காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔

103 Posts • 821K views
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனவள்ளி பின்னர் இருவரும் தமிழரசனின் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒன்றாக வசித்து வந்தனர். தந்தை ராஜன் மரம் அறுக்கும் வேலைக்கும், தாய் லட்சுமி ஓட்டலில் கூலி வேலைக்கும் சென்று வந்தனர். தினமும் காலை வேலைக்கு செல்லும் தமிழரசன் இரவு தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. ஆனால் ராஜன் மரம் அறுக்கும் தொழிலாளி என்பதால் காலை வேளைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்புவர் என சொல்லப்படுகிறது. எனவே வீட்டில் மருமகளுடன் நெருங்கி பழகி வந்த ராஜனுக்கும், அவரது மருமகள் சத்யவாணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தினமும் மதியத்திற்கு மேல் அவர்கள் தமிழரசன் வீடு திரும்பும் வரையில் தங்களின் திருமணத்திற்கு மீறிய உறவை தொடர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் கர்ப்பமான சத்யவாணிக்கு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் அடுத்த 2 மாதத்தில் சத்யவாணி மீண்டும் கர்ப்பமாக தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே தனது மனைவிக்கும், தந்தைக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், அவர்கள் தான் இல்லாத நேரத்தில் எல்லை மீறி போகிறார்களே என்ற சந்தேகம் தமிழரசனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் சத்யவாணிக்குபெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தமிழரசன் மனைவியிடம் சண்டை போட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சத்யவாணி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு வாரம் இருந்து விட்டு கடந்த (மார்ச் 17) ஆம் தேதி மாலை உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கணவன் வீடு திரும்பினார். அடுத்த நாள் (மார்ச் 18) ஆம் தேதி மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமனார் ராஜன், மருமகளை வழக்கம் போல உல்லாசமாக இருக்க அழைத்ததாக சொல்லப்படுகிறது . அப்போது குழந்தை அழவே குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் போட்ட சத்யவாணி பாத்ரூமுக்கு சென்றார். அந்த நேரம் அங்கிருந்த ராஜன் இந்த குழந்தை பிறந்தது முதல் நமக்கு பிரச்சினையாக இருக்கிறதே என்றும் உல்லாச வாழ்க்கைக்கும் தொந்தரவு செய்கிறது என்றும் நினைத்து ராஜன் குழந்தையின் மூக்கை பிடித்து அழுத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனிடையே பாத்ரூமில் இருந்து வந்த சத்யவாணி குழந்தை தலை தொங்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் மருத்துவமனைக்கு செல்ல நினைத்த சத்யவானி குழந்தை தலை தொங்கி இறந்துவிட்டதை உறுதி செய்து என்ன செய்வது என தெரியாமல் இருந்திருக்கிறார். பின்னர் குழந்தை இறந்துவிட்டது என தெரிந்தால் கணவர் என்ன செய்வாரோ என்ற அச்சத்தில் குழந்தையின் உடலை தூக்கி சென்று அருகில் உள்ள சேட்டு என்பவரின் கிணற்றில் போட்டு விட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனிடையே வீட்டிற்கு வந்த குழந்தையின் தந்தை தமிழரசன் குழந்தை எங்கே என கேட்க, எதுவும் நடக்காதது போல் சத்யவாணி தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதே போல தந்தை ராஜனுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்க அவரும் தனக்கு தெரியாத என கூறி நாடகம் ஆடியுள்ளார். இதையடுத்து குழந்தையை தமிழரசன் தேடி வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கிணற்றில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டுபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனஹள்ளி போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் முதற் கட்டமாக மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தையை மாமனாரான ராஜன் கையால் அழுத்தி கொலை செய்ததும், பின்னர் மருமகள் தெரியாமல் இறந்த குழந்தையை அருகில் இருந்த கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து சத்யவாணி, அவரது மாமனார் ராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாமனாருடன் ஏற்பட்ட விபரீத உறவால் 5 மாத குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
27 likes
12 shares
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் வசித்து வருபவர் அஜித் வயசு 26 இவரின் மனைவி சுதா இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுதாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து அறிந்த கணவன், மனைவி சுதாவிடம் இது குறித்து கேட்டு வந்ததில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த அஜித், மனைவி வீட்டில் இல்லாததை கவனித்து, சுதாவைத் தேடி சென்றுள்ளார். அப்போது அவர் அருகிலுள்ள பக்கத்து வீட்டு இளைஞரின் வீட்டிலிருந்து வெளியே வருவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். அப்போது கோபத்தில் அஜித் சுதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தாக்கிய பின்னரும் ஆத்திரம் தீராமல் அரிவாளை எடுத்து சுதாவை தலையை வெட்டியுள்ளார். அதன் பின்னர் சுதாவின் தலையை வாசலில் வைத்துள்ளார். அலறியபடியே அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவலளித்த நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அஜித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 ##📢மார்ச் 13 முக்கிய தகவல்🤗
5 likes
12 shares
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரைச் சேர்ந்த 41 வயதாகும் அப்துல்லா ( கூலித்தொழிலாளி ஆவார் அவருடைய மனைவி அனீஸ் பாத்திமா (39). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அனீஸ் பாத்திமாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதாகும் ஜெயபாண்டி என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இது அப்துல்லாவுக்கு தெரியவந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும் அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் அனீஸ் பாத்திமாவின் அண்ணன் ஜெய்லானிக்கு தெரியவந்துள்ளது. அவர் தனது தங்கையை கண்டித்தார். அதனால், அவர் தனது அண்ணன் மீது போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்துவிட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். தங்கம் விலை ஆறு மடங்கு உயருமா.. 1980ல் ஈரானில் நடந்த இதே சம்பவம்.. பொருளாதார நிபுணர் விளக்கம் இதற்கிடையே கள்ளக்காதலனின் தூண்டுதலின்பேரில் அனீஸ் பாத்திமா தனது கணவருக்கு உணவில் விஷத்தை (பூச்சிக்கொல்லி மருந்து) கொஞ்சம், கொஞ்சமாக கலந்து தினமும் கொடுத்து வந்தார். மெல்லக் கொல்லும் விஷமாக அவர் இதை செய்து வந்த நிலையில், உணவின் சுவையில் மாற்றம் இருப்பதை அறிந்த அப்துல்லா இந்த விஷயத்தை அனீஸ் பாத்திமாவின் அண்ணன் ஜெய்லானியிடம் கூறினார். இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அப்துல்லா உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் அனீஸ் பாத்திமா தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவானார். இதனால், அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெய்லானி புகார் கொடுத்தார், அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் உள்ளுறுப்புகளை சேகரித்து, மதுரை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு ஆய்வு முடிவில், உணவில் கொஞ்சம், கொஞ்சமாக பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்ததால், அப்துல்லா உடல் நலம் பாதித்து உயிரிழந்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனீஸ் பாத்திமா, ஜெயபாண்டி ஆகிய 2 பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில், அனீஸ் பாத்திமா மற்றும் ஜெயபாண்டி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்வ #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் ர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார்.
14 likes
15 shares