aalayam arivom.
677 Posts • 168K views
saravanan.
733 views
#aalayam arivom. ஒரு 'சிதம்பரம்'! - மகாபெரியவர் கட்டிய அதிசயக் கோவில்!_* * 🛕🛕🛕மகாராஷ்டிராவின் சத்தாரா (Satara) மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான நடராஜர் கோவில் இது. இது தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் கோயிலின் பிரதியாக இருப்பதால் 'உத்தர சிதம்பரம்' என்று அழைக்கப்படுகிறது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றான 'ஆகாய' ஸ்தலத்தை குறிக்கிறது. இது காஞ்சி மகாபெரியவரின் விருப்பப்படி, கிருஷ்ணா மற்றும் வெண்ணா நதிகளின் சங்கமத்தில் 1985 இல் நிறுவப்பட்டது. இப்பகுதியை சுற்றி ஏழு(சத்) மலைகள் (தாராஸ்) இருப்பதால் இப்பெயர் பெற்றது. சத்தாராவில் உள்ள உத்தர சிதம்பரம் நடராஜர் கோவில், தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தின் நடராஜர் கோவிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற 4 மாநிலங்களின் கட்டடக்கலை பாணிகளின் கலவையில் அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலின் கோபுரங்களை ஒத்த அழகான கோபுரங்களை கொண்டு விளங்குகிறது. 1980 ஆம் ஆண்டு சத்தாராவிற்கு வருகை தந்த ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலின் மாதிரியில் சத்தாராவில் நடராஜருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்ப, சங்கராச்சாரியாரின் விருப்பத்தை ஏற்று சத்தாராவை சேர்ந்த சாமண்ணா என்பவர் கோவிலை கட்டுவதற்கு போதுமான நிலத்தை நன்கொடையாக வழங்கினார். இங்கு நடராஜரைத் தவிர சிவலிங்கம், ஹனுமான், ராதாகிருஷ்ணன், கணபதி, நவகிரகங்கள், ஆதிசங்கரர் மற்றும் ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. இங்கு சிதம்பரம் தீட்ஷிதர்கள் சுழற்சி முறையில் பூஜைகள் செய்கிறார்கள். இக்கோவிலுக்கு அருகிலேயே காஞ்சி காமகோடி பீடத்தால் நடத்தப்படும் வேத பாடசாலையும் உள்ளது. இக்கோவில் காஞ்சி சங்கர மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி வீற்றிருக்கும் சித்சபைக்கு பின்னால் அமைந்துள்ள நான்கு தூண்கள் 4 வேதங்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளன. பிரதான மண்டபத்தின் 18 தூண்களையும், கோவிலில் உள்ள மற்ற 6 தூண்களையும் முறையே இந்து மதத்தின் 18 புராணங்கள் மற்றும் 6 சாஸ்திரங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தை சுற்றியுள்ள நடராஜரின் 108 கரணங்களின்(நடன நிலைகள்) கல் சிற்பங்களைக் காணலாம். இவை ஒவ்வொன்றும் பரதநாட்டிய நடன வடிவத்தின் வெவ்வேறு முத்திரையை சித்தரிக்கின்றன. இக்கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக பாரம்பரிய நடன கலைஞர்கள் வருகை தருகின்றனர். புகழ்பெற்ற சிற்பி எம்.எஸ். கணபதி ஸ்தபதி மற்றும் அவரது சகோதரர் எம். முத்தைய ஸ்தபதி ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலின் அதே வடிவமைப்பு மற்றும் கோபுரங்களுடன் வடிவமைத்துள்ளனர். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அஜிங்க்யதாரா கோட்டை (Ajinkyatara Fort) அமைந்துள்ளது. அதையும் சென்று பார்வையிடலாம். பார்வையிட சிறந்த நேரம்: கோடை காலமான மார்ச் முதல் ஜூன் வரை வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும் என்பதால் அச்சமயத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். எப்படி செல்வது? இக்கோவில் சத்தாராவையும் சோலாப்பூரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH4ல் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் சத்தாரா ரயில் நிலையம். சத்தாரா பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆட்டோ, டாக்ஸி வசதிகள் உள்ளன. 🍁🍁🍁
15 likes
12 shares
saravanan.
668 views
#aalayangal Arivome. சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_* * 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. > இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். *மகா சிவராத்திரி வழிபாடு :* > மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும். *சிறப்புமிக்க சிவ தலங்கள் :* வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். *மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :* 1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும். 2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். *உலகின் முதல் சிவன் கோவில் :* 3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம். சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். 4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில். *அனைத்து தோஷ பரிகார தலம் :* 5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது. 6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். *யம பயம் போக்கும் சிவ தலம்* 7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும். 8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம். *பாவம் போக்கும் புண்ணிய தலம் :* 9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். 10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம். 🍁🍁🍁
12 likes
10 shares
saravanan.
1K views
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு திருத்தங்கூர் அருள்மிகு வெள்ளிமலைநாதர் ஆலயம். மூலவர் : வெள்ளிமலைநாதர், ரஜத கிரிஸ்வரர் அம்மன்/தாயார் : பெரியநாயகி, பிருகந் நாயகி தல விருட்சம் : தென்னை தீர்த்தம் : சிவகங்கை பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : திருத்தேங்கூர், திருத்தெங்கூர் ஊர் : திருத்தங்கூர் மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம்: தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடியணி சுவண்டர் எல்லி சூடிநின்றாடும் இறையவன் இமையவர் ஏத்தச் சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லினார் திருத்தெங்கூர் வெள்ளியங் குன்றுஅமர்ந் தாரே. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 116வது தலம். திருவிழா: வைகாசி விசாகத்தன்று மட்டும் சிறப்பு பூஜை நடத்தப்படும். தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 180 வது தேவாரத்தலம் ஆகும். திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்-610 205.திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369 237 454, 94443- 54461 பொது தகவல்: இது ஒரு சிறிய கோயில். பழமையான கோயில் என்பதால் களை இல்லை. இக்கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இது ஓர் அபூர்வக்காட்சியாகும். ராகு கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைபக்கம் உள்ளது. பிரார்த்தனை: இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். தலபெருமை: இக்கோயிலில் மகாலட்சுமி தங்கி சிவபூஜை செய்திருக்கிறாள். வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து வளர்ந்த குளம் ஒன்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. தற்போது, அக்குளம் தூர்ந்து விட்டது. இருப்பினும், இத்தலத்து சிவன் செல்வத்தை வாரி வழங்குபவராக உள்ளார். மகாலட்சுமியே பூஜை செய்த இடம் என்றால் கேட்கவா வேண்டும். சுவாமியை ரஜதகிரீஸ்வரர் என்றும் சொல்வார்கள். "ரஜதகிரி' என்றால் "வெள்ளிமலை' என பொருள். இது மேற்கு பார்த்த கோயிலாகும். மேற்கு பார்த்த கோயிலுக்கு கிழக்கு பார்த்த கோயிலை விட அதிக சக்தியுண்டு. மேற்கு சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத்தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.விழாக்கள் ஏதும் இத்தலத்தில் இல்லை. வழக்கமான பூஜைகளே நடக்கின்றன. தல வரலாறு: முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது. ஓரிடத்தில் ஜலப்பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரக தேவர்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு லிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர். பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார். பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த லிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம் என பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு லிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர் என்றும், அம்பிகை பிரகன்நாயகி என்றும் அழைக்கப்பட்டனர். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு. அமைவிடம்: திருவாரூரில் இருந்து திருநெல்லிக்காவல் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தொலைவில் இக்கோயில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம்: திருவாரூர் அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🔥சிவ சிவ 🌙 🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
2 likes
18 shares