காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔

72 Posts • 835K views
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சிவகுமாரின் மனைவி சுஜாதாவுக்கும், அவரது நண்பரான அச்சுதானந்தனுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அச்சுதானந்தனின் மனைவி பரிமளா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரிடம் எச்சரித்துள்ளார்..... இந்நிலையில், சம்பவத்தன்று சுஜாதா தனது கணவரை செல்போனில் அவசரமாக வீட்டிற்கு அழைத்ததையடுத்து, கதவு திறக்கப்படாததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று சிவகுமார்பார்த்தார். அப்போது தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுஜாதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்; இந்தத் தகவலறிந்த அவரது கள்ளக் காதலன் அச்சுதானந்தனும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோத்தகிரி காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், சுஜாதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
20 shares
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு தடையாக உள்ள கணவரை இரண்டு முறை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்ததால் ரூ 5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்து எரித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் ​​இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார். இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர்... இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
10 shares
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரது செல்போனைச் சோதித்தபோது யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது... அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு மீறிய ரகசியத் தொடர்பு இருப்பது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலால் ராஜேஸ்வர ராவ் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் வாட்ஸ்அப் சாட்களை ஆழமாகப் படித்துப் பார்த்தபோது, அது வெறும் காதல் பேச்சுகளாக மட்டும் இல்லாமல் கொடூரமான கொலைத் திட்டமாக இருந்ததைக் கண்டு அவர் உறைந்துபோனார். "என் கணவரைக் கொலை செய்துவிட்டு, அதை யாருக்கும் சந்தேகம் வராதபடி ஒரு விபத்து போல சித்தரித்துவிடு" என்று தனது ஆண் நண்பரிடம் அந்தப் பெண் மிகத் துல்லியமாகத் திட்டம் தீட்டிப் பேசியிருப்பது ஆதாரத்துடன் சிக்கியது.... தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்ட அந்த வாட்ஸ்அப் உரையாடல்களை உடனடியாகத் தனது மொபைலில் ஆதாரமாகத் திரட்டிய ராஜேஸ்வர ராவ், உள்ளூர் காவல் நிலையத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிப் புகாரளித்தார். போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #🥰கள்ளக்காதல் வேணுமா வா💪
11 shares