர்ப்பணிப்பு.. குறிப்பாகப் பெண்களிடம் அவருக்குக் கிடைக்கும் பெரும் வரவேற்பும், தி.மு.க. தலைமை எடுத்த முடிவு ஒரு "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. வெறும் இடங்களைப் பெற்றதோடு நின்றுவிடாமல், கூட்டணிக் கட்சிகளுக்கான வெற்றியை உறுதி செய்யும் ஒரு சக்தியாக மாறி, தான் ஒரு "மேக்னட்" என்பதை பிரேமலதா நிரூபித்து வருகிறார். "கேப்டன் வழியில் வந்தவர்கள் நாங்கள்... சொன்னால் சொன்னபடி செய்வோம்!" என்ற பாணியில் அவர் பேசும் பேச்சுகள், கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சாமானிய மக்களை எளிதில் சென்றடைகிறது. பெண்கள் ஆதரவு: ஒரு சைலண்ட் புரட்சி பிரேமலதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் - பெண்களின் வருகை. குடும்பத் தலைவிகளிடம் அவர் உரையாடும் விதம், அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசுவது எனப் பெண்களின் 'வோட் பேங்க்'கைக் கவரும் வித்தையை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார். தி.மு.க-வின் நலத்திட்டங்களையும், தேமுதிகவின் உறுதியையும் இணைத்து அவர் முன்வைக்கும் வாதங்கள் அடிமட்ட அளவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கிரவுண்ட் ஒர்க்: பக்கா பிளான்! வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், களப்பணிகளிலும் தேமுதிகவினர் காட்டும் தீவிரம் தி.மு.க நிர்வாகிகளையே வியக்க வைத்துள்ளது. பூத் கமிட்டி வேலைகள் முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது வரை, தி.மு.க மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே ஒரு சுமூகமான ஒருங்கிணைப்பு தெரிகிறது. இந்தத் தேர்தலில் பிரேமலதா ஒரு 'மேக்னட்' போலச் செயல்படுகிறார். கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், அதே சமயம் மக்களிடம் ஒரு நம்பிக்கையை விதைப்பதிலும் அவர் வெற்றி பெற்று வருகிறார். தி.மு.க கூட்டணிக்குத் தேமுதிக ஒரு பலமான சேர்க்கை என்பதைத் தனது உழைப்பால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. கேப்டன் இல்லாத முதல் பெரிய தேர்தல் களம் இது என்றாலும், அந்தப் பொறுப்பைத் தோளில் சுமந்து செயல்படுகிறார் 'பிரேமலதா'. இந்த உழைப்பு வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! #💪தி.மு.க #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #தெரிந்துகொள்வோம் #
15 likes
11 shares
alxstma
610 views 3 days ago
#தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் # நேரம் 2.05 am இன்று மாலை கரூரில் கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்புடன் முடித்துவிட்டு, தலைவரோடு ஈரோடு சென்று அங்கே நாளை காலை தலைவர் பிரச்சார பணிகளை பார்த்துவிட்டு இரவு 12.05 க்கு கோவை கொடிசியா திடலுக்கு வந்தார் அண்ணன் #செந்தில்பாலாஜி இங்கே நாளை மாலை நடைபெறவுள்ள தலைவர் பிரச்சாரக்கூட்ட பணிகளை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி புறப்படும் போது மணி 2.05 …. ஆம், அதனால் தான் சொல்கிறேன் அண்ணன் #உழைப்பால்_உயர்ந்தவர்
10 likes
10 shares