*ஶ்ரீ ராம கர்ணாம்ருதம் - ஸ்லோகம் 20*
ராமம் சந்த³னஶீதலம்
க்ஷிதிஸுதாமோஹாகரம் ஶ்ரீகரம்
வைதே³ஹீநயனாரவிந்த³மிஹிரம்
ஸம்பூர்ணசந்த்³ரானனம்
ராஜானம் கருணாஸமேதநயனம்
ஸீதாமனோநந்த³னம்
ஸீதாத³ர்பணசாருக³ண்ட³லலிதம்
வந்தே³ ஸதா³ ராக⁴வம்
*ஸகல ஜனங்களையும் ஆனந்தப்படுத்துகிறவனாகவும், சந்தனம் போல் குளிர்ந்தவனாகவும், ஸீதா தேவிக்கு மோஹத்தைச் செய்பவனாகவும், ஸம்பத்தைக் கொடுப்பவனாகவும், ஸீதாதேவியின் கண்களாகும் தாமரைப்பூவுக்கு சூரியன் போன்றவனாகவும், பூர்ண சந்திரன் போன்ற முகமுடையவனாகவும், பூமண்டலத்துக்கு அரசனாகவும், கருணை புரிந்த கண்களை உடையவனாகவும், ஸீதாதேவியின் மனஸை ஸந்தோஷப்படுத்துகிறவனாகவும், ஸீதாதேவியின் கண்ணாடி போன்ற கன்னங்களில் மகிழ்ச்சியுடையவனாகவும் இருக்கின்ற ஸ்ரீராகவனை எப்பொழுதும் வணங்குகிறேன்* 🚩🕉🪷🙏🏻
#🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏சீதா ராமர் #🏹ராமாயணம் 📚 #இராமாயணம் மகாபாரதம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்