வெங்கி பக்தி
2 Posts • 325 views
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##பக்தி மாதம் 26ம் நாள் 10-மார்ச்-26, செவ்வாய் கிழமை சப்தமி திதி சேர்ந்த நாளில் நம் மனதை பிடித்து மாசுபடுத்தி வேண்டாத கவலைகளை பெருக்கி மனதை அலைக்கழிக்கும் எண்ணங்களை நீக்கி மாசில்லாத தெளிவு நீரூற்றுபோல் ஆக்கிட மாசற்ற பூரண பக்தி பொங்கிடும் மனதோடு மனம் உருகிட மாலோலன் தங்கை மரகதவல்லி அங்கயற்கண்ணி அம்பிகையை போற்றி வணங்கிடுவோம் வாரீர் கரும்பும், கணை ஐந்தும், பாச அங்குசமும், கைக் கொண்டு அடியேன் திரும்பும் திசை தொறும் தோன்றி கற்பகவல்லி அன்னையே உன் பாதமே சரணம் என வணங்கிடும் என் புலைத் தலை மேல் நின் சிலம்பு ஒலிக்கும் தாமரை பாதங்களை வைத்து பேரின்பம் அளித்திடுவாய் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே ஒளி கொண்ட வெண் பிறைத் தோடும், பொன் ஓலையும், ஊறிய தேன்துளி கொண்ட செங்கனி வாயும், முத்தாரமும், தோளும் என்றன் களி கொண்ட நெஞ்சம் குடி கொண்டுவாய் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே பிறை மதியையும், பொங்கும் புனல் கங்கை நதியையும், மணம் கமழும் கொன்றை மலர் சூடியும் கொண்ட சிகாமுடி நின் கேள்வர் பாகத்தும், அந் நான் மறை எனும் நூல் இடத்தும், குடி கொண்ட நீ எங்கே இருக்கினும் நாய் அடியேனுக்கு இடர் வரும் போது அங்கே வெளிப்படுவாய், மாசில்லா ஆட்சி செய்யும் கயல் விழியாய்! மதுராபுரி அம்பிகையே கருத்த எருமை மேல் ஏறிவந்து தீ புகையும் கண்களோடு எந்நேரம் ஆனாலும் காலன் என்மேல் பாசக்கயிறு வீசிடும் வேளை அஞ்சேல் என எனக்கு அபயம் தந்து காத்திடுவாய் அலை குதிக்கும் தடம் சூழ் மதுராபுரி ஆளும் அம்பிகையே நெளிக்கும் புழுவுக்கு இடம் ஆம் குரம்பையின் நின்றும், உயிர் ஒளிக்கும் பொழுது வெளிப்படுவாய், ஒழியாப் பிறவிச் சுளிக்கும் கடலில் சுழலாமல் வாழ்வைத் துறந்து, என்னை அரவணைத்திடுவாய் வெண் நிலா மதிக் கூன் பிஞ்சும், கணை வில்லும்,அங்குச பாசமும், பிஞ்சு மலர் அஞ்சும் தரித்த அம்பிகையே சரணம் 🪷🪷🪷
10 likes
6 shares