aalayam arivom.

664 Posts • 172K views
saravanan
1K views 10 hours ago
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு வேளுக்குடி அருள்மிகு ருத்ர கோடீஸ்வரர் ஆலயம். மூலவர் : ருத்ரகோடீஸ்வரர் அம்மன்/தாயார் : கோமளாம்பிகை பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : வேளுக்குடி மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: பிரதோஷம், சனிப்பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவர்களுக்கு பதிலாக சாண்டில்ய முனிவர் அமர்ந்திருப்பது தலத்தின் சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில்வேளுக்குடி, திருவாரூர் மாவட்டம். பொது தகவல்: இங்கு விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை ஆகிய அனைவரும் அற்புதத் திருமேனியராக அருள்பாலிக்கின்றனர். வசிஷ்டர், சாண்டில்ய முனிவர், நந்திதேவர், இந்திரன் மற்றும் நவக்கிரகங்கள் வழிபட்டு வரம் பெற்ற புண்ணிய தலம் இது. பிரார்த்தனை: மூலவர் மேற்கு நோக்கிய நிலையில், மயானத்தைப் பார்த்தபடி காட்சி தருவதால், இங்கு வந்து ஐந்து பிரதோஷங்களில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், மனச் சஞ்சலங்கள் நீங்கும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்; தீராத கடனும் தீரும்; குடும்பத்தில் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். நேர்த்திக்கடன்: சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: கோயிலையும் அமைத்து, ஊரையும் உருவாக்கிக் கொடுத்த மன்னன், இந்த ஊரில் சதாசர்வ காலமும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும்; வேள்விகளும் யாகங்களும் அடிக்கடி நடக்கட்டும் எனும் நோக்கத்தில், சோழ தேசத்தின் அந்தணர்கள் சிலருக்கு இந்த ஊரை எழுதிக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் வழங்கினான். வேதங்களுக்கு யாகங்களுக்கும் பெயர் பெற்று விளங்கிய வேள்விக்குடி, காலப்போக்கில் வேளுக்குடி என மருவியது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான நிலங்களையும், ஆடு - மாடுகளையும் அள்ளித் தந்திருக்கின்றனர், மன்னர் பெருமக்கள். இரண்டாம் குலோத்துங்க சோழன், நெடுங்காலமாகத் தொழு நோயால் தவித்து வந்தான். வேள்விக்குடிக்குச் சென்று, தீர்த்தக் குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்; குணம் பெறுவாய் ! என அசரீரி முழங்க... அதன்படி, இங்கு வந்து, குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்ய... தொழு நோய் நீங்கப் பெற்றான் என்கிறது கல்வெட்டு ஒன்று. தல வரலாறு: தாங்கிக்கொள்ளவே முடியவில்லை வசிஷ்டரால் ! அடடா... எத்தனைப் பெரிய தவறு செய்துவிட்டோம் ! என்று கண்கலங்கினார். ஸ்ரீராமரின் திருமணத்துக்கு மிகக் கவனமாகப் பார்த்துத்தானே முகூர்த்தத் தேதி குறித்துக் கொடுத்தோம். ஆனாலும், இப்படி ஆகிவிட்டதே... ! என்று தவித்து மருகினார். முனிவர் பெருமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, இது உங்களின் தவறல்ல. நீங்கள் சரியாகத்தான் தேதியும் நேரமும் குறித்துக் கொடுத்தீர்கள். ஆனால், எந்நேரமும் தர்ப்பைப் புல்லை வாயில் வைத்திருக்கிற சக்ரவாகப் பறவை, தாங்கள் அருளிய அட்சரத்தைப் பிழையாக உச்சரித்ததால் வந்த குழப்பம் இது. ஆகவே, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் ? சக்ரவாகப் பறவை செய்த தவற்றுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் ? எனச் சொல்லி ஆறுதல்படுத்தினர். ஆனால் அவரது மனம், சமாதானம் ஆகவே இல்லை. பறவையே செய்திருந்தாலும், என் மீதுதான் தவறு. என்னுடைய தவத்தில்தான் ஏதோ கோளாறு என்று சஞ்சலப்பட்ட வசிஷ்டர், அப்படியே சேத்திராடனம் புறப்பட்டார். வழியெங்கும் வனங்கள்; அழகிய தலங்கள். ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே சில காலம் தங்கியிருந்து, இறைவனை நினைத்து, தவத்தில் ஈடுபட்டார். இப்படியாக வந்த வசிஷ்டர், நெல்லி வனம் சூழ்ந்த பகுதிக்கு வந்ததார். அங்கிருந்து கிளம்ப யத்தனிக்கும்போது, இன்றைக்குச் சனிக்கிழமை. பிரதோஷமும்கூட ! சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம். ஆகவே, இங்கு இந்த வனத்தில் ருத்ர ஜபம் செய்து, பிரதோஷ பூஜை செய்வாயாக என அசரீரி ஒலித்தது. ஆடிப் போனார் வசிஷ்டர். என்ன பாக்கியம்... என்ன பாக்கியம் ! என்று கண்கள் மூடி, சிவனாரைத் தொழுதார். அந்த நெல்லி வனத்தில் திருக்குளம் ஒன்று இருந்தது. அதில் நீராடினார். கரைக்கு வந்தவர், கோடி முறை ருத்ர ஜபம் செய்வது எனத் தீர்மானித்து, ஜபத்தில் இறங்கினார். வேள்வியில் ஈடுபட்டார். சனிக்கிழமையும் பிரதோஷமும் கூடிய வேளையில் மனமுருக சிவனாரைப் பிரார்த்தனை செய்ததன் பலனாக, மனதில் இருந்த சஞ்சலங்கள் யாவும் மறைந்தன. மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் வேள்வியையும், கோடி முறை ருத்ர ஜபத்தையும் சொல்லி நிறைவு செய்த வசிஷ்டருக்கு, அங்கே திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான். பின்னாளில், இந்தத் தலத்தைப் பற்றியும், வசிஷ்டர் இங்கே வழிபட்டார் என்பதையும் அறிந்த மன்னன், இங்கே கோயில் எழுப்பினான். கோடி முறை ருத்ர ஜபம் செய்த தலம் என்பதால், இங்கே குடிகொண்டிருக்கிற சிவனாருக்கு ருத்ரகோடீஸ்வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. அதேபோல் வசிஷ்டர் வேள்வி செய்த தலம் என்பதால் இந்த ஊருக்கு வேள்விக்குடி எனும் பெயர் வந்தது. சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவர்களுக்கு பதிலாக சாண்டில்ய முனிவர் அமர்ந்திருப்பது தலத்தின் சிறப்பு. அமைவிடம்: திருவாரூர்-மன்னார்குடி சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 12 கி.மீ., தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து 16 கி.மீ., தொலைவிலும் உள்ளது வேளுக்குடி. அருகிலுள்ள ரயில் நிலையம்: கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி, சென்னை தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🔥சிவ சிவ 🌙 🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
17 likes
11 shares
saravanan
525 views 1 days ago
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு இஞ்சிக்குடி அருள்மிகு பார்வதீஸ்வரர் ஆலயம். மூலவர் : பார்வதீஸ்வரர் அம்மன்/தாயார் : தவக்கோல நாயகி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : இஞ்சிக்குடி மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: வைகாசி பிரம்மோற்ஸவம் தல சிறப்பு: இங்கு சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதும், திருமணக் கோலத்தில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவதும் சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்இஞ்சிக்குடி, திருவாரூர். பொது தகவல்: ராஜராஜ சோழனின் பேரன் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது. பிரார்த்தனை: சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதால் இங்கு வழிபட, கிரகதோஷங்கள் விலகும் மற்றும் திருமணக் கோலத்தில், சண்டிகேஸ்வரியுடன், சண்டிகேஸ்வரர் காட்சி தருவதால் இங்கு பிரார்த்திக்க, திருமண யோகம் உண்டாகும். நேர்த்திக்கடன்: சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக பிள்ளைச் செல்வம் இல்லையாம். இந்தத் தலத்து அம்பிகையின் அருளால் குழந்தை வரம் கிடைக்க, அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினானாம் மன்னன். இன்றும் கால்களில் கொலுசுகளுடன் விசேஷ தரிசனம் தருகிறாள் அம்பிகை. விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவது விசேஷ அமைப்பு. ஆகவே, இங்கு வந்து வழிபட, கிரகதோஷங்கள் விலகும் என்கிறார்கள். தவிர, இங்கு திருமணக் கோலத்தில், இல்லாமல் சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருகிறார் சண்டிகேஸ்வரர். ஆக, இங்கு வந்து பிரார்த்திக்க, திருமண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. தினமும் நாகலிங்கப் பூக்களால் அர்ச்சனை நடைபெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு! பார்வதிதேவியால் உருவாகி, அவளது வேண்டுதலுக்கு இணங்க இடப் பக்கத்தை வழங்கியதால், இந்தத் தலத்தின் ஈசனுக்கு பார்வதீஸ்வரர் என்றும், அம்பாள் தவக்கோல நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், சாந்த நாயகி என்றும் போற்றுவர். மேலும் இவளுக்கு லலிதாம்பிகை என்ற ஒரு பெயரும் உண்டு. பெருமாளும் ஸ்ரீ ஆதிகேசவம் எனும் திருநாமத்துடன் தலத்தின் மேற்கில் தனிச் சன்னதி கொண்டுள்ளார். தல வரலாறு: துர்வாச முனிவரின் தவத்தைக் கலைத்ததால், அவரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானாள் மதலோலை எனும் அரக்கி. அதன் விளைவாக அம்பரன், அம்பன் ஆகிய அசுரக் குழந்தைகளைப் பெற்றெடுத்தவள், ஈன்றதும் இறந்து போனாள். வளர்ந்து பெரியவர்களான அசுரர்கள், கொடுமைகள் பல புரிந்தனர். அதைப் பொறுக்க முடியாமல் சிவனாரிடம் தஞ்சம் புகுந்தனர் தேவர்கள். ஈசன் புன்னகையுடன் தன் தேவியைப் பார்த்தார். அவரின் குறிப்பறிந்த அம்பிகை, அசுரர்களை அழிக்க, அழகிய கன்னிப் பெண்ணாக உருவெடுத்தவள், அரக்கர்கள் முன் தோன்றினாள். இருவரும் அவள் மீது மையல் கொண்டனர். இந்த நிலையில், வயோதிக அந்தணராக வந்தார் பெருமாள். அசுரர்களிடம் சென்று, ஒரு பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் ? உங்களில் வலிமையான ஒருவருக்கே அவள் சொந்தமாவாள் என்று கூறிச் சென்றார். அவ்வளவுதான்... அசுர சகோதரர்களுக்கு இடையே பலப்பரீட்சை துவங்கியது. அம்பன் அழிந்தான்; அம்பரன் ஜெயித்தான். அம்பாளைத் தேடி வந்தான். அப்போது, மகா காளியாக உருவெடுத்து நின்றாள் தேவி. பயந்து போன அசுரன், வடக்கு நோக்கி ஓடினான், அவனைத் துரத்திச் சென்று, தனது சூலாயுதத்துக்கு இரையாக்கினாள் அம்பிகை, அசுர வதம் முடிந்ததும், உக்கிரம் தணிந்து, மீண்டும் ஈசனின் இடப்பாகம் அடையவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் பெருமாள். தேவியும் உக்கிரம் தணிந்து, அருகில் இருந்த சந்தனமரக் காட்டுக்கு வந்து, மண்ணில் லிங்கம் பிடித்துவைத்து வழிபட ஆரம்பித்தாள். உரிய காலம் வந்ததும் சிவனார் தோன்றி, தேவியை தன் இடப்பாகத்தில் ஏற்றார். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதும், திருமணக் கோலத்தில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவதும் சிறப்பு. அமைவிடம்: திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் உள்ளது இஞ்சிக்குடி கிராமம். அருகிலுள்ள ரயில் நிலையம்: மயிலாடுதுறை அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி, சென்னை தங்கும் வசதி: மயிலாடுதுறை 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🔥சிவ சிவ 🌙 🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
12 likes
13 shares
saravanan
590 views 14 days ago
#aalayam arivom. குடியிருக்கும் தாய்! - தேவிகாபுரம் பெரியநாயகி அம்மனின் பிரம்மாண்ட தரிசனம். 🏰✨ பக்தியையும், வரலாற்றையும் ஒருசேர உணர விரும்பும் ஆன்மீக அன்பர்களே... திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தின் சிறப்புகளை இன்று காண்போம்! 🙏 🌸 கோட்டை போன்ற ஆலயம்: நுழைவாயிலில் நின்றே நம்மை வியக்க வைக்கும் பிரம்மாண்டமான மதில்கள்! ஒரு கோட்டைக்குரிய பாதுகாப்புடனும், கம்பீரத்துடனும் அன்னை இங்கே வீற்றிருக்கிறாள். விஜயநகரப் பேரரசின் கட்டிடக்கலைக்குச் சான்றாக இந்த ஆலயம் திகழ்கிறது. ஜொலிக்கும் திருமேனி:** கருவறையில் அன்னை பெரியநாயகி நின்ற திருக்கோலத்தில், ஜொலிக்கும் திருமேனியுடன் காட்சி தருவதைக் காண்பதே ஒரு பாக்கியம். அன்னையின் அந்தத் தீட்சண்யமான கண்கள் நம் கவலைகள் அனைத்தையும் மறக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. 🎨 சிற்பக்கலை அதிசயம்: கோயிலின் ஒவ்வொரு தூணிலும் கல்லில் கவிதை வடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள யாழித் தூண்களும், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகிகளின் சிலைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒரு டிசைனராகப் பார்த்தால், அக்கால சிற்பிகளின் நேர்த்தி நம்மைப் பிரமிக்க வைக்கும்! ✨ மன அமைதி தரும் தலம்: பரபரப்பான இந்த உலகில், ஒரு நிமிடம் அமைதியைத் தேடுபவர்களுக்கு இந்த ஆலயம் ஒரு சிறந்த புகலிடம். கோட்டை போன்ற அந்தப் பிரகாரங்களில் நடக்கும்போது கிடைக்கும் அந்த 'Aura of Calm' (அமைதியின் அதிர்வுகள்) தனித்துவமானது. 📍 அமைவிடம்: தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம். இந்த வார இறுதியில் ஒரு ஆன்மீகப் பயணம் செல்லத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அன்னை பெரியநாயகியைத் தரிசிக்கத் தவறாதீர்கள்! 🛕❤️ 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
11 likes
10 shares