aalayam arivom.

666 Posts • 179K views
saravanan.
733 views 7 days ago
#aalayam arivom. மாவட்டம், பேரளம் அருகே அமைந்துள்ள கந்தன்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குறித்த தகவல்கள் இதோ: தல வரலாறு பெயர்க்காரணம்: சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் இந்த அடர்ந்த வனப்பகுதியில் வந்து குடிகொண்டதால், இத்தலம் 'கந்தன்குடி' என்று பெயர் பெற்றது. இத்தலத்திற்கு 'தென்காடு' மற்றும் 'மதுவனம்' என்ற பெயர்களும் உண்டு. தோற்றம்: சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாக இது கருதப்படுகிறது. ஒரு பசு தினமும் புற்றில் பால் சொரிந்து வந்ததை கண்டு, அந்தப் பகுதியைத் தோண்டிப் பார்த்தபோது, சுயம்புவாக முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் வெளிப்பட்டதாக ஐதீகம். கோவிலின் சிறப்புகள் தெய்வானையின் தவம்: முருகனை மணாளனாக அடைய தெய்வானை இத்தலத்தில் தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் இக்கோவிலில் தெய்வானை தெற்கு நோக்கித் தனிச் சந்நிதியில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஐராவதேஸ்வரர்: தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் (வெள்ளை யானை), இக்கோவில் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றதாக நம்பப்படுகிறது. அதனால் இத்தலத்து ஈசன் 'ஐராவதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அதிசயம்: இக்கோவிலில் உற்சவரைத் தேனீக்கள் மொய்க்கும் நிகழ்வு ஒரு சிறப்புமிக்க அற்புதமாகக் கருதப்படுகிறது. கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய கோவில். கோவிலின் நுழைவாயில் முதல் கர்ப்பக்கிரகம் வரை கலைநயமிக்க மண்டபங்கள் உள்ளன. மண்டபத்தின் விதானத்தில் அறுபடை வீடுகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தரிசன பலன்கள் திருமணத்தடை நீங்குதல்: இத்தலத்தின் தனிச்சிறப்பே தெய்வானை தவம் புரிந்த தலம் என்பதுதான். எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அருள்: முருகப்பெருமானை இங்கு தரிசிப்பதன் மூலம் மன அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். கோவில் நடை நேரம் மற்றும் வழித்தடம் நேரம்: காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், பேரளம் அருகே கந்தன்குடி அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் இத்தலம் உள்ளது 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
7 likes
10 shares
saravanan.
605 views 2 days ago
#aalayam arivom. ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் ஈர்க்கும் அன்னை முத்தாரம்மன் அருள் 💕 அன்னை உந்தன் சன்னதியில் அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்! அம்மா உந்தன் பொன்னடியில் அனுதினமும் சரணடைவோம்! ⚜️ ஓம்சக்தி முத்தாரம்மா 🔱 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
10 likes
20 shares
saravanan.
518 views 1 days ago
#aalayam arivom. பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில்,* *மூலவர் : பூரணத்திரயேஸ்வரர்.* *தீர்த்தம் : பல்குண தீர்த்தம்.* *ஊர் : திருப்பூனித்துறை-682301.* *மாவட்டம் : எர்ணாகுளம்.* *மாநிலம் : கேரளா.* *காலை 4:00 மணி முதல் 11:15 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.* *+91-484-277 4007.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குழந்தை பிறந்தாலும் இறந்து விட்ட சூழ்நிலையில் அடுத்த குழந்தைக்காக காத்திருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். "கடா விளக்கு' எனப்படும் அணையாவிளக்கு இங்கிருக்கிறது. இவ்விளக்கு ரிக், யஜுர், சாம வேதங்களை குறிக்கும் வகையில் 3 அடுக்குகளை கொண்டது. குழந்தை இல்லாதவர்கள் இந்த விளக்கை ஏற்றி வழிபடும் இந்த வழிபாட்டை 'உலப்பன்னா' என்கின்றனர். இவ்வாறு வழிபாடு செய்துபிறக்கும் குழந்தை நீண்ட ஆயுளுடனும், சிறப்புடனும் விளங்கும் பல்குண தீர்த்தம்' மிகப்பெரிய குளமாக கோயிலின் உள்ளே இருக்கிறது. இணம் திருவிழா இத்தலத்தில் தான் ஆரம்பமானது என்கிறார்கள்.* *பொது தகவல் : முதலில் கிழக்கில் உள்ள ஆலமரத்தையும் அதன் கீழ் உள்ள விநாயகரையும் வழிபட்டு, கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் வடக்கே கண்ணாடி பிம்பமாக உள்ள ரேணுகாதேவியை வழிபட வேண்டும். பின் எதிரே உள்ள தீபஸ்தம்பத்தையும், பலிபீடத்தையும் வணங்கி, இருபக்கமும் உள்ள சங்கு. சக்கரத்தை வணங்க வேண்டும். மகாமண்டபத்தில் பிறகு மகரிஷியை வழிபட்டு, கூத்தம்பலத்தில் உள்ள நந்திகேஸ்வரரையும், அருகில் உள்ள கடா விளக்கையும் வணங்க வேண்டும். அதன் பின் மூலஸ்தானத்தின் வெளியே காவல்புரியும் ஜெயன், விஜயனை வணங்கி, அதன் பின் மூலவரை வணங்க வேண்டும். மூலஸ்தானத்தின் மேற்கு சுவரிலுள்ள துவாரம் வழியாக அர்ஜுனனை தரிசிக்கலாம்.* *பிரார்த்தனை : குழந்தை இல்லாதவர்கள் "கடாவிளக்கு' என்னும் 3 அடுக்குவிளக்கை ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.* *நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.* *தலபெருமை : கேரளாவிலுள்ள கோயில்களிலேயே இங்கு தான் முதன் முதலாக உணத்திருவிழா துவங்கும். இதன்பிறகு தான் மற்ற கோயில்களிலும், வீடுகளிலும் உணக் கொண்டாட்டம் துவங்கும் பெருமாளே நேரில் அமைக்கச் சொன்ன கோயில் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.* *லிங்கத்தின் ஆவுடைக்கு மேல் பஞ்சலோகத்தால் ஆன பெருமாள் அமர்ந்த கோலம் பெருமாள் கையில் சிவலிங்கம் இருப்பதும், பெருமாளுக்கு பூர்ணத்திரயேஸ்வரர் என்ற சிவன் பெயர் இருப்பதும் தனி சிறப்பாகும்.* *தல வரலாறு : இப்பகுதியில் வாழ்ந்த அந்தணர் தம்பதிக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை. அந்தணருக்கு கடவுள் பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணு பக்தை தன் கணவனை மன்னித்து தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மனைவி அவரை வழிபட்டு வந்தாள். ஆனாலும், பெருமாள் மலடி என்ற இவளது பட்டத்தை தீர்க்கும் வகையில் குழந்தை பாக்கியத்தை தந்தாரே தவிர, பிறந்த குழந்தைகள் எதுவும் பிழைக்கவில்லை. ஒன்பது குழந்தைகள் பிறந்து இறந்தன. இதனால் அந்தணருக்கு பெருமாள் மீது கோபம் இன்னும் அதிகமானது அந்தணரின் மாமனார், "மருமகனே! தாங்கள் பெருமாளிடம் கோபப்படுவதில் அர்த்தமில்லை. உங்களுக்கு அவர்மீது பக்தி இல்லாததே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம். பெருமாளை சரணாகதி அடைந்தால் இனிமேல் பிறக்கும் குழந்தை இறக்காது," என்றார். ஆனாலும், அந்தணர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்தணரின் மனைவி தன் கணவன் திருந்தாததையும், பெருமாள் தன்னைச் சோதிப்பதையும் எண்ணி வேதனையில் தவித்தாள். ஒருமுறை அவள் தன் கணவனுடன் துவாரகை செல்ல நேர்ந்தது. அங்கே கிருஷ்ணனை சந்தித்தார் அந்தணர்."கிருஷ்ணா! உன்னைத் திருமாலின் அவதாரம் என்கிறார்கள். உலகம் முழுமையும் காக்கும் கடவுள் நீ என்கிறார்கள் ஆனால், எனக்கு பல குழந்தைகள் பிறந்தும் இறந்து விட்டன. அவற்றைக் காக்கும் பொறுப்பு பூமியில் வாழும் கடவுளான உனக்கில்லையா"என்றார்.கிருஷ்ணரின் அருகில் இருந்த அர்ஜுனன்,""அந்தணரே! ஒருவர் பிறப்பதும் இறப்பதும் விதிவசத்தால் ஆனது. இருந்தாலும், கிருஷ்ண ராஜாவை நீர் தவறாக எண்ணக்கூடாது. எனவே, இந்த கிருஷ்ணரின் முன்னால் சபதம் செய்கிறேன். இனிமேல் உனக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்து கொள்கிறேன். அப்படி இறந்தால் நான் அக்னியில் விழுந்து இறப்பேன்,"என்றான்.அந்தணர் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். ஆனால், பத்தாவது குழந்தையும் பிறந்து இறந்து விட்டது. இதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன் தீயில் இறங்கத் தயாரானான்.கிருஷ்ணர் அவனைத் தடுத்து,"அர்ஜுனா! நான் அருகில் இருக்கும் போது, நீ அந்தணரிடம், குழந்தை பாக்கியம் வேண்டி கிருஷ்ணனை சரணாகதி அடைய வேண்டும் என கூறாமல், பிறக்கும் குழந்தைகளை இறக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று ஆணவத்தால் கூறினாய். எனவே தான் பத்தாவது பிறந்த குழந்தையும் இறந்து விட்டது."என்றார். இதைக்கேட்ட அர்ஜுனனின் அகங்காரம் அழிந்தது. ஆனாலும், அவன் அக்னியில் விழுந்து வைகுண்டம் சேர்ந்தான் அங்கே, மகாவிஷ்ணு ஒரு லிங்கத்தை கையில் வைத்தபடி தியானத்திலிருந்தார். அர்ஜுனன், "பகவானே! எனது ஆணவம் அழிந்தது. அந்தணருக்கு கொடுத்த வாக்கை தாங்கள் காப்பாற்றவேண்டும்."என வேண்டினான்.மகாவிஷ்ணு அர்ஜுனனிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து. "நான் பூஜித்து வரும் இந்த லிங்கத்தை, மலைநாட்டில், அந்தணர் வாழும் ஊரில் பிரதிஷ்டை செய். அந்தணரையும் அவரது குடும்பத்தையும் வழிபடச்சொல். இது சந்தான பாக்கியத்தை தரக்கூடியது," என்றார். அதன்படி அர்ஜுனன் இத்தலம் வந்து அந்த லிங்கத்தை பெருமாளின் கையில் இருக்கும்படியாக வைத்து, ஒரு சிலை வடிக்க ஏற்பாடு செய்தான். சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் (பீடம்) மீது பெருமாள் கையில் லிங்கத்துடன் அமர்ந்திருக்கும் சிலை தயாரானது. பெருமாளாக இருந்தாலும், சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தையும் சேர்த்து, "பூர்ணத்திரயேஸ்வரர்' என்ற திருநாமத்தை சூட்டினான். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குழந்தை பிறந்தாலும் இறந்து விட்ட சூழ்நிலையில் அடுத்த குழந்தைக்காக காத்திருப் பவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : மாசி சுவாதி முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலும், கார்த்திகை சுவாதி முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலும் இரு பெரும் விழாக்கள்.* *இருப்பிடம் : எர்ணாகுளத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ. தூரத்தில் திருப்பூனித்துறை உள்ளது. பஸ் வசதி இருக்கிறது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூனித்துறை.எர்ணாகுளம்.* *அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சி.* *தங்கும் வசதி : திருப்பூனித்துறையில் தங்கி கோயிலுக்கு சென்றுவரலாம்.*
14 likes
5 shares
saravanan.
759 views 8 days ago
#aalayam arivom. பூட்டு என்பது சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பூட்டு முனியப்பன் கோவிலைக் குறிக்கிறது. இக்கோவில் பற்றிய முக்கிய தகவல்கள் இதோ: அமைவிடம்: சேலம் - ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் என்ற இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. Instagram சிறப்பு: பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்று வேண்டி, இக்கோவிலில் உள்ள கம்பிகளில் பூட்டுகளைப் பூட்டி வேண்டுதலைச் சமர்ப்பிக்கின்றனர். நம்பிக்கை: இவ்வாறு பூட்டு போட்டு வேண்டினால், குடும்பப் பிரச்சினைகள் தீரும், திருமணத் தடை நீங்கும் மற்றும் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் தீவிர நம்பிக்கையாக உள்ளது. மேலும், ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள கொத்தாம்பாடி முனீஸ்வரன் கோவில் மற்றும் ஆத்தூர் கோட்டையினுள் இருக்கும் காயநிர்மலேஸ்வரர் கோவில் ஆகியவையும் இப்பகுதியின் முக்கியமான ஆன்மீகத் தலங்களாகும். 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
13 likes
11 shares