ஆண்மீக சிந்தனைகள்

3K Posts • 3M views
A Mohan Raj
2K views 6 hours ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நம்பியாண்டார் நம்பி அருளிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி* ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, சைவ சமயத்தின் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு புகழ்பெற்ற நூலாகும். திருஞானசம்பந்தரின் மீது அதீத பக்தி கொண்ட நம்பியாண்டார் நம்பி இந்நூலை இயற்றினார். இஃது திருஞானசம்பந்தரின் சீகாழிப் பெருமை, அவரது அற்புதங்கள் மற்றும் சிவனருளைப் போற்றிப் பாடும் பக்தி இலக்கியமாகும். பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து நம்பியாண்டார் நம்பி அருளிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி* பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே. 1 பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள் நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய கதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே. 2 காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா மாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த ஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே. 3 இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும் பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே விரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள் தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே. 4 மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப் பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய பொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர் துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே. 5 தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர வண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம் விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே. 6 வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து முத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு புத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே. 7 புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி உணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும் குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய் மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே. 8 குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால் அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன் பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள் திருந்திழை ஆர்வம் ............ .............. முரசே. 9 முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின் பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ அரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன் சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே. 10 மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள் தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந் தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ மொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே. 11 வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. 12 வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால் தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற் காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே. 13 அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத் தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப் பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக் கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே. 14 நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள் பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம் மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே. 15 நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த குலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும் சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று நலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே. 16 நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே போதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி ஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது காதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே. 17 கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர் வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ டிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத் தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே. 18 பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க் கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர் நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும் சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே. 19 வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல் நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம் நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும் திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே. 20 கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத் திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால் திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின் வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே. 21 வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர் ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க் காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே. 22 மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப் பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத் தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே. 23 அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால் கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே. 24 அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக் கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக் கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர் வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே. 25 சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள் பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும் அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர் சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே. 26 திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர் கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய எண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே. 27 எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித் தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக் குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள் கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே. 28 கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா நற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட் டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே. 29 எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர் வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன் றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே. 30 ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும் வெளிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும் அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும் களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே. 31 கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம் செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம் நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும் குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே. 32 கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட் டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச் சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய் உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே. 33 உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப் பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத் தெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளே துறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே. 34 இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின் புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள் நடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன் அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே. 35 மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள் தானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள் கோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப் பூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே. 36 புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண் மலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன் தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே. 37 குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல் கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே தழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மை அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே. 38 அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண் கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப் பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோ டிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே. 39 இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர் பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகை அருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்த பெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே. 40 பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன் தேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கை ஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க் காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே. 41 பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால் வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்த பொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே. 42 பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள் தென்னாட் டரண்அட்ட சிங்கத் தினைஎஞ் சிவன்இவனென் றந்நாள் குதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த என்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே. 43 மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி வேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்த கோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ் சோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே. 44 சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின் றாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம் வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே. 45 மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித் துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர் மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால் குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே. 46 குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன நறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென் றுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற் சிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே. 47 இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக் கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள் முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும் மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே. 48 வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண் டயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே. 49 புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி எண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்கு நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க் கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே. 50 பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும் ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின் தூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன் நாமஞ் செவிக்கிசையா நாள். 51 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
52 likes
118 shares