பக்தி #சிவபெருமான்

62 Posts • 255K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 1 months ago AI indicator
காலை சிவசிந்தனை ===================== எந்த பிறவி எடுத்தால் என்ன? சிவபக்தியே முக்கியம் ============================ ஆதிசங்கரர் சிவானந்த லஹரி பாடல்=10 நரத்வம்....... தேன வபுஷா || மனிதப்பிறவியோ,தேவப் பிறவியோ,அல்லதுமலைகளிலும்,காடுகளிலும்அலைந்துதிரியும்மிருகங்கள்,கொசு,பசு,புழு,பறவைபோன்றஎந்தப் பிறவியாயினும் ஏற்படட்டும்.பரமேஸ்வரா எப்பொழுதும் உன்னுடைய திருவடித்தாமரைகளை விட்டுநீங்காமல்இருந்து தியானம் செய்து அந்தபேரானந்த வெள்ளத்தில் விளைய மகிழும் உள்ளம் மட்டும்வாய்க்குமானால், எத்தகையஉடலைப் படைத்தால்தான் என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? அப்பர் பெருமான்தேவாரம் =========================== பாடல் எண்: 8 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கியிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே- பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
60 likes
5 comments 26 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
4K views 1 months ago AI indicator
காலை சிவ சிந்தனை ================= சிவ பூஜை மான்மியம் : ================== விண்ணவர் , முநிவர் , எவ்வெத் தலங்களிற் சிவபெருமானை உமையுடன் வழிபட்டனர் , எங்களுக்கு உணர்த்தியருளுக என முநிவர்கள் கேட்கச் ஶூதமாமுனிவர் கூறுகின்றார் . திருமால் திருமால் : - காசியிற் சிவனைப் பூசித்துக் காத்தல் தொழிலும் , ஐந்தாயுதமும் , திருமகளும் , கருடவாகனமும் பின்னும் பல வரங்களும் அளிக்கப் பெற்றார் . சிவலோகத்தின் கீழே வைணவபதத்தில் இருக்கப் பெற்றார் . பிரமன் பிரமன் : - காஞ்சியிற் பிஞ்ஞகனை வழிபட்டுப் படைத்தல் தொழிலும் கலைமகளும் , அன்னவாகனம் முதலியவும் தரப்பெற்று வைணவபதத்தின் கீழ் இருக்கப் பெற்றான் . அந்த இடம் பிரமலோகம் எனப்படும் . இந்திரன் இந்திரன் : -ஸ்ரீ சைலத்தில் ஈசனை அருச்சித்து வானுலக ஆட்சியும் , புலோமிசை( இந்திராணி ) யும் , ஐராவதமும் , உச்சைச்சிரவமும் , குலிசப்படையும் , கற்பகத்தருவும் , காமதேனுவும் , சிந்தாமணியும் , கீழ்த்திசையரசும் கிடைக்கப் பெற்றான் . அக்கினி அக்கினி : - அண்ணாமலையில் அண்ணலைப் பூசித்து அக்கினிகளுக்கு அரசும் , சுவாஹா தேவியும் , ஆட்டுவாகனமும் , சத்திப்படையும் , தென்கீழ்த் திசை அரசும் பெற்றான் , இயமன் : - கேதாரத்தில் எம்பெருமானை வழிபட்டுத் தண்டமும் , எருமைக் கடா வாகனமும் , நடுவன் என்ற நிலையும் பெற்றுத் தென்றிசைக்குத் தலைவனானான் : மற்றும் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் புகவேண்டிய உயிர்களின் புண்ணிய பாவம் அறிந்து கூறும் சபையினரையும் , கதிரவன் முதலான உயிர்கள் புரியும் கருமத்தை அறிந்துரைக்கப் பதினான்கு எழுத்தாளர்களுக்குத் தலைமை பூண்ட சித்திரகுத்தனையும் பெற்றான். நிருதி : - நிருதி கோகரணத்தில் நீலகண்டரைப் பூசித்து வாளும் , அரக்கர் சேனையும் பெற்றுத் தென்மேற்குத் திசைக்குத் தலைமை கொண்டான் . வருணன் வருணன் : - திருவானைக்காவில் வள்ளலை வழிபட்டு மகரமீன் வாகனமும் , பாசம் முதலிய படைகளும் , கடலரசும் மேற்றிசைத் தலைமையும் பெற்றான் . வாயு : வாயு காளத்தியில் மங்கைப்பாகனைப் பூசித்துக் காற்றின் தலைமையும் , பல படைகளும் , வடமேற்குத் திசை அரசும் பெற்றான் . குபேரன் : - குபேரன் சித்தேச்சுரத்திற் குன்ற வில்லியைப் பரவி வடதிசையரசும் நவநிதித் தலைமையும் , புட்பக விமானமும் , இயக்கர் முதன்மையும் , கதை முதலாம் படைகளும் , சிவபெருமானது தோழமையும் அருளப் பெற்றான் . ஈசானன் ஈசானன் : - திருவாரூரில் எந்தையைப் பூசித்துப் பெயருக்கு ஏற்ப சிவரூபமும் , படைகளும் , விடைவாகனமும் , பிற சிவசின்னங்களும் வடகீழ்த் திசையரசும் , அதிகாரம் முடிந்தவுடன் சிவனடி நிழல் வாழ்வும் வேண்டிப் பெற்றனன் . சூரியன் : - சூரியன் காஞ்சியிற் சூலபாணியைப் பூசித்து மறைமண்டலத்தில் தனி இருப்பும் , ஏழ்பரித்தேரும் , நவக்கிரகத் தலைமையும் பெற்றுப் பகுதி மண்டலத்திலே இருக்கப் பெற்றான் . சந்திரன் : - சந்திரன் கும்பகோணத்திற் சம்புவை ஆராதித்துப் பயிர்களுக்கு அரசும் , நக்ஷத்திரங்களுக்கு நாயகனாம் , பேறும் பெற்றுப் , பரமனுக்கு ஆபரணமுமாகிச் சூரியனுடன் மேருவை வலம்வரப் பெற்றான் . கிரகங்கள் இவ்வாறே செவ்வாய் ( அங்காரான் ) திருவிடைமருதூரிலும் , புதன் மதுரையிலும் , வியாழன் ( குரு பிரகஸ்பதி ) சேதுவிலும் , வெள்ளி ( சுக்கிரன் ) திருவாலங்காட்டிலும் , சனி வேதாரணியத்திலும் பரமனை வழிபட்டுச் சோம சூரிய மண்டலங்களின் மேற்கே அருகிலேயிருந்து உயிர்களின் வினைக்கீடாக அனுபவம் தரவும் , வியாழன் தேவர் குருவாகவும் , வெள்ளி அரசர் குருவாகவும் இருக்கப் பெற்றனர் . ஏழு முநிவர் : வசிட்டர் முதலான ஏழுமுநிவரும் ( தில்லைச் ) சிற்றம்பலத்திலே சிவனை வழிபட்டுப் பல நூல் உணர்வும் , நவ கோள்களின் மேல் நிலையிலே வாழும் பேறும் , இறுதியிற் பேரின்ப வீட்டை அடையும் வாழ்வையும் பெற்றனர். ஸ்ரீ ஶூதமாமுனிவர் மேலுஞ் சொல்கிறார் : உத்தான பாதன் மைந்தன் துருவன் காசியில் விஸ்வேச்சுரனை வழிபாடு செய்து அளவற்ற வரங்களையும் எழுமுநிவர் நிலைக்கு மேலான நிலையும் , எழுமுநிவரும் தன்னைச்சுற்றி வரும் பேற்றையும் பெற்று உயர் பதத்தில் திகழ்கின்றான் . ஆதிசேடன் கும்பகோணத்திற் பரமனை அருச்சித்துக் கடல் புவியனைத்தும் முடித்தலையிற் சுமக்கும் பேறு பெற்றான் . இப்படியே எண்ணற்ற தலங்களினும் மலைமுடியினும் கடல் கரைகளிலும் இமையவரும் , முநிவரும் , சித்தரும் , காருடரும் , கந்தருவரும் , வித்தியாதரரும் , இயக்கரும் , சாகரும் மற்றும் பலரும் இறைவனைப் பூசித்துத் தத்தம் பதவியையும் வரங்களையும் பெற்றனர் . ஆகையால் அறத்தை விரும்பும் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வகைப் பொருளையும் பல்கும் சிவபூஜை செய்யவேண்டும் . இறை வழிபாட்டாற் சித்தராயினர் சிலர்.இங்கனம் வழிபட்டுப்புகழ் பெற்றவர் சனகாதசித்தர் கபிலராதியோர் நித்தராயினர் . சிலர் சாலோகத்தையும் , சிலர் சாமீபத்தையும் ,சிலர் சாரூபத்தையும் , சிலர் சாயுச்சியம் எனும் இறைவன் திருவடி நிழலையும் பெற்றனர் . சில மானிடர் சிவவழிபாட்டால் அளவற்ற செல்வத்தை இம்மையிலே பெற்றும் செல்வச்செருக்கால் மாயையில் மீளவும் மூழ்கி மறுபடியும் வழிபட்டார் . மற்றும் வெற்றி வேண்டினவர் வெற்றியையும் , மனைவி மக்களை வேண்டினவர் மனைவி மக்களையும் , பசு , வாகனம் , செல்வம் , அழகு , வடிவு , வண்மை , சத்தியம் . பராக்கிரமம் முதலிய வேண்டினவர் தாம் வேண்டினவற்றையும் சிவபூஜை வழிபட்டாற் பெற்றனர். திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம் என்னும் நூலில் இருந்து. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி #ஓம் நமசிவாய
70 likes
107 shares