ஜனவரி 9-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜனவரி 10-ம் தேதி மழையின் தாக்கம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
#ஜனவரி 6 முக்கிய தகவல் 📺 #தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு