divine

250 Posts • 108K views
திருப்பாவையில் ஆண்டாள் பல முக்கியமான விஷயங்களை விளக்குகிறாள்: ப்ராப்யம் (இலக்கு), ப்ராபகம்(வழி) இரண்டுமே எம்பெருமான் எனக் காட்டினாள் பூர்வாசார்ய அனுஷ்டானக்ரமத்தில் செயத்தக்கன, செய்யத்தகாதன என க்ருத்யாக்ருத்ய விவேகம் சொன்னாள் பகவதநுபவம் ஸ்வார்த்தமாகத் தனியேயன்று, குழாங்களாய் ஆயிற்றுச் செய்யவேண்டுவது எனக் காட்டினாள் – பத்து பாசுரங்களில் பத்து கோபிகைகளை எழுப்பி அழைத்துச் செல்கிறாள் எம்பெருமானை அணுகுமுன் த்வாரபாலகர், பலராமன்,யஶோதைப்பிராட்டி போன்றோரைப் பற்ற வேண்டும் எம்பெருமானை அணுகுமுன் எப்போதும் பிராட்டி புருஷகாரம் வேணும் அவனுக்கு எப்பொழுதும் மங்களாஶாஸனம் செய்யவேணும் கைங்கர்யமே ஜீவாத்ம ஸ்வரூபம். ஆதலால் அவனிடம் கைங்கர்ய ப்ரார்த்தனை தேவை அவன் கைங்கர்யம் அவனை அடைய உபாயமென்று ஒரு துளியும் நினைவு கூடாது கைங்கர்யம் அவன் முகோல்லாஸத்துக்காகச் செய்யவேணும், பிரதி பலனுக்காக அன்று. ஆண்டாளின் அளப்பரிய பெருமைகளை நாம் எப்போதும் சிந்திக்கிறோம், அவசியம் மார்கழி மாத முழுதும் அவள் பாட்டு, வியாக்யான அநுபவமாகிறது. பட்டர் பணித்தபடி முப்பது பாசுரங்களும் அநுஸந்திக்கில் நன்றாம்…அன்றேல் ஒரே பாட்டை அநுஸந்திக்கிலும் நன்றாம், அன்றேல் கடைசிப்பாட்டை பட்டரநுபவித்தபடியை அநுஸந்திக்கிலும் நன்றாம். எம்பெருமானார்போலே பட்டரும் திருப்பாவையில் போர உகந்து ஈடுபட்டிருப்பர். தோல் கன்றைக் கண்டு பால் சுரக்கும் தாய்ப்பசு போலே, திருப்பாவையுடன் ஏதேனும் ஒரு ஸம்பந்தம் இருந்தாலேயே, பூமிப் பிராட்டி வராஹப் பெருமானிடம் ப்ரார்த்தித்தபடி, நம்மை அவனும் உஜ்ஜீவிப்பான். தன் அகாத கருணையால் இந்த ஸம்ஸாரத்தில் நமக்காகப் பிறப்பெடுத்த ஆண்டாள் நம் உய்வுக்காகத் தன் ஈடற்ற கருணையால் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி அளித்தாள். இவை இரண்டும் நமக்குப் பிறப்பிறப்புத் துயரறுத்துத் தொன்நெறிக்கண் நிறுத்தி பகவதனுபவ, கைங்கர்ய அந்தமில் பேரின்பம் அருளும்,. *ஆண்டாள்* *திருவடிகளே* *சரணம்.✍🏼🌹* #god #உண்மையை அறிவோம்
8 shares
Ashokraj Subramani
3K views 1 months ago
https://sharechat.com/post/maJ6APX?d=n&ui=X4VQrMJ&e1=c #god
34 shares