ராகவேந்திரா

737 Posts • 454K views
குருவே சரணம்... ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்ப கோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேச த்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். "என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் கேட்டார் அதற்கு அவர்கள், ''நாங்கள் ஜோதிடம் சொல் பவர்கள். எங்களுக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை எங்களுடைய பாக்கியமாக நினைப்போம்'' என்றனர். சற்று யோசித்த சுவாமிகள், ''உங்களிடம் ஒரு ஜாதகம் தருகிறேன். அந்த ஜாதகத்து க்கு உரியவரின் ஆயுள் காலம் என்ன என்று கணித்துச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார். பொதுவாக ஜோதிடர்கள் ஆயுளை கணிப் ப தில்லை. ஆனால், சுவாமிகளின் உத்தர வு என்பதால் அவர்களால் மறுக்கவும் முடி யவி ல்லை. கொஞ்சம் தயங்கியபடியே, ''எங்களால் முடிந்தவரை கணித்துச் சொல்கிறோம்'' என்று கூறினார்கள். ''சரி, நான் ஜாதகத்தை தனித்தனியாக மூன்று பேரிடமும் கொடுக்கச் சொல்கிறேன். கணித்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். அதற்கு பிறகு என்னுடைய முடிவைக் கூறுகிறேன்'' என்றார். அதன்படியே மூன்று ஜோதிடர்களிடமும் ஜாதக ம் தரப்பட்டது. அவர்களும் தாங்கள் சொல்லிய படியே ஜாதகத்தைக் கணித்து பார்த்தனர். பின்னர், தங்கள் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்த போது, மூவரின் கணிப்பும் வேறு வேறாக இருந்தது. "ஜாதகரின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள்’' என்றார் ஒருவர். "இல்லை, முந்நூறு ஆண்டுகள்’’ என்றார் அடுத்தவர். "இல்லையில்லை, எழுநூறு ஆண்டுகள் என்பதே சரி’' என்றார் மூன்றாமவர். சுவாமிக ளுடன் இருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள். "உங்கள் திறமையில் முழு நம்பிக்கை உங்களு க்கு இருக்கிறதல்லவா? உங்கள் கணிப்பை முழு கவனத்துடன்தானே செய்தீர்கள்?'' என்று கேட்டார் ராகவேந்திர சுவாமிகள். '`ஆம் சுவாமி! அதில் சந்தேகமே இல்லை. அது வும் தங்களுக்காக மேற்கொண்ட பணியில் நாங்கள் சிரத்தையுடன் ஈடுபட வேண்டியது எங்கள் கடமையல்லவா?’' என்றனர். எனில், ஏன் அப்படி அவர்களின் கணிப்பி ல் வித்தியாசம் ஏற்பட்டது? எவருக்கும் ஒன் றும் புரியவில்லை. அனைவரும் திகைத்து நின்றார்கள். ஆனால், சுவாமிகளோ, "உங்களை சோதித்து பார்க்கவே இப்படிக் கேட்டேன். உங்களுடைய தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். நீங்கள் மூவரும் கணித்த கணிப்பு சரிதான்’' என்றார். '`சுவாமி, தங்கள் கட்டளைப்படி எங்கள் கடமை யைச் செய்து விட்டோம். ஆனால், தங்களிடம் ஒரு விளக்கம் பெற விரும்புகி றோம். தனித்த ன்மை வாய்ந்த இந்த ஜாத கத்துக்கு உரியவர் யார்?’' என்று கேட்டனர். ராகவேந்திரமகான் புன்னகைத்தபடி "நீங்க ளே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தே ன். அது என்னுடைய ஜாதகம்தான்’' என்றார். தொடர்ந்து, "என்னுடைய ஆயுள்காலத்தை மூன்று பேரும் மூன்று விதமாக கணித்தது சரி தான். எப்படி என்பதை நான் விளக்கு கிறேன். ஒருவர் ஆயுள்காலம் நூறு வயது என்று கூறியிருக்கிறார். நான் சரீரத்துடன் இருக்கும் காலத்தைத்தான் அவர் கணித் திருக்கிறார். எனவே, அவருடைய கணிப்பு சரி. அடுத்தவர் முந்நூறு ஆண்டுகள் என் று கூறியிருக்கிறார். அவர், எனது கிரந்த நூல்கள் பிரகாசம் அடை ந்து பரவும் கால த்தை கணித்துக் கூறினார். மூன்றாமவர் எழுநூறு ஆண்டுகள் என்று கூறி யிருப்ப து, நான் எழுநூறு ஆண்டுக ள் பிருந்தா வன வாசத்தின் மூலம் என் பக்தர்களை காப் பாற்றுவேன் என்பதைத் தான். ஆக மூவருடைய கணிப்பும் சரிதா ன்’’ என்று கூறி, மூவருக்கு ம் பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார்.. ஓம் பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனுவே. ஓம் குரு ராகவேந்திராய நமஹ... 12.03.2026.. நேசமுடன் விஜயராகவன்.... #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✡️ராசிபலன்
80 likes
1 comment 36 shares
'இன்சொல்லின் இறைவன்' சித்திரகூட மலையில் மந்தாகினி ஆற்றின் கரையில், அந்த அழகிய மாலை வேளையில், லட்சுமணன் வேய்ந்த சிறிய குடிலொன்றில் விறகு அடுப்பின் புகை மேலே கிளம்புகிறது. அடுப்படியில் சமைத்துக் கொண்டிருப்பவள் சாதாரணப் பெண் அல்ல; ஜனக மகாராஜனின் திருமகள், அயோத்தியின் மருமகள், லக்ஷ்மி தேவியின் அவதாரம். ஆனால் இன்று அவள் ஒரு இல்லத்தரசி மட்டுமே — கணவனுக்காக அன்போடு சமைக்கும் மனைவி. சீதாபிராட்டி வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். காட்டில் கிடைத்த கிழங்குகள், கனிகள், கீரைகள் என எல்லாவற்றையும் அன்போடு சமைத்திருந்தாள். "என் கணவர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வந்திருக்கிறார். அயோத்தியில் கிடைத்த அரசு விருந்து இங்கு இல்லை. ஆனால் என் அன்பு குறையாது. என் கைகளால் சமைத்ததை அவர் விரும்பி உண்ண வேண்டும்." இதுவே அவளின் ஒரே ஆசை. வெளியே இலக்குவன் காவல் நிற்கிறான். உள்ளே ஸ்ரீராமபிரான் தர்ப்பைப் புல்லில் அமர்ந்து வேதம் கற்கிறார். "ஆரியபுத்ரா! உணவு தயார்" என்று மெல்லிய குரலில் அழைத்தாள் சீதை. (வால்மீகி இராமாயணத்தில் சீதை இராமரை 'ஆர்யபுத்ர' என்று தான் அழைப்பாள்) அந்த மெல்லிய குரலைக் கேட்டதும் ஒரு புன்னகையுடன் ஸ்ரீராமபிரான் வந்து அமர்ந்தார். இலையில் உணவு பரிமாறினாள் சீதை. கண்கள் நிறைந்த பக்தியுடன் கணவனைக் கவனிக்கிறாள். "இது எப்படி இருக்கிறது?" ஸ்ரீராமபிரான் ஒரு கவளம் உண்டார். கண்கள் மூடினார்; பின் திறந்தார். ஒரு புன்னகை மலர்ந்தது. "சீதே... இது மிகவும் சுவையாக இருக்கிறது. காட்டில் கிடைக்கும் கிழங்கும் கனியும் உன் கைகளில் வந்தவுடன் அவை அமிர்தமாகின்றன." சீதையின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின. இன்னொரு காய்கறியைப் பரிமாறினாள். "இதுவும் சொல்லுங்கள்" என்று கேட்டாள். ஸ்ரீராமபிரான் சிரித்தார். "இதுவும் நன்றாக இருக்கிறது சீதே. சித்திரகூட மலையின் அருளும் உன் அன்பும் சேர்கின்றன. சுவை இரட்டிப்பாகிறது." சீதை வெட்கத்துடன் தலை குனிந்தாள். "இவர் எப்படி இப்படிப் பேசுகிறார்? ஒவ்வொரு முறையும் என் மனதை மலரச் செய்கிறார்." என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டே அடுத்த உணவை எடுத்தாள். அதைப் பார்த்ததும் சீதையின் கைகள் நடுங்கின. அந்த உணவு தீய்ந்திருந்தது. கவனம் சிதறிய ஒரு தருணத்தில், விறகடுப்பின் சூட்டில் அது கருகிப் போயிருந்தது. வெளியே பார்க்கவே வேண்டாம் என்று தோன்றும் நிறம். "என்ன செய்வது? இதனை அவருக்குப் பரிமாறிவிட்டால் அவர் மனம் நோகுமோ? பரிமாறாமல் இருந்தால் என்ன சொல்வது?" நெஞ்சு படபடத்தது. ஆனால் அவரிடம் ஒன்றையும் மறைத்ததில்லை சீதை. தயக்கத்துடன், நடுங்கும் கைகளுடன், தலை குனிந்தபடி பரிமாறினாள். "இது... இது எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. கண்கள் தரையைப் பார்த்தன. ஸ்ரீராமபிரான் உண்மையை மட்டுமே பேசுபவர். வாழ்நாளில் ஒருமுறை கூடப் பொய் சொன்னதில்லை. தர்மம் என்பது அவருக்கு மூச்சு போன்றது. வால்மீகி முனிவர் ஸ்ரீராமபிரானை வர்ணிக்கும்போது "ப்ரியவாதீ" (இனிமையாகப் பேசுபவர்), "வதான்யஸ்ச" (வள்ளல் குணம் உடையவர்), "சத்யவாதீ" (உண்மையே பேசுபவர்) என்கிறார். தன்னை மட்டுமே நம்பி, அரண்மனை சுகங்களைத் துறந்து கானகம் வந்த சீதையின் கண்களில் தெரிந்த அந்தப் பயத்தையும் வருத்தத்தையும் ராமரால் காண முடிந்தது. "இவளை மனம் நோகச் செய்யலாமா? ஆனால் பொய் சொல்லலாமா?" சத்தியமும் அன்பும் அங்கே போட்டியிட்டன. அந்தத் தருணத்தில் ஸ்ரீராமபிரானின் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது. "சீதே..." அவள் தலை நிமிரவில்லை. "சீதே, என்னைப்பார்." மெல்ல தலை நிமிர்த்தினாள்; கண்களில் கண்ணீர் தளும்பியது. ஸ்ரீராமபிரான் சிரித்தார். ஆழமான, அன்பான சிரிப்பு. "நீ மிகவும் நன்றாகச் சமைத்திருக்கிறாய். உன்னிடம் குறை இல்லை. ஆனால் இந்த அக்னி பகவான் சற்று அதிகமாகத் தன் வேலையைக் காட்டிவிட்டார் — அவரும் கொஞ்சம் தீய்த்து எனக்கு அளிக்கும் உணவில் சுவை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் போலும்!" சீதை ஒரு கணம் பார்த்தாள். "அப்படியானால்... இது நன்றாக இல்லையா?" என்று பயத்துடன் கேட்டாள். ஸ்ரீராமபிரான் அந்த உணவை எடுத்தார். ஒரு கவளம் உண்டார். முகம் மாறவில்லை. "சீதே, தீய்ந்த உணவு பார்ப்பதற்கு என்னைப்போலவே கருப்பாக (சியாமளம்) இருக்கிறது — அது அழகுதானே? அதைச் சாப்பிடுவதோ ஒரு தனிச்சுவை. எனக்குப் பிடித்திருக்கிறது!" அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதையின் இறுக்கமான நெஞ்சு திடீரென மலர்ந்தது. கண்களில் கண்ணீர் நின்றது; உதடுகளில் சிரிப்பு வந்தது. வெட்கம், ஆனந்தம், பக்தி என எல்லாம் ஒருசேரப் பொங்கின. "இவர் என்ன மனிதர்! தீய்ந்த உணவைக்கூட என் மனம் நோகாமல் பார்க்கிறார். சத்தியத்தையும் விடவில்லை, அன்பையும் விடவில்லை" என வியந்த சீதையின் முகம் வெட்கத்தில் சிவந்தது. கண்கள் நன்றியில் நனைந்தன. அவள் கைகளைக் கூப்பினாள். ஸ்ரீராம ஜெயராம் ஜெய ஜெய ராம்! 🙏 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்
249 likes
1 comment 236 shares