#கர்ம வீரர் காமராஜர்
சத்துணவு நாயகரின் சாமர்த்தியம்!
" #முப்படைகளுக்கும்தனித்தனிதளபதி !
*தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த
காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார்.
நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு
காணப்படவில்லை ; மனத்தில் ஏதோ சிந்
தனை அலைப்பாயக் கவலையோடு இரு
ந்தாராம்...
*பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்தி
களைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு
போன காமராஜர், " என்னடா இவர் இப்
படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம்
எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கை
களைத் கேட்டுப் பெறுவது...? என்னும்
தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .
*"எப்பவுமே கல கலப்பா இருப்பிங்க...
இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..?
*நேரு விரக்தியோடு, " நம்ம இராணுவத்
தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்த
நாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ்
திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனு
ப்ப முடியாதுங்கிறார். கிருஷ்ணமேன -
- னோ , திம்மையா தளபதியாய் இருக்கி
றவரை தான் மந்திரியாக வேலை பார்க்க
முடியாதுங்கிறார்.இராணுவ விஷயமா
இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த சிக்கல எப்படி
தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே..."
என்றாராம்.
* " இந்த ரெண்டு பேர்ல் யார வைச்சுக்க
ணும்...யார்க் கழற்றி விட்டுட்டு நெனைக்
கிறீங்க...? என்று கேட்டார் தலைவர்.
*"கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி;
எனக்கு வாத்தியாரகவே இருந்தவர்.
அவர நாம விட முடியாது. திம்மையாவை
த்தான் ஏதாவது பண்ணியாகனும் ..." என்
றார் நேரு.
*கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே
காமராஜர் சொன்னார். " நீங்க உடனே
கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவு
கற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க
அவர்கூட கெட்டிக்காரா அதிகாரிகள்
'டெபியூஸ்ட்' பண்ணி, பணத்தையும்
கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடு
கள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம்
பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தள -
- வாரங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண
ஃப்ளாஷ் போறங்கன்னு கேபினட்ல தீர்-
- மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே நீங்க இங்கே பண்ண வேண்டிய மாத்ததையெல்லாம் பண்ணி
புடலாம்..."
*வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, " திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ' அக்காமடேட்' பண்றது.?
என்று கேட்டார்...
*பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர்.
" இப்பதிம்மையா *இந்தியாவின் மொத்த
இராணுவத்துக்கும் தளபதியா இருக்கார்.
இதுவே ரொம்ப டேஞ்ஜர்*...
*அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே
பிரைம்மினிஸ்டரையே '*ஹவுஸ்கஸ்டடி -
- யில * வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்துக்குள்ளே மூணு படைகளுக்கும்
மூணு தனித்தனி தளபதிய நியமிச்சு -
- டுங்க. அவரு புல்லையும் புடுங்கிடலாம்;
வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும்
முட்டும் முடியாது...
*ஏகத்துவம் தளபதியா இருந்துநாட்டாமை
பண்ணின ஒருத்தர் ஒரே ஒரு படைக்குத்
தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார்
வெளியேரத்தான் நினைப்பாரு. அமைதி
யாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் ! " என்று தலைவர் பேசப்
பேச நேரு தன் இருக்கையில் இருந்து
எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...
" Kamaraj... Fantastic Kamaraj...! What a
burte common sense ! "
*தலைவர் காமராஜர் சொன்னபடியே
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று
வெளியேறினார்.
*அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ
அறிவை வைத்தே காய்களை நகர்த்திக்
களம் கண்டவர் காமராஜர்.
*புத்தகத்தைக் படிப்பதைவிட பூமியைச்
படித்தவர் அவர்.
சொன்னவர் :-
திரு.S. செல்லப்பாண்டியன்,
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.
*நன்றியுடன் ஆதார நூல்; "ஆகட்டும் -
- பார்க்கலாம் "- திரு.வீரபாண்டியன்.
பக்கம் எண் : 111&112.