DyCMUdhay48
31 Posts • 4K views
Ezhilraja
595 views
#DyCMUdhay48 புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அணியின் துணை அமைப்பாளர் சாங்கிராப்பட்டி ரவி ஏற்பாட்டில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாங்கிராப்பட்டி கலைஞர் திடலில் நடைபெற்ற கபாடி போட்டியின் கால் இறுதி ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் KS.சந்திரன், தென்னலூர் M.பழனியப்பன், இலுப்பூர் பேரூர் செயலாளர் வை.விஜயக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நூ.அன்சாரி பாசித், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்லம் அசோக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் எழில் ராஜா, தமிழினியன், கார்த்திக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
10 likes
10 shares
Ezhilraja
564 views
#DyCMUdhay48 புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் சார்பில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம் மற்றும் துணை அமைப்பாளர்கள் மு.கலைஞர் கருணாநிதி, விளாப்பட்டி சிவா, நு.அன்சாரி பாஷித் ஆகியோர் முன்னிலையில் கழக இளைஞரணி துணை செயலாளர் மண்டல பொறுப்பாளர் "தாட்கோ" தலைவர் N.இளையராஜா அவர்கள் தொடங்கி வைத்தார். மாநகர மேயர் திலகவதி செந்தில், மாவட்ட துணை செயலாளர் க.மதியழகன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோ.மணிராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் MM.பாலு, வடவாளம் மணிமாறன், A.வெற்றிச்செல்வன், கை.பழனிச்சாமி, குளத்தூர் ஓ.ஆறுமுகம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செ.கணேஷ் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று போட்டியை கண்டு களித்தினர்
9 likes
16 shares
Ezhilraja
644 views
#DyCMUdhay48 மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் பெருங்களுர் பிடாரியம்மன் திடலில் திராவிட பொங்கல் விழா மற்றும் கலை பண்பாட்டு திருவிழா மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சரஸ்வதி சுவாமிகள், புதுக்கோட்டை ஜமாத் தலைவரும் துணை மேயருமான ஹாஜி M.லியாகத் அலி, புதுக்கோட்டை தூய மரியன்னை பள்ளி தாளாளர் அருட்தந்தை இருதயராஜ் ஆகியோருடன் அனைத்து மதங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று ஒரே இடத்தில் அடுப்புகளை வைத்து பொங்கலிட்டு திராவிட பொங்கலை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து கலைமாமணி காரை சேனா வழங்கும் திரைப்பட பின்னணி பாடகர் செந்தில் தாஸ், ஜீ தமிழ் டிவி புகழ் யோகஸ்ரீ, புதுக்கோட்டை மகா, நண்டு பாலா ஆகியோர் பங்கேற்ற மிக பிரம்மாண்டமான கலைப் பண்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கீரனூர் சேதுபதி சிலம்ப பாசறை சார்பில் கோலாட்டம், மரக்காலாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், தற்காப்பு கலைகளான ஒற்றைக்கம்பு, வேல்கம்பு, சுருள்வால் வீச்சு, தீப்பந்தங்கள் இடம்பெற்றன. ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VNM.பாலமுருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாமிய்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பேரூர் வட்ட கிளை கழக நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
7 likes
14 shares