தைப்பூச விரதம்

5 Posts • 252K views
வீட்டில் முருகர் விக்கிரகம் வைத்து இருப்பவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். படம் மட்டும் வைத்து இருப்பவர்கள் ஒரு டம்ளர் பாலை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். இது காலை வழிபாடு. அதன் பிறகு விரதத்தை ஆரம்பிக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு விசேஷமாக பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் வருவதால் நாள் முழுக்க விசேஷம் தான். அதனால இது சிறப்பான வழிபாடாக அமையும். வழிபாட்டுக்கு உகந்த நேரம் இதுதான். தைப்பூசம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தான் வருது. இந்த ஆண்டு அதிகாலையிலேயே பிரம்ம முகூர்த்தத்துல கும்பிடலாமா என்றால் தாராளமாக வழிபாடு செய்யலாம். 1.2.2026 தைப்பூசத்தன்று அதிகாலை 4.41 மணி முதல் ஆரம்பித்து 2.2.2026 அன்று அதிகாலை 4.43 அன்று பௌர்ணமி முடிகிறது. பூச நட்சத்திரம் 1.2.2026 அன்று அதிகாலை 1.54மணிக்கு ஆரம்பித்து 2.2.2026 அன்று அதிகாலை 1.01 மணிக்கு முடிகிறது. ஆக 1ம் தேதி முழுநாளும் பௌர்ணமியுடன் பூசம் இணைந்துள்ளது. அதனால் அன்று அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை வழிபடலாம். அல்லது காலை 8 மணி முதல் 9.30 மணி வரை வழிபடலாம். மதியம் இலை போட்டு படையல் போடுபவர்கள் 1.35 மணி முதல் 2.35 மணி வரையும், மாலை 6 மணிக்கு மேலும் படையல் போடலாம். மாலையில் விரதம் விடுபவர்கள் இலை போட்டு படைக்கலாம். அல்லது பால் வைத்து விரதம் ருக்கலாம். அவர்கள் 6மணிக்கு மேல் இந்த நேரத்தை வழிபட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாளில் மாலை 6 மணிக்கு மேல் நெய் விளக்கு அல்லது சாதாரணமாக எண்ணை ஊற்றி விளக்கேற்றுங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். #தைப்பூச விரதம் #🙏தைப்பூசம்🕉️
10 likes
12 shares