#ஹனுமான்
அனுவாவிஅனுமன்
(கோவை)
💐🙏🏻💐
*************
"கோவை"என்றால்
நினைவில் எழும்
"மருத மலை"
முருகனே.!
💐
"மருத மலை"
பக்கந்தாங்க
"அனுவாவி
அனுமனே" !
💐
அருமையான
எழில்கொஞ்சும்
இயற்கை சூழல்
தானுங்க..!
💐
"அனுவாவி"
அனுமனருள்
ஆன்ற மலைத்
தேனுங்க..!
💐
"அனுவாவி"
மலையுச்சி
சிவபெருமான்
கோயிலு..!
💐
ஆன்மநேயம்
வளர வேண்டி
அமைந்த திரு
வாயிலு..!
💐
அதனைவிட்டு
ஐம்பதடி
இறங்கி வந்தா
போதுமே..!
💐
"அனுவாவி
முருகன்"
கோயில்
பிரணவ
மந்திரம்
ஓதுமே..!
💐
மலையிலேறி
முருகனைப்
பார்க்க
ஐநூறு படி
ஏறணும்..!
💐
ஆறெழுத்து
மந்திரத்தை
மறக்காமலே
கூறணும்..!
💐
மலையினழகு
பார்க்கப்
பார்க்கத்
திரும்ப மனம்
வராது..!
💐
மொத்த அழகும்
கொட்டிக்கிடக்கு.!
வாழ்வில்துன்பம்
தராது..!
💐
மலையடிவாரம்
இருக்கு நமது
விநாயகர்
சந்நிதி..!
💐
அவரை
வணங்கி
மலையேறணும்
அப்ப தாங்க
நிம்மதி..!
💐
மலையடிவாரம்
இருக்குதுங்க
ஆஞ்ச நேயர்
சிலையிங்க..!
💐
நாற்பத்தெட்டடி
உயரமே...!
பார்த்தாபோதும்
மனமடங்கி
வரும் ஒரே
நிலையிங்க..!
💐
"சஞ்சீவிமலை"ய
தூக்கிக் கிட்டு
அனுமன்திரும்பும்
போதிலே..!
💐
அனுமனுக்குத்
தண்ணீர் தாகம்
முருகன் தீர்த்து
வச்சாரு..!
💐
அனு என்றால்
அனுமனே..!
வாவி என்றால்
சுனையிங்க..!
💐
தன்கைவேலைத்
தரையில்ஊன்றத்
தண்ணீர்ஊற்று
வந்தது..!
💐
அந்த ஊற்றில்
நீர் அருந்த
அனுமன்
தாகம்
தணிந்தது..!
💐
முருகனோட
ஆற்றல்கண்டு
ஊரே திரண்டு
பணிந்தது..!
💐
அனுமனுக்கு
வாவி எடுத்து
தண்ணீர்முருகன்
தந்ததால்...!
💐
"அனுவாவி"
பேருங்க..!
உடனேபோயிப்
பாருங்க..!
💐
வாவி என்றால்
குளம்.சுனை.
ஓடை.ஊற்று.
பொருளுங்க..!
💐
கேட்டதெல்லாம்
தந்திடுமே..!
அனுமனோட
அருளுங்க..!
💐
"அனுவாவி
அனுமனே"..!
விடமாட்டான்
வெறுமனே..!
💐
"சனி"இன்று
அவரைவணங்க
சனிதோஷம்
நீங்குமே...!
💐
மீண்டும் மீண்டும்
அவரைக்காண
நம்ப மனசு
ஏங்குமே...!
💐
"அனுவாவி
அனுமன்"ஓடி
வருக ! வருக !
வருகவே.!
💐
நெஞ்சம் முழுதும்
நீயே.! ஐயா.!
நினதுஅருளைத்
தருகவே.!
🦚
முருகா முருகா
🦚🙏🦚