கள்ள😜காதல்😍😘

30 Posts • 1M views
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரது செல்போனைச் சோதித்தபோது யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது... அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு மீறிய ரகசியத் தொடர்பு இருப்பது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலால் ராஜேஸ்வர ராவ் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் வாட்ஸ்அப் சாட்களை ஆழமாகப் படித்துப் பார்த்தபோது, அது வெறும் காதல் பேச்சுகளாக மட்டும் இல்லாமல் கொடூரமான கொலைத் திட்டமாக இருந்ததைக் கண்டு அவர் உறைந்துபோனார். "என் கணவரைக் கொலை செய்துவிட்டு, அதை யாருக்கும் சந்தேகம் வராதபடி ஒரு விபத்து போல சித்தரித்துவிடு" என்று தனது ஆண் நண்பரிடம் அந்தப் பெண் மிகத் துல்லியமாகத் திட்டம் தீட்டிப் பேசியிருப்பது ஆதாரத்துடன் சிக்கியது.... தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்ட அந்த வாட்ஸ்அப் உரையாடல்களை உடனடியாகத் தனது மொபைலில் ஆதாரமாகத் திரட்டிய ராஜேஸ்வர ராவ், உள்ளூர் காவல் நிலையத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிப் புகாரளித்தார். போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #🥰கள்ளக்காதல் வேணுமா வா💪
11 likes
11 shares
தெலங்கானாவில் கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த கணவர், மனைவியின் செல்போனை சோதனை செய்தபோது கிடைத்ததாக கூறப்படும் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவருக்கும், பவானி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வர் ராவ் காலை வேலைக்கு சென்றால் மீண்டும் மாலை தான் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் கடந்த (ஜூலை 27) ஆம் தேதி வழக்கத்துக்கு மாறாக மதிய உணவுக்காக ராஜேஸ்வர் ராவ் திடீரென வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனது மனைவி பவானி, வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்ததாக ராஜேஸ்வர் ராவ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த நபர் சைதுலு என்பதும், கம்மம் பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது... இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் கிராம பெரியவர்கள் முன்னிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண பஞ்சாயத்து நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அந்த பஞ்சாயத்தில் தனது சகோதரரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ராஜேஸ்வர ராவ் தனது சகோதரர்களை அழைக்க சென்றபோது, சைதுலு அவரை பின்தொடர்ந்து வந்து தாக்க முயன்றதாகவும், அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த ராஜேஸ்வர் ராவ், மனைவியின் செல்போனை சோதனை செய்துள்ளார். அப்போது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பவானி மற்றும் சைதுலு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை பார்த்து ராஜேஸ்வர ராவ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதில், ராஜேஸ்வர் ராவை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்வது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் முதலில் காதலன் இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் பவானி அவரிடம் "நீ என் புருஷனை கொன்னு தான் ஆகணும்.. இல்ல நான் உன்ன கொன்னுடுவேன்" என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை சேமித்து வைத்த ராஜேஸ்வர் ராவ், தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி கடந்த (ஆகஸ்ட் 1) ஆம் தேதி தோர்ணக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்... மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தோர்ணக்கல் போலீசார் முதற்கட்டமாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, தொடர் விசாரணைக்காக வழக்கை கம்மம் கிராமப்புற காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். தற்போது ராஜேஸ்வர் ராவ் அளித்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர். மேலும், பவானி மற்றும் சைதுலுவிடம் விசாரணை நடத்தி, கணவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை சாலை விபத்து போல கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
8 likes
12 shares
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி..... பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்களது சட்டவிரோத உறவைக் கண்டித்த ரகு, தங்களது தொடர்புக்கு இடையூறாக இருப்பார் எனக் கருதி, இருவரும் இணைந்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ரகுவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் உடலை அருகில் இருந்த தோட்டத்தில் புதைத்துவிட்டு, கணவர் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக பங்காரி நாடகமாடியுள்ளார்.... கணவர் நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ரகுவின் அண்ணன் லகமன்னா, சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் பங்காரியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பாணியை மாற்றி விசாரித்ததில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை ராம ராணாவுடன் சேர்ந்து கொலை செய்து உடலைத் தோட்டத்தில் புதைத்ததை பங்காரி ஒப்புக் கொண்டார்.... இதையடுத்து பங்காரி மற்றும் ராம ராணா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் அடையாளம் காட்டிய தோட்டத்திலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு ரகுவின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிக்கோடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கள்ளத்தொடர்புக்காகக் கணவனைக் கொன்று 6 மாதங்கள் உடலைத் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
14 likes
9 shares