காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
97 Posts • 810K views
கடந்த 2025 குடியிருப்பில் உள்ள 4வது மாடியில் சங்கீதா என்பவர் அவரது மகன் உடன் குடியேறியுள்ளார். அப்போது சங்கீதா சிந்தாமணியுடன் பேசி பழகி வந்திருக்கிறார். இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில் சிந்தாமணி அடிக்கடி சங்கீதா வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதற்கிடையில் சிந்தாமணிக்கும் சங்கீதாவின் மகன் திலீப்புக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். மேலும் இருவரும் பழகி வந்த நிலையில் திலீப் தனக்கு பணம் தேவைப்படும் போது சிந்தாமணி இடமிருந்து தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட சுமார் 850 கிராம் தங்கம், 120 கிராம் வைர நகைகள், 2 1/2 கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.20,000 பணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. சிந்தாமணி மீண்டும் அந்த பணத்தை கேட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திலீப் சிந்தாமணியிடம் அவர்கள் தனிமையில் இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்கள் வெளியிடுவதாக மிரட்டி மேலும் பணத்தை கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். இது குறித்து சிந்தாமணியின் கணவர் அறிந்து பணம் மற்றும் நகைகளை திருப்பி கேட்டபோது திலீப் மற்றும் அவரது தாய் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீட்டை காலி செய்து கொண்டு சென்றிருக்கின்றனர். பின்னர் பலமுறை செல்போனில் அழைத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பெற்ற தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கித் தருமாறும், மேலும் தன்னுடன் இருந்த நிர்வாண போட்டோ வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக கூறி மிரட்டி வரும் திலீப் மற்றும் அவரது தாய் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஏற்கனவே திலீப் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைதளம் மூலம் பழகி பெண்களிடம் விமான பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த புகார் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் தொழிலதிபர் மனைவியிடம் நெருங்கி பழகி நகை பணத்தை மோசடி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவாக உள்ள திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் #📢 பிப்ரவரி 25 முக்கிய தகவல் 🤗 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
12 likes
15 shares
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேடாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்த பிரபாகரன் (32), தனது மனைவி அபிராமி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால், அபிராமிக்கும் அவரது உறவினர் பிரபு என்பவருக்கும் இடையே நீடித்த முறையற்ற உறவு, அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்தது. இந்தத் தொடர்பு குறித்து பிரபாகரன் கனிவாக எச்சரித்த போதிலும், அதை ஏற்காத அபிராமி, தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்டத் துணிந்து பிரபுவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இரவு, நயவஞ்சகமாகப் பேசி கணவனை வெளியே அழைத்துச் சென்றார் அபிராமி. அங்கே மறைந்திருந்த பிரபு மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர், பிரபாகரனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் கொடுத்து அவரை நிலைகுலையச் செய்தனர். போதையில் அவர் தன்னை மறந்திருந்த வேளையில், மூவரும் இணைந்து பிரபாகரனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைத்து விபத்து போலச் சித்தரிப்பதற்காக, சடலத்தைச் சாலையோரம் உள்ள புளிய மரத்தடியில் வீசிவிட்டுத் தப்பினர். மறுநாள் காலை சடலத்தைக் மீட்ட போலீசார், பிரபாகரனின் மரணத்தில் மர்மம் இருப்பதை உடற்கூறு ஆய்வின் மூலம் உறுதி செய்தனர். விசாரணையின் தொடக்கத்தில் கணவனை இழந்தவள் போல அபிராமி கண்ணீர் மல்க நாடகமாடினாலும், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து வசமாகச் சிக்கிக்கொண்டார். இறுதியில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். தலைமறைவாக இருந்த பிரபு நீதிமன்றத்தில் சரணடைய, உடந்தையாக இருந்த சரவணனும் கைது செய்யப்பட்டார். தகாத உறவுக்கு இடையூறாக இருந்த ஒரே காரணத்திற்காக, இரு குழந்தைகளின் தந்தை என்றும் பாராமல் கணவனைக் கொன்ற அபிராமியின் செயல் மணப்பாறைப் பகுதியையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபுவுடன் சேர்ந்து, ஒரு குடும்பத் தலைவி இத்தகைய கொடூரத்தைச் செய்தது சமூகச் சீரழிவின் உச்சமாகக் கருதப்படுகிறது. தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இரு பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #🔴இன்றைய முக்கிய செய்திகள்
15 likes
12 shares
‌👩‍🦱மகளுக்கு👩‍🦱 அடிக்கடி 👩‍🦰அம்மா👩‍🦰 கொடுத்த ‘மாத்திரை’.. வீட்டுக்கு வந்த ஆண் நண்பர்... நீயெல்லாம் ஒரு அம்மாவா?😱😱😱 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #கள்ள உறவு
13 likes
10 shares