Nethaji
495 views • 2 days ago
#👏Inspirational videos #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #ஆன்மிகம் 9, 2026
*திருச்சிற்றம்பலம்*
*சேக்கிழார் பெருமான் அருளிய பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம்*
*மானக்கஞ்சாற நாயனார் புராணம் - இலை மலிந்த சருக்கம்*
*பாடல் :*
வாங்குவார் போல் நின்ற மறைப்
பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை வல்லியுடன்
பழைய மழவிடை யேறி
ஓங்கிய விண் மிசை வந்தார்
ஒளி விசும்பின் நிலன் நெருங்கத்
தூங்கிய பொன்மலர் மாரி தொழும்பர்
தொழுது எதிர் விழுந்தார். - 12.018.31
*பொருள் :*
*மானக்கஞ்சாற நாயனாரின் மகளது கூந்தலை வாங்குபவர் போல நின்ற சிவபெருமான், அடுத்த கணமே அந்த அடியார் வடிவத்தை மறைத்து தன் பக்கத்தில் அழகுற விளங்கும் உமையம்மையோடு, தனது தொன்மையான இளமை மாறாத ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்து காட்சியளித்தார். இந்த காட்சி, ஒளி வீசும் வானமே பூமியை நோக்கித் தாழ்ந்து நெருங்கி வருவது போல பிரம்மாண்டமாக இருந்தது.இந்த அற்புதக் காட்சியைக் கண்டு தேவர்கள் வானில் இருந்து பொன் மலர்களை மழையாகப் பொழிந்தனர். அங்கிருந்த அடியாரான மானக்கஞ்சாற நாயனாரும் அவர்தம் சுற்றத்தினரும் மெய்மறந்து, இறைவனைத் தொழுது அவர் திருமுன்னே தரையில் விழுந்து வணங்கினர்.*
*திருச்சிற்றம்பலம்*
10 likes
14 shares