பொழுது போக்கு

13K Posts • 308M views
விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு இருக்கும் விஷயங்களுக்காக நன்றி சொல்லிப் பாருங்கள்‌ நீங்கள் நினைப்பதை விட உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்...!!! பக்குவப்பட்ட நிலத்தில் தூவப்பட்ட விதைகள் தான் நல்ல விளைச்சளைத் தரும். அதுபோல் பக்குவப்பட்ட மனதை கொண்டவர் வாழ்வில் தான் நல்ல வெளிச்சமும் வரும். நிதானம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிப்பார்கள். நிதானமே நம் வாழ்வின் பிரதானம். உங்கள் மீது கல்லெறிபவர்களுக்கெல்லாம்... பதிலுக்கு நீங்கள் கல்லெறிந்து கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது. புகழ்வதைக் காட்டிலும் ஊக்கப்படுத்துவது சிறந்தது. வாழ்வதைக் காட்டிலும் வாழ வைப்பது சிறந்தது. இதை மனதில் வைத்து வாழ்ந்தால் வாழ்க்கையே சிறந்தது. சினம், கவலை, பேராசை இம்மூன்றும் வாழ்க்கைக்கு நன்மை தரும் வழிகளை அடைத்து விடுகின்றது. மனிதர்கள் முன்பாக நல்ல பெயர் வாங்குவதை விட மனசாட்சி முன்பாக நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள். நல்ல விஷயம் நடக்கும். பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள். நிம்மதியை பக்கத்தில் வைத்துப் பாருங்கள். அற்புதமான வாழ்வு வரும் அனுபவியுங்கள். "உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்.. விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும். நாம் எதிர்பார்த்துக் காத்திருந்தால் எதுவும் நடக்காது. நாம் எதிர்பாராத நேரத்தில் அது நடக்கும். அதுதான் இறைவனின் செயல். இறைவனையே நம்புங்கள். அவர் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்ததை விட மேலானவற்றையும் தந்து உங்களுக்கு மகிழ்விப்பார். 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு
23 likes
12 shares
! சுத்தியல் ஒன்றுதான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது. ஒருநாள் சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை. அவன் மீண்டும் அடித்தான்; ஆனாலும் பூட்டு திறக்கவில்லை. அப்போது அவன் மனைவி “பூட்டை உடைக்காதீர்கள்; சாவி கிடைத்து விட்டது” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள். அவன் சாவியை வாங்கிப் பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான். சாவியையும் சுத்தியலையும் அருகிலேயே வைத்து விட்டுப் போய்விட்டான். சுத்தியலுக்கோ மிக அவமானமாக இருந்தது. “மிக வலிமையான நம்மால் திறக்க முடியாத பூட்டை, இந்தச் சிறிய சாவி திறந்து விட்டதே” என்று வருந்தியது. சுத்தியல் சாவியிடம் பேச்சுக் கொடுத்தது. “நான் உன்னைவிட மிகவும் #வலிமையானவன்; ஆனால் நான் பூட்டைத் திறக்க மிகவும் கஷ்டப்படுகிறேன். நீ என்னைவிட மிகவும் #எளிமையானவன்; ஆனால் எளிதில் பூட்டைத் திறந்து விட்டாயே; என்ன காரணம்?” என்று சுத்தியல் சாவியிடம் கேட்டது. அதற்கு சாவி சொன்னது “நீ என்னைவிட பலசாலிதான். ஆனால் நீ பூட்டை உடைக்க அதன் தலையில் தட்டுகிறாய். அதனால் அதுவும் தன் பலத்தைக் காட்டி உன்னை எதிர்க்கிறது. எனவே உனக்கு பூட்டைத் திறப்பது கடினமான வேலையாகிறது.” “நான் பூட்டைத் திறக்க அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு திறந்து கொடுக்கின்றது; எனவே என் வேலை எளிதாகின்றது.” என்று சாவி சொன்னது. நாமும் மற்றவர் #மனம் என்னும் பூட்டைத் திறக்க, #அதிகாரம் என்னும் சுத்தியல் கொண்டு அடிக்காமல் #அன்பு என்னும் சாவியைப் பயன்படுத்தலாமே! 😊😊😊 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪
27 likes
27 shares