🦅 கருட பஞ்சமி 🦅

155 Posts • 157K views
Sakthi ganesh
4K views 1 months ago
இனிய காலை வணக்கம் காலை தரிசனம் வாராஹி தரிசனம் மிதுனம் மாதம் - வசந்த ருது - உத்திராயணம் பராபவ- ஆனி 20 ஜூலை மாதம் 4ஆம்தேதி !! சனிக்கிழமை (04-07-26) சூரிய உதயம் 5-57 இன்றைய திதி் : தேய்பிறை சதுர்த்தி காலை 10:57 வரை அதன் பின்பு பஞ்சமி இன்றைய நட்சத்திரம் அவிட்டம் பிற்பகல் 12-30 அதன் பின்பு சதயம் இன்றைய சிறப்புகள் தேய்பிறை பஞ்சமி வரம் கொடுப்பாள்; வளம் தருவாள் வாராஹி நாயகி! சப்த மாதர்களில் மிக முக்கியமான தேவதையாகவும் மகா வலிமை பொருந்தியவளாகவும் போற்றப்படுகிறாள் ஸ்ரீவாராஹி தேவி. பஞ்சமி திதி நாளில் வாராஹி தேவியை மனதாரத் துதிப்போம். நம் பிரார்த்தனைகளை அவளின் திருவடியில் சமர்ப்பிப்போம்! 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://whatsapp.com/channel/0029Vb5vqnH17EmrM3r31d2Z #🙏கோவில் #🙏 தேய்பிறை பஞ்சமி 🙏 #🔯தேய்பிறை பஞ்சமி🔯 #பஞ்சமி நாயகி வாராகி #கருட பஞ்சமி
209 likes
3 comments 55 shares
MUTHUPANDIAN RAMKUMAR
618 views 10 days ago AI indicator
#கருட பஞ்சமி #💫காஞ்சிபுரம் கருட சேவை வைபவம்💫 #காஞ்சிபுரம் கருட சேவை #கருட வாகனம் #கருட பஞ்சமியின் சிறப்புகளும் அதன் வழிபாடு பலன்களும்!! கருட பஞ்சமி - 17-08-2026. ஆடி மாதத்தில் வருகின்ற பல்வேறு விசேஷங்களில் கருட பஞ்சமியும் ஒன்று. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும் திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார். விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு. கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமான ஒன்றாகும். மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள். கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும். ஏழரை சனி, கண்ட சனி போன்ற கோச்சார சனி நடப்பவர்கள் கருட பஞ்சமியன்று வணங்கி வழிபட தோஷங்கள் நீங்கும். கருட பஞ்சமியன்று காரைக்காலில் ஏழு கோயில்களை சேர்ந்த பெருமாள்கள் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார்கள். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். மனகுழப்பம், மனசஞ்சலம், தரித்திரம் நீங்கும்.
10 likes
16 shares