திருஞானசம்பந்தர்

123 Posts • 73K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
733 views 13 days ago AI indicator
திருமுறைகள் - பகுதி 5 அன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கீழ் இயங்கி வந்தது. மாமன்னர் ஓலைச்சுவடிகள் நிறைந்த அந்த அறையை திறக்கக்கோரினார். ஆனால் தீட்சிதர்களோ அந்த அறையை திறக்க சம்மதிக்க வில்லை. இந்த தேவாரத்தினைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரை தேவார மூவர் என்று அழைக்கின்றனர். இந்த மூவர் வந்தால் மட்டுமே அறைக்கதவு திறக்கப்படும் என்றனர். நாடாளும் மன்னர் போர் மூலம் பல வெற்றிகளை கண்டவன் யோசித்தான். மூவர்களின் சிலைகளை வடிக்க செய்தான். அந்த மூவர் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு தூக்கி சென்றனர். அந்த அறையின் முன் மூவரையும் நிற்க வைத்து, இப்போது அறை கதவை திறங்கள் என்றார். கதவை திறந்தனர். அந்த ஓலை சுவடிகளை கரையான் அரிப்பதை கண்டனர். திகைத்து நின்றார்கள். நம்பியாண்டார் நம்பி மனம் வருந்தினார். மாமன்னர் ராஜராஜ சோழனோ ஓலை சுவடியை மீட்பது எப்படி ஆராய்ந்தான். குடம் குடமாக எண்ணெயை அந்த ஓலைச்சுவடி மேல் ஊற்ற செய்தார். ஏடுகளை சுற்றி இருந்த கரையான் புற்று கரைத்திருந்தது. வேண்டியதை மட்டுமே விட்டுவைத்து மீதியை மண்மூடச் செய்ததாக அசரீரியின் மூலமாக ஈசனே அப்போது அறிவித்தார். அதற்குப் பிறகு ஏடுகளை பத்திரமாக பிரித்து பாடம் செய்து பதிகங்களாக தொகுத்து அளித்தார், நம்பியாண்டார் நம்பி. அந்த பாடல்களை, நம்பியாண்டார் நம்பி ‘திருமுறைகள்’ என்ற பெயாில் தொகுத்தார். திருமுறைகள் 12 இருக்கிறது, அதில் 11 திருமுறைகளை தொகுத்தவா், நம்பியாண்டார் நம்பி. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசா் பாடிய தேவாரப் பாடல்களை 4 முதல் 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தார். பின்னா் சமயக்குரவா்களில் நாலாவதாக இருக்கும் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையாக சோ்த்தார். திருமாளிகைத்தேவா் முதலான சிலா் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாக இணைத்தார். திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் சோ்த்தார். பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களில், நம்பியாண்டார் நம்பி பாடிய பிரபந்தங்களும் அடங்கியிருக்கிறது. தொடருவோம்.. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #திருஞானசம்பந்தர் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #🙏ஆன்மீகம்
14 likes
15 shares
chellakannan
1K views 18 days ago
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #திருஅருள்வேட்கை #பதிகம்_012 #கொச்சகக்கலிப்பா #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
15 likes
32 shares
chellakannan
8K views 5 hours ago
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதவிண்ணப்பம் #பதிகம்_013 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
78 likes
62 shares