காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔

112 Posts • 829K views
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி காமாட்சி (28). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (64) என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாகப் பணம் கொடுக்கல் வாங்கல் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காமாட்சியை காட்டுமன்னார்கோவிலுக்கு வருமாறு கூறி, உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. முதியவரின் இந்த செயலால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனைச் செருப்பால் அடித்துள்ளார். மேலும், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த காமாட்சி, "இனிமேல் இப்படி நடந்துகொண்டால், இந்த வீடியோவை உனது உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன்" என மிரட்டியுள்ளார். இருப்பினும், ஆத்திரம் தீராத காமாட்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த செருப்படி வீடியோவை மகேந்திரனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மகேந்திரன் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் காமாட்சியின் வீட்டிற்குச் சென்ற மகேந்திரன், அவரிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து காமாட்சியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமாட்சி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமாட்சியைத் தாக்கியபோது, அதனைத் தடுக்க முயன்ற அவரது தந்தை பாண்டுரங்கனையும் மகேந்திரன் கட்டையால் சரமாரியாகத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பாண்டுரங்கன், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், காமாட்சியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோட முயன்ற கொலையாளி மகேந்திரனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம்
15 likes
12 shares
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள மயில்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (எ) தர்மராஜா(40). கார் டிரைவர். இவரது மனைவி அட்சயா(35). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான அட்சயா, திருச்சி, கோவையில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார். தவெக தலைவர் விஜயின் தீவிர ரசிகை. சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் திருச்சியில் பணி புரிந்த போது அட்சயாவுக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் அடிக்கடி மயில்பாளையம் வந்து அட்சயாவை சந்திப்பார். இது தெரிந்ததால், ராஜா மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி அட்சயா தனியாக இருக்கும் போது அவரது கணவர் கையும் களவுமாக பிடித்து மனைவியை தட்டி கேட்கிறார். மேலும் வீட்டில் உள்ள அவனை வெளியே வரச்சொல்லுமாறு கூறினார். அந்த நபர் வெளியே வந்ததும் அவரை தாக்கினார். பின் அந்த நபர், வீட்டை விட்டு ஓடுகிறார். இப்படி அந்த வீடியோ முடிகிறது.இதனிடையே ராஜா அழுது கொண்டே பேசும் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ''தமிழக காவல்துறைக்கு வணக்கம். இன்று என் குடும்பமே அழிந்து போய் விட்டது. என் குழந்தையும் என்னுடன் சேர்ந்து சாகப்போகிறான். என் மனைவியை கத்தியால் கிழித்து போட்டு விட்டு வந்து விட்டேன். இது எல்லாத்துக்கும் காரணம் திருச்சியை சேர்ந்த ஜோஸ் என்பவர் தான். அவனால் எல்லாமே போய் விட்டது என்று வீடியோவில் பேசியுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், மயில்பாளையத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் ராஜா-அட்சயா தம்பதியிடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்ட ராஜா கத்தியால் அட்சயாவின் வாய், கன்னம், உதட்டில் சரமாரியாக குத்தினார். பின்னர் அட்சயாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு மகனை தூக்கி கொண்டு தப்பியது தெரியவந்தது. படுகாயமடைந்த அட்சயா, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் வல்லத்தில் மகனுடன் ராஜா இருப்பது தெரியவந்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று வல்லத்துக்கு சென்று அங்கு மகனுடன் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து பட்டுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
6 likes
16 shares
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப், டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், கன்னிவாடி சார்பு ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கன்னிவாடி ரெட்டியார் பட்டியைச் காலனியை சேர்ந்த காசிராஜா (வயது 42). அவரது மகன்கள் சஞ்சய் (வயது 20) மனோஜ் குமார் (வயது 21) வாடிப்பட்டி தாலுகா கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த ஜானகிராமன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் காசிராஜாவின் மனைவி மருதாயம்மாளுக்கும் கொலையான பாலசுப்பிரமணியத்திற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று காசிராஜன் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எ எழுந்து பார்த்தபோது தனது மனைவி மருதாயம்மாள் வீட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். எனவே உடனடியாக தனது மகன்களுடன் காசிராஜன் தனது மனைவியை தேடி சென்ற போது வீட்டின் வெளியே மருதாயம்மாள் இல்லாததை அடுத்து பாலசுப்பிரமணியம் வீட்டில் பாலசுப்பிரமணியம், மருதாயம்மாள் ஆகிய இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து கணவன் மற்றும் மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக தனது உறவினரான வாடிப்பட்டி கச்சராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜானகிராமனுக்கு (25) தகவல் தெரிவிக்கவே ஜானகிராமன் பாலசுப்பிரமணியத்தை தீர்த்து கட்டச் சொல்லி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விட்டார். இதனையடுத்து நால்வரும் பாலசுப்பிரமணியத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றவே ஜானகிராமன் கையில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு பாலசுப்பிரமணியத்தை தாக்கியுள்ளார். பாலசுப்ரமணியம் பதிலுக்கு அவர்களை தாக்கியதில் கடும் கோபமடைந்தநால்வரும் பாலசுப்ரமணியத்தை அருகில் இருந்த நில அளவை கல்லை (சர்வே கல்) எடுத்து அடித்து கொலை செய்துவிட்டு அந்த கல்லை கிணற்றுக்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. அதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் தகராறில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் பெர்ஜின், மனைவிக்கு தெரியாமல் சில நாட்களாக தனது நண்பனின் மனைவியுடன் கள்ளகாதலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சாந்தி கணவரை கண்டித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவரது கணவர் பெர்ஜின் நண்பனின் மனைவியான அமலிவனஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை நாகர்கோவிலில் உள்ள கட்டையன்விளை பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து பெர்ஜின் மனைவி சாந்திக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து அவரது கவனர் கள்ளகாதலியோடு வசித்து வரும் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். வெகு நேரமாக கதவினை தட்டியும் யாரும் கதவினை திறக்கவில்லை. இதனால் வீட்டின் முன்பு தனது இரண்டு மகன்களோடு அமர்ந்து முற்றுகையிட்டு கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் பெர்ஜின் மனைவி சாந்தி. இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சாந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாந்தி, 50,000க்கு மேல் சம்பளம் வாங்கியும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எதுவும் செய்யாமல் அவரது நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் , அண்டைவீட்டார் தன்னை இங்கிருந்து வெளியேறுமாறு கூறுவதாகவும், அவர்கள்தான் இவர்களுக்கு வீட்டினை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், எல்லாம் தெரிந்திருந்தது இதை அந்த அண்டைவீட்டார் செய்வதாகவும் கூறினார். மேலும், வனஜாவின் மூத்தமகன் கத்தியை எடுத்து குத்த முயற்சிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சாந்தி தனது கணவர் போலீசார் என்பதால் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கதறிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📢 மே 26 முக்கியதகவல்கள் 👍
14 likes
8 shares