கர்ம வீரர் காமராஜர்
27 Posts • 297K views
mariappan kumaravel
658 views 5 months ago
#கர்ம வீரர் காமராஜர் சத்துணவு நாயகரின் சாமர்த்தியம்! " #முப்படைகளுக்கும்தனித்தனிதளபதி ! *தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார். நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில் ஏதோ சிந் தனை அலைப்பாயக் கவலையோடு இரு ந்தாராம்... *பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்தி களைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், " என்னடா இவர் இப் படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கை களைத் கேட்டுப் பெறுவது...? என்னும் தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் . *"எப்பவுமே கல கலப்பா இருப்பிங்க... இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..? *நேரு விரக்தியோடு, " நம்ம இராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்த நாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ் திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனு ப்ப முடியாதுங்கிறார். கிருஷ்ணமேன - - னோ , திம்மையா தளபதியாய் இருக்கி றவரை தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார்.இராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே..." என்றாராம். * " இந்த ரெண்டு பேர்ல் யார வைச்சுக்க ணும்...யார்க் கழற்றி விட்டுட்டு நெனைக் கிறீங்க...? என்று கேட்டார் தலைவர். *"கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாரகவே இருந்தவர். அவர நாம விட முடியாது. திம்மையாவை த்தான் ஏதாவது பண்ணியாகனும் ..." என் றார் நேரு. *கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். " நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவு கற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க அவர்கூட கெட்டிக்காரா அதிகாரிகள் 'டெபியூஸ்ட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடு கள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தள - - வாரங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண ஃப்ளாஷ் போறங்கன்னு கேபினட்ல தீர்- - மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே நீங்க இங்கே பண்ண வேண்டிய மாத்ததையெல்லாம் பண்ணி புடலாம்..." *வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, " திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ' அக்காமடேட்' பண்றது.? என்று கேட்டார்... *பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். " இப்பதிம்மையா *இந்தியாவின் மொத்த இராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர்*... *அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம்மினிஸ்டரையே '*ஹவுஸ்கஸ்டடி - - யில * வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்துக்குள்ளே மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சு - - டுங்க. அவரு புல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்டும் முடியாது... *ஏகத்துவம் தளபதியா இருந்துநாட்டாமை பண்ணின ஒருத்தர் ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார் வெளியேரத்தான் நினைப்பாரு. அமைதி யாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் ! " என்று தலைவர் பேசப் பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு... " Kamaraj... Fantastic Kamaraj...! What a burte common sense ! " *தலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார். *அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர். *புத்தகத்தைக் படிப்பதைவிட பூமியைச் படித்தவர் அவர். சொன்னவர் :- திரு.S. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர். *நன்றியுடன் ஆதார நூல்; "ஆகட்டும் - - பார்க்கலாம் "- திரு.வீரபாண்டியன். பக்கம் எண் : 111&112.
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
7 likes
12 shares