பொழுது போக்கு

12K Posts • 311M views
வாழ்க வளத்துடன் 🐶 _சில நேரங்களில், தொலைவில் இருந்து பார்கும்போது தவறாகத் தோன்றும் ஒரு செயலின் அடியில் இரக்கத்தின் கதை ஒளிந்திருக்கும்._ 🐶❤️ ஒரு நாய் கடையில் இருந்து ஒரு ரொட்டித் துண்டைத் திருடிவிட்டு ஓடுகிறது, கடைக்காரர் அதைத் துரத்துகிறார். முதல் பார்வையில் இது ஒரு சாதாரண திருட்டுச் செயலாகத் தெரிகிறது. ஆனால் சிறிது நேரத்தில் உண்மை எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது — அந்த நாய் அந்த ரொட்டியை அருகில் பசியோடு காத்திருந்த இரண்டு சின்ன பூனைக் குட்டிகளுக்குக் கொடுக்கிறது. 🥺🐱 இந்த சின்ன தருணம் வாழ்கை, வணிகம், மற்றும் தலைமைத்துவம் பற்றிய ஒரு சக்திவாய்ந்த பாடத்தைத் தாங்கியுள்ளது. வணிக உரிமையாளர்களாகவும், தலைவர்களாகவும், நாம் அடிக்கடி வெளிப்பார்வைக்குத் தெரிவதை வைத்து மிக வேகமாக முடிவு செய்துவிடுகிறோம். ஆனால் உண்மையான தலைமைத்துவம் தொடங்குவது, நாம் நின்று, புரிந்து, ஆழமாகப் பார்கக் கற்றுக்கொள்ளும்போதுதான். 👀✨ பணியிடங்களில், உறவுகளில், மற்றும் அன்றாட வாழ்வில், பல செயல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன, ஏனென்றால் அவற்றின் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பே நாம் எதிர்வினையாற்றிவிடுகிறோம். ஒரு சிறந்த தலைவர் என்பவர் மிக வேகமாக எதிர்வினையாற்றுபவர் அல்ல — மிக ஆழமாகப் புரிந்துகொள்பவர்தான். 💡 #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம்
9 likes
13 shares
வாழ்வதும், பூனைகள் வாழ்வதும் ஒரே வீட்டில் தான்... புலிகள் வாழ்வதும், புள்ளிமான்கள் வாழ்வதும் ஒரே காட்டில் தான்... சிறுமீன்கள் வாழ்வதும், சுறாமீன்கள் வாழ்வதும் ஒரே கடலில் தான்... இல்லாதவனுக்கும், இருப்பவனுக்கும் பூமி ஒன்று தான்... வாழ்க்கை என்பது... ஏழை, எளியோர்க்கு போராடி வெற்றி கொள்வது... ஏமாற்று அரசியல்வாதிக்கோ அடித்துப் பிடுங்கி சாப்பிடுவது... கொள்கை என்பார், கூட்டணி என்பார், அடித்தக் கொள்ளையில் ஆளுக்குப் பாதி பிரித்துக் கொள்வார்... ஏழைகள் முன்னேற ஒரே வழி கல்வி கற்பது தான்... அதிலும் கூட நுழைவுத்தேர்வு என்ற பெயரில் நுழைய விடாமல் தடுப்பதும்... புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழைகளின் கல்வி வளர்ச்சியைத் தடுப்பதும்... எதுவென சிந்திப்பீர், செயல்படுவீர், வெற்றி காண்பீர். 😊😊😊 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪
38 likes
57 shares
வாழ்க்கை தைரியத்தின் முதல் எதிரி யார் என்றால் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தான். இந்த இரண்டையும் முதலில் ஒரு மனிதன் அடியோடு ஒழித்து விட்டால் கண்டிப்பாக தைரியத்துடன் தான் காணப்படுவான். இன்று பூமியில் திறமையானவர்கள் மட்டுமே பெரிய பெரிய பதவிகளில், அரசியல்வாதிகளாக, தொழில் நுட்ப கலைஞர்களாக இருக்கிறார்கள். ஏன் விஞ்ஞானிகளை கூட எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் தான் திறமையின் மொத்த உருவமே. இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தங்களின் திறமைகளை தங்களின் தகுதியினை தங்களின் ஆற்றலை எப்படியோ ஒரு விதத்தில் மக்கள் உணரும்படி அறிந்திருக்கிறார்கள். எனவே அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். வேறு தகுதியானவர்கள் வேறு திறமையானவர்கள் இந்த பூமியில் இல்லையாயென்றால், இருக்கிறார்கள். பிறகு ஏன் அந்த தோராயமான நபர்கள் மட்டும் வெளியே தெரிகிறார்கள் என்றால் மீதம் உள்ள லட்ச கணக்கான திறமைசாலிகளுக்கு போதுமான மனதைரியம் இல்லை. அதாவது தனது திறமையை பயன்படுத்தி கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் போதிய தைரியம், துணிச்சல் இல்லாமல் அவர்கள் தங்களது வாய்ப்பை கோட்டை விட்டுவிடுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் உண்மையான திறமைசாலி வெளியே தெரியாததற்கு காரணம் என்னவென்றால் போதிய துணிச்சல் இல்லாததே. வயதான பெரியவர்கள் பெரும்பாலும் வாழ்வில் அனைத்து விதமான அனுபவங்களை பெற்று விடுவதால் அவர்கள் எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்வதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஆர அமர யோசித்துதான் செய்வார்கள். அதனால் அவர்களுக்கு பெரும்பாலும் தோல்விகள் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு என்ன செய்தால், எது நடக்கும் என்று தான் முன்பு பெற்ற அனுபவத்தின் வாயிலாக ஒரு கணிப்பு கணித்துவிடுகிறார்கள். வயதான பருவத்தில் ஏற்படும் தைரியம் காய்ந்த சுரைக்காய் ஆக அதுவும் கறிக்கு உதவாது. மாறாக இளமைப் பருவத்தில் உள்ளதே ஒரு தைரியம். அது தான் நம்மை எந்த ஒரு செயலையும் எந்த ஒரு சாதனையையும் எந்த ஒரு இலக்கையும் எந்த ஒரு லட்சியத்தையும் சாதகமாக நினைக்க வைத்து அதை சாதிக்க தக்க ஏற்பாடுகளையும் செய்கின்றது. எனவே எந்த ஒரு மனிதனும் இளமை பருவத்தில் உள்ள தைரியத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். எனவே புத்திசாலி இளைஞர்கள் கண்டிப்பாக அந்த தைரியத்தை ஆக்கப் பூர்வமான வழியில் பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி அடைவார்கள். தைரியத்தின் முதல் எதிரி யார் என்றால் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தான். இந்த இரண்டையும் முதலில் ஒரு மனிதன் அடியோடு ஒழித்து விட்டால் கண்டிப்பாக தைரியத்துடன் தான் காணப்படுவான். இந்த பரபரப்பான கம்ப்யூட்டர் உலகத்தில் அது எப்படி சாத்தியம் என்றால் தியானம் ஒன்றே தான் வழி. அதாவது தியானத்தின் மூலம் எந்த ஒரு பண்புகளையும், குணநலன்களையும் மாற்ற முடியும். அதன் பின்னர், நமக்கு கண்டிப்பாக ஒரு ஒளி மயமான எதிர்காலம் அமையும். #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
6 likes
20 shares