குர்பானிசட்டங்கள்

3 Posts • 315 views
Islamic Way ❤️ Of Life
3K views 1 months ago
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் உங்கள் வாழ் நாளில் மிகச் சிறந்த 10 நாட்களாகும்: அல்லாஹ் தான் படைத்தவற்றில் ஓர் சிலதை விட சிலதை சிறப்பாக்கியிருக்கின்றான். ஓர் சில மாதங்களை விட மற்றும் சில மாதங்களை, ஓர் சில நாட்களை விட மற்றும் சில நாட்களை சிறப்பாக்கியிருக்கின்றான். துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களையும் அல்லாஹ் ஏனைய நாட்களை விட சிறப்பாக்கியிருக்கின்றான். ஒரு முஃமினுடைய வாழ்வில் மிக மகத்தான நாட்களே! துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள். இந்த மகத்தான நாட்களை இறை நெருக்கத்தைப் பெறும் விதத்தில் நற்செயலகளின் மூலம் அழகுபடுத்துவதற்கு ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 1- அல்லாஹ் துல் ஹஜ் மாத முதல் பத்து இரவுகளையும் அதன் மீது சத்தியமிட்டு கண்ணியப் படுத்தியுள்ளான். وَلَيَالٍ عَشْرٍۙ‏ "பத்து இரவுகளின் மீது சத்தியமா", (அல்குர்ஆன் : 89:2) பத்து இரவுகள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளாகும். என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். 2- துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விட சிறப்புக்குரியதாகும்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளை யும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள். (புஹாரி 969) ஏனைய நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியவைகளகாகும். ஏனைய நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சறிப்புக்குரியவைகளாகும். ஏனைய அனைத்து நற்செயல்களும் இவ்வாறுதான். உங்கள் வாழ் நாளில் மகத்தான அந்த 10 நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு இதோ சில வழி காட்டல்கள்: 1- பாவ மீட்சி: கடந்த காலத்தில் நிழக்ந்த அனைத்து பாவங்களுக்கும் உள்ளமுறுகி தூய உள்ளத்துடன், மன உறுதியுடன் அந்தப் பாவங்களை மறு படியும் எனது வாழ்வில் நான் எண்ணிக் கூட பார்க்க மாட்டேன் என்ற மன உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி அவன் பால் மீண்டவராக, எந்தப் பாவமும் அற்ற தூய மனிதராக துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை வரவேற்கத் தயாராகுங்கள். #qurbanreminder #குர்பானிசட்டங்கள் #islam #உழ்ஹிய்யா
101 likes
2 comments 44 shares
Islamic Way ❤️ Of Life
540 views 20 days ago
உழ்ஹிய்யா கொடுப்பவர்: உழ்ஹிய்யா கொடுப்பவர் வெறும் மாமிசத்தைப் பங்கிடுவதை மாத்திரம் தனது இலக்காக் கொள்ளாமல் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வது கடமையாகும். 01. இஹ்லாஸ் (மனத்தூய்மை): உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் புகழும், அவர் நல்லவர் என்ற எண்ணமும் சமுதாயத்தில் வளர்வது இயல்பானது. ஆனால், அதை அவர் எதிர்பார்க்கக்கூடாது. இறைவனின் திருப்தியை மட்டும் இலக்காக்கொண்டு அவனுக்காக என்ற கலப்பற்ற தூய்மையான எண்ணத்துடன் அதை நிறைவேற்றல் வேண்டும். இவ்வாறு செய்வதாலேயே இஸ்லாம் காட்டித் தந்த கடமையை நிறைவேற்றியவராக அவர் மாறமுடியும். மற்றவர்களின் புகழுக்காகவும் பெயருக்காகவும் செய்துவிட்டு இறைவனிடம் கூலியை எதிர்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. “உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02) “(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” (22:37) இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் எனக்காக ஒரு அமலைச் செய்து பிறருக்கும் அதில் பங்கு கொடுக்கிறானோ அவனையும் அவன் செய்த அமலையும் நான் விட்டு விடுகிறேன்.” (முஸ்லிம்) “நான் உங்களிடத்தில் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: முகஸ்துதி என்று பதிலளித்தார்கள். இவ்வாறு முகஸ்துதிக்காக செயற்பட்டவர்களை நாளை மறுமையில் அல்லாஹ்: யாருக்கு காட்டுவதற்காக அவர்கள் அமல் செய்தார்களோ அவர்களிடமே செல்லுமாறும், அவர்களிடம் கூலி கிடைக்கிறதா என்று பார்க்குமாறும் கூறுவான்.” (அஹ்மத், பைஹகீ) #உழ்ஹிய்யா #குர்பானிசட்டங்கள் #🌙ஈத் கோட்ஸ்☪ #hajj #⚡ஷேர்சாட் அப்டேட்
10 likes
16 shares
Islamic Way ❤️ Of Life
651 views 1 months ago
"இன் ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில் துல்ஹஜ் பிறை 🌙 ஆரம்பமாகும் குர்பானி கொடுப்பவர்கள் உங்களுடைய அவசிய தேவைகளை அதற்குள் முடித்துக் கொடுங்கள்!! பலருக்கும் எழக்கூடிய கேள்வி என்னவென்றால், 'வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தச் சட்டமா?' அறிஞர்களின் பதில்: "யார் சார்பாக குர்பானி கொடுக்கப்படுகிறதோ அவருக்கு இது. குடும்பத் தலைவர் தம் சார்பாகக் கொடுத்தால் அவர் இதைப் பேண வேண்டும். அல்லது அவரே தமது மனைவியின், பிள்ளையின் சார்பாக தம் பணத்தைக் கொடுத்துச் செய்தாலும், அவர்கள் மட்டும் இதைப் பேண வேண்டும். அனைவரும் அல்ல. 'உங்களில் ஒருவர்' என்றே நபியவர்கள் குறிப்பாக்கினார்கள். யார் கொடுப்பாரோ அவர்." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்" என்றார்கள். 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3997📚 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3998📚 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3999📚 #qurbanreminder #hajjreminder #islam #குர்பானிசட்டங்கள் #உழ்ஹிய்யா
20 likes
7 shares