#💛சென்னை சூப்பர் கிங்ஸ்😍

31 Posts • 4K views
நாளை நடைபெறும் போட்டியில் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2026 லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறத் தொடங்கியுள்ளது. இன்னும் இரண்டே போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கேவின் ப்ளே-ஆஃப் கனவு ஒரு மெல்லிய நூலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. "தல" தோனி இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட காயம் காரணமாக, 44 வயதான சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. முதலில் சில வாரங்கள் மட்டுமே அவர் விளையாட மாட்டார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதன் பிறகும் அவர் களமிறங்கவே இல்லை. அவர் குணமடைந்து வருவதாக சென்னை அணி நிர்வாகம் தொடர்ந்து கூறி வந்தாலும், அவர் எப்போது களமிறங்குவார் என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இந்நிலையில், புகழ்பெற்ற கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே ஒரு சுவாரஸ்யமான கணிப்பை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர், "சென்னையில் இன்னும் ஒரே ஒரு ஹோம் மேட்ச் தான் மீதமுள்ளது. மே 18ம் தேதி நடக்கும் அந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சேப்பாக்கமும் மஞ்சள் கடலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அங்கே தோனி ஒரு ஹிட்ச்காக் பாணி த்ரில்லர் படத்தைப் போல திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்!" என அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். நாளை மே 18ம் தேதி திங்கள் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து மே 21ம் தேதி வியாழக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் அகமதாபாத்தில் மோதுகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது ப்ளே-ஆஃப் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டது. ஃபின் ஆலனின் அதிரடி 93 (35 பந்துகள்) மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷியின் 82* (44 பந்துகள்) ரன்களின் உதவியோடு கேகேஆர் 247 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீனும் 52 ரன்கள் விளாசினார். பதிலுக்கு ஆடிய குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் (85), ஜோஸ் பட்லர் (57), சாய் சுதர்சன் (53*) போராடியும் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிக்கல் கேகேஆர் டீமின் இந்த இமாலய வெற்றியால், சிஎஸ்கே-வின் ப்ளே-ஆஃப் தகுதி பெறும் வாய்ப்பு 28.4 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்துள்ளது சென்னை ரசிகர்களுக்குச் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அடுத்த இரு போட்டிகளிலும் வென்று சிஎஸ்கே அரையிறுதிக்குச் செல்லும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்! தற்போதைய சூழலில் எந்தவொரு அணியும் ப்ளே ஆப் இடத்தை உறுதி செய்யவில்லை. ஆனால், பெங்களூர் அணி 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட தனது இடத்தை உறுதி செய்துவிட்டது. அவர்கள் அடுத்து வரும் இரு போட்டிகளில் ஒன்றில் வென்றால் போதும். அடுத்த 3 இடங்களுக்குத் தான் குஜராத், ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா என 6 அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. கட்டாய வெற்றி சிஎஸ்கேவுக்கு இனி வரும் இரண்டு போட்டிகளும் வாழ்வா சாவா போராட்டம் தான். ஐதராபாத் மற்றும் குஜராத் ஆகிய பலமான அணிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ருதுராஜ் படை உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், மே 18 அன்று சேப்பாக்கத்தில் 'தல' தோனி பேட்டை பிடித்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தால், அது சென்னை அணிக்கு வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் ஒரு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும். 'தல' வருவாரா, சிஎஸ்கே ஜெயிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! ##💛சென்னை சூப்பர் கிங்ஸ்😍 #🥇விளையாட்டு அப்டேட்ஸ்🏆 #🏏தோனி Fans Club😍 #🏏கிரிக்கெட் தருணங்கள்🔥 #🐯சென்னை Fans Club💛
16 likes
6 shares
லக்னோ அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் தோல்வி அடைந்ததால், சிஎஸ்கே அணியின் அடுத்த கட்ட பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெறுவது கட்டாய சூழலாக மாறியுள்ளது. புள்ளிப்பட்டியலில் சிக்கிய சிஎஸ்கே இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 6 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ரன் ரேட் மிகவும் குறைவாக இருப்பதும் அணிக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. தற்போது சிஎஸ்கே அணியின் ரன் ரேட் +0.027 என்ற அளவில் மட்டுமே உள்ளது. இன்னும் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி 16 புள்ளிகளை எட்ட முடியும். ஆனால் 16 புள்ளிகள் கிடைத்தாலே போதும் என்ற நிலை இல்லை. மற்ற அணிகளின் முடிவுகளும் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. முன்னிலையில் உள்ள அணிகள் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் ஏற்கனவே 16 புள்ளிகளை கடந்துள்ளதால், பிளே-ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டன. குறிப்பாக பெங்களூரு அணியின் ரன் ரேட் மிக வலுவாக இருப்பதால் அவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாக பார்க்கப்படுகிறது. இதனால் உண்மையான போட்டி தற்போது ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்குள் மட்டுமே உள்ளது. இந்த நான்கு அணிகளும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக போராடி வருகின்றன. ஹைதராபாத் போட்டி மிக முக்கியம் ஹைதராபாத் அணிக்கு தற்போது 14 புள்ளிகள் உள்ளன. அந்த அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டி சிஎஸ்கேவுக்கு வாழ்வா சாவா என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அந்தப் போட்டியில் சென்னை அணி தோற்றால் பிளே-ஆப் கனவு உடனடியாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணியை பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே சிஎஸ்கேவின் ரன் ரேட் மேம்படும். இதுவே அடுத்த கட்ட வாய்ப்புக்கு முக்கிய காரணமாக அமையும். ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் அச்சுறுத்தல் ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளது. அதில் 2 போட்டிகளில் வென்றாலே அவர்கள் 16 புள்ளிகளை எட்டிவிடுவார்கள். இதனால் சென்னை அணிக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் அணியும் 13 புள்ளிகளுடன் இருப்பதால், மீதமுள்ள போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலே முன்னிலை பெறும் சூழல் உள்ளது. எனவே சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகள் தோல்வியடையவும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. - விஜய் முதலமைச்சர் ஆனதால் எனக்கு ஏன் பொறாமை? - நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்! கால்குலேட்டர் நிலைக்கு தள்ளப்பட்ட சென்னை ஒருகாலத்தில் தனது விதியை தானே தீர்மானித்த சென்னை அணி, தற்போது மற்ற அணிகளின் முடிவுகளை நம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கணக்குகளை போட்டு சிஎஸ்கே அணியின் வாய்ப்புகளை விவாதித்து வருகின்றனர். ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி மீதமுள்ள போட்டிகளில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பு உயிருடன் இருக்கும். வரவிருக்கும் ஹைதராபாத் போட்டி இந்த சீசனின் மிகப்பெரிய அக்னி பரீட்சையாக பார்க்கப்படுகிறது. கம்பேக் கொடுக்குமா சிஎஸ்கே? மேலும், இந்த சீசனில் சென்னை அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சில போட்டிகளில் அசத்தலான வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே, முக்கியமான தருணங்களில் தொடர்ச்சியான தவறுகளால் பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் பேட்டிங் சரிவும், இறுதி ஓவர்களில் பந்துவீச்சு பலவீனமும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அனுபவம் மிக்க வீரர்களும் இளம் வீரர்களும் இணைந்துள்ளதால், கடைசி இரண்டு போட்டிகளில் சென்னை அணி மீண்டும் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது. சமூக வலைதளங்களிலும் "சிஎஸ்கே இன்னும் முடிவடையவில்லை" என்ற கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன. ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்த சீசனின் மிகப்பெரிய கம்பேக் கதையாக சென்னை அணியின் பயணம் மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். என்ன மாற்றம் செய்ய வேண்டும்? சென்னை அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தற்போது சிஎஸ்கே அணியின் வாய்ப்புகள் குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர். குறிப்பாக அனுபவம் மிக்க வீரர்கள் அழுத்தமான போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால், கடைசி இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி ஆபத்தான அணியாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கம் கொடுத்தால் மட்டுமே நடுப்பகுதி வீரர்களுக்கு அழுத்தம் குறையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல் பந்துவீச்சாளர்களும் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியமாகியுள்ளது. இந்த சீசனில் பல முறை கடைசி ஓவர்களில் போட்டி கைவிட்டுச் சென்றதால், அந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. ரசிகர்கள் தற்போது ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டியை போலவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் #🐯சென்னை Fans Club💛 #🏏கிரிக்கெட் தருணங்கள்🔥 #🏏தோனி Fans Club😍 #🥇விளையாட்டு அப்டேட்ஸ்🏆 ##💛சென்னை சூப்பர் கிங்ஸ்😍
16 likes
13 shares