குர்ஆன் பொன்மொழிகள் 📖📗

36 Posts • 9K views
SHEIK 🌺KSN🌺
9K views 7 days ago
மக்ரிப் நேரத்திலிருந்து இரவு நேரம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் குழந்தைகள் வெளியே தனியாக விளையாட விடக்கூடாது. அவர்களை வீட்டுக்கு கூப்பிட்டு, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரியன் மறைந்ததும் ஷைத்தான்களும், தீய ஜின்களும் பூமியில் அதிகமாக நடமாடுகிறார்கள். அதனால் குழந்தைகளை பாதுகாக்க சொல்லப்பட்டுள்ளது. மக்ரிப் அதான் கேட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு வர சொல்லுங்க வீட்டு கதவை மூடுங்க, அல்லாஹ்வின் பெயரால் சொல்லுங்க குழந்தைகளுக்கு ஆயத்துல் குர்ஸி, மூன்று குல்கு வல்லாஹு சூராக்கள் ஓதி ஊதுங்க. பகல்ல விளையாடுவது தப்பில்லை. வெளிச்சம் இருக்கும்போது, பாதுகாப்பான இடத்தில் விளையாடலாம். ஆனா இருட்டியதும் வீடுதான் பாதுகாப்பான இடம். இறைவா! எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாயாக" — ஆமீன்.! 🤲 நம்ம வீட்ல இருக்குற குட்டீஸை இன்றையில் இருந்து மக்ரிப்க்கு முன்னாடியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. இன் ஷா அல்லாஹ். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
106 likes
85 shares
SHEIK 🌺KSN🌺
893 views 8 days ago
இறைத்தூதர்களிடம் மக்கள் முறையிடுதல் மக்கள் வரிசையாகப் பின்வரும் முக்கிய இறைத்தூதர்களிடம் சென்று, "எங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யக் கூடாதா?" என்று கெஞ்சுவார்கள்: ஆதம் (அலை): "நான் தடை செய்யப்பட்ட மரத்தின் கனியை உண்டதால் என் இறைவன் கோபமாக உள்ளான், என்னால் முடியாது" என்பார்கள். நூஹ் (அலை): "பூமியில் உள்ளவர்களுக்கு எதிராக நான் செய்த பிரார்த்தனையால் என் இறைவன் கோபமாக உள்ளான்" என்று கூறி மறுப்பார்கள். இப்ராஹீம் (அலை): "நான் (சூழ்நிலை காரணமாகப் பேசிய) மூன்று பொய்களை" நினைத்து மறுத்துவிடுவார். மூஸா (அலை): "நான் ஓர் உயிரைக் கொன்ற பாவத்திற்காக அஞ்சுகிறேன்" என்று கைவிரிப்பார். ஈஸா (அலை): "என்னால் முடியாது, நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று வழிகாட்டுவார். நபி(ஸல்) அவர்களின் மகாப் பரிந்துரை (ஷஃபாஅத்). "நான் இறைவனின் அர்ஷுக்குக் கீழே சென்று ஸஜ்தாவில் விழுவேன். இறைவன் எனக்கு இதற்குமுன் யாருக்கும் கற்றுத்தராத புகழுரைகளைக் கற்றுத்தருவான். பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள், கேளுங்கள் கொடுக்கப்படும்; பரிந்துரை செய்யுங்கள் ஏற்கப்படும்' என்று கூறப்படும்." நபி(ஸல்) தன் உம்மத்தினருக்காகப் பரிந்துரை செய்தவுடன், கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்கள் வலதுபக்க வாசல் வழியாக நுழைவார்கள். அப்போது சொர்க்க வாசலின் பிரம்மாண்டத்தை நபியவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்: "என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாசலின் இரு தூண்களுக்கு இடைப்பட்ட தூரமானது, மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ராவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றதாகும்." இஸ்லாமிய வரலாற்றிலும் புவியியல் ரீதியாகவும், நவீன வரைபடங்களின்படி மக்காவிலிருந்து புஸ்ரா நகருக்கு இடைப்பட்ட தூரம் மிகத் துல்லியமாக இருப்பதைக் காட்டி இந்த ஹதீஸ் இறைத்தூதரின் உண்மைத்துவத்திற்குப் பெரும் சான்றாகக் கருதப்படுகிறது. ஸஹீஹ் அல்-புகாரி 4712 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
20 likes
14 shares