பன்னிரு திருமுறை

441 Posts • 397K views
A Mohan Raj
898 views 14 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* *மானக்கஞ்சாற நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான சிவபக்தரின் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் வளம் பொருந்திய கஞ்சாறு (தற்போது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனதாண்டவபுரம்) அவதரித்தவர், இவர் சிவபெருமானின் அடியார்கள் மேல் கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாக, தன் மகளின் திருமண நாளன்றே அவளது நீண்ட கூந்தலை அறுத்துத் தானமாக வழங்கிய உன்னத தியாகத்திற்காக அறியப்படுகிறார்.* *மானக்கஞ்சாற நாயனார் தன் மகளை மற்றொரு சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்திருந்தார். திருமண நாளன்று, மணமகன் வீட்டார் கஞ்சாறு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையில், சிவபெருமான் ஒரு முதிய மகா விரதியார் (சிவனடியார்) கோலத்தில் நாயனாரின் இல்லத்திற்கு எழுந்தருளினார்.நாயனார் தனது மகளை அடியாரிடம் ஆசி பெறச் செய்தபோது, “இவளது நீண்ட கூந்தல் எனது பஞ்சவடி (பூணூல் போன்ற ஒரு ஆடை) செய்வதற்கு மிகவும் ஏற்றது” என்று அடியார் கூறினார். பெண்ணின் கூந்தலை வெட்டுவது மங்கலகரமான திருமணத்தில் பெரும் அபசகுனம் என்றும், மணமகன் அவளை நிராகரிக்கக்கூடும் என்றும் தெரிந்தும் நாயனார் சற்றும் தயங்கவில்லை. சிவனடியாரின் வார்த்தையைச் சிவக்கட்டளையாக ஏற்று, மணக்கோலத்தில் இருந்த தன் மகளின் அழகிய நீண்ட கூந்தலைத் தன் கத்தியால் உடனடியாக அறுத்து அவரிடம் சமர்ப்பித்தார்.* *நாயனாரின் ஈடிணையற்ற பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உடனே மறைந்து அன்னை பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இறைவனின் திருவருளால் அந்தப் பெண்ணின் கூந்தல் மீண்டும் பழையபடி அழகாக முளைத்தது. பின்னர் அங்கு வந்த கலிக்காம நாயனார் இந்த அதிசயத்தைக் கேட்டு, இறைவனின் லீலையை நேரில் காண முடியாமல் போனதை எண்ணி உருகி, அந்தப் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது நூலாறு நன்குணர்வோர் தாம்பாடும் நோன்மையது கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும் காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர். 1 கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும் தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும் மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள். 2 புயல்காட்டுங் கூந்தல்சிறு புறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண் முயல்காட்டும் மதிதோற்கும் முகங்காட்டக் கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர்காட்டுந் தடம்பணைகள். 3 சேறணிதண் பழனவயல் செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண் டலையுழவர் தாறரியும் நெடுங்கொடுவாள் அனையவுள தனியிடங்கள். 4 பாங்குமணிப் பலவெயிலும் சுலவெயிலும் உளமாடம் ஞாங்கரணி துகிற்கொடியும் நகிற்கொடியும் உளவரங்கம் ஓங்குநிலைத் தோரணமும் பூரணகும் பமும்உளவால் பூங்கணைவீ தியில்அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு. 5 Go to top மனைசாலும் நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும் வினைசாலும் உழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப் புனைசாயல் மயிலனையார் நடம்புரியப் புகல்முழவங் கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால். 6 அப்பதியிற் குலப்பதியாய் அரசர்சே னாபதியாம் செப்பவருங் குடிவிளங்கத் திருஅவதா ரஞ்செய்தார் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார் விழுமியவே ளாண்குடிமை வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார். 7 பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனிமதியின் அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற தணிவில்பெரும் பேறுடையார் தம்பெருமான் கழல்சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயுந் தொழில்பூண்டார். 8 மாறில்பெருஞ் செல்வத்தின் வளம்பெருக மற்றதெலாம் ஆறுலவுஞ் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம் ஈறில்பெருந் திருவுடையார் உடையாரென் றியாவையுநேர் கூறுவதன் முன்னவர்தம் குறிப்பறிந்து கொடுத்துள்ளார். 9 விரிகடல்சூழ் மண்ணுலகில் விளக்கியஇத் தன்மையராம் பெரியவர்க்கு முன்சிலநாள் பிள்ளைப்பே றின்மையினால் அரியறியா மலர்க்கழல்கள் அறியாமை யறியாதார் வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால் வழுத்தினார். 10 Go to top குழைக்கலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலே மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால் இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல் பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார். 11 பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களிசிறப்பச் சிறந்தநிறை மங்கலதூ ரியம்முழங்கத் தேவர்பிரான் அறந்தலைநின் றவர்க்கெல்லாம் அளவில்வளத் தருள்பெருக்கிப் புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார். 12 காப்பணியும் இளங்குழவிப் பதம்நீங்கிக் கமழ்சுரும்பின் பூப்பயிலும் சுருட்குழலும் பொலங்குழையும் உடன்தாழ யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற் றாடையுடன் கோப்பமைகிண் கிணியசையக் குறுந்தளிர்மெல் லடியொதுங்கி. 13 புனைமலர்மென் கரங்களினால் போற்றியதா தியர்நடுவண் மனையகத்து மணிமுன்றில் மணற்சிற்றில் இழைத்துமணிக் கனைகுரல்நூ புரம்அலையக் கழல்முதலாப் பயின்றுமுலை நனைமுகஞ்செய் முதற்பருவம் நண்ணினள்அப் பெண்ணமுதம். 14 உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை முலைவருத்த முறுவல்புறம் அலராத முகிண்முத்த நகையென்னும் நறுமுகைமென் கொடிமருங்குல் நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்தணைய. 15 Go to top திருமகட்கு மேல்விளங்குஞ் செம்மணியின் தீபமெனும் ஒருமகளை மண்ணுலகில் ஓங்குகுல மரபினராய்க் கருமிடற்று மறையவனார் தமராய கழல்ஏயர் பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர். 16 வந்தமூ தறிவோரை மானக்கஞ் சாறனார் முந்தைமுறை மையின்விரும்பி மொழிந்தமணத் திறங்கேட்டே எந்தமது மரபினுக்குத் தகும்பரிசால் ஏயுமெனச் சிந்தைமகிழ் வுறஉரைத்து மணநேர்ந்து செலவிட்டார். 17 சென்றவருங் கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக் குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிகவிரும்பி நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கும் நேர்வாய மன்றல்வினை மங்கலநாள் மதிநூல்வல் லவர்வகுத்தார். 18 மங்கலமாம் செயல்விரும்பி மகட்பயந்த வள்ளலார் தங்குலநீள் சுற்றமெலாம் தயங்குபெருங் களிசிறப்பப் பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்கள் இடைநெருங்கக் கொங்கலர்தண் பொழில்மூதூர் வதுவைமுகங் கோடித்தார். 19 கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர்குலப் பெருமானும் தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப மஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய. 20 Go to top வள்ளலார் மணமவ்வூர் மருங்கணையா முன்மலர்க்கண் ஒள்ளிழையைப் பயந்தார்தம் திருமனையில் ஒருவழியே தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம் உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் தாமணைவார். 21 முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில் கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி பண்டொருவன் உடலங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்தரளம் எனக்காதின் மிசையசையுங் குண்டலமும். 22 அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும் பைவன்பேர் அரவொழியத் தோளிலிடும் பட்டிகையும் மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச் செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும். 23 ஒருமுன்கைத் தனிமணிகோத் தணிந்தவொளிர் சூத்திரமும் அருமறைநூற் கோவணத்தின் மிசையசையும் திருவுடையும் இருநிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும் திருவடியில் திருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க. 24 பொடிமூடு தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க் கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத் தடிநீடும் மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார். 25 Go to top வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண் டெதிரெழுந்து சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார் எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே யெழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்என் றுருகியஅன் பொடுபணிந்தார். 26 நற்றவராம் பெருமானார் நலமிகும்அன் பரைநோக்கி உற்றசெயல் மங்கலமிங் கொழுகுவதென் எனஅடியேன் பெற்றதொரு பெண்கொடிதன் வதுவையெனப் பெருந்தவரும் மற்றுமக்குச் சோபனம்ஆ குவதென்று வாய்மொழிந்தார். 27 ஞானச்செய் தவரடிமேற் பணிந்துமனை யகம்நண்ணி மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் திருமகளைக் கொண்டணைந்து பானற்கந் தரமறைத்து வருமவரைப் பணிவித்தார். 28 தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறம்நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த் தணங்கிவள்தன் மயிர்நமக்குப் பஞ்சவடிக் காமென்றார் பரவஅடித் தலங்கொடுப்பார். 29 அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனையுருவிப் பொருள்செய்தா மெனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட. 30 Go to top வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம் அவர்மறைந்து பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி ஓங்கியவிண் மிசைவந்தார் ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத் தூங்கியபொன் மலர்மாரி தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார். 31 விழுந்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர் தமக்குமதிக் கொழுந்தலைய விழுங்கங்கை குதித்தசடைக் கூத்தனார் எழும்பரிவு நம்பக்கல் உனக்கிருந்த பரிசிந்தச் செழும்புவனங் களிலேறச் செய்தோமென் றருள்செய்தார். 32 மருங்குபெருங் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள் நெருங்கவிடை மேல்கொண்டு நின்றவர்முன் நின்றவர்தாம் ஒருங்கியநெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற் குவித்தையர் பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு நேர்பெற்றார். 33 தொண்டனார் தமக்கருளிச் சூழ்ந்திமையோர் துதிசெய்ய இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார் வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க மணக்கோலங் கண்டவர்கள் கண்களிப்பக் கலிக்காம னார்புகுந்தார். 34 வந்தணைந்த ஏயர்குல மன்னவனார் மற்றந்தச் சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பால் கேட்டருளிப் புந்தியினில் மிகவுவந்து புனிதனார் அருள்போற்றிச் சிந்தைதளர்ந் தருள்செய்த திருவாக்கின் திறங்கேட்டு. 35 Go to top மனந்தளரும் இடர்நீங்கி வானவர்நா யகரருளால் புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை மணம்புணர்ந்து தனம்பொழிந்து பெருவதுவை உலகெலாந் தலைசிறப்ப இனம்பெருகத் தம்முடைய எயின்மூதூர் சென்றணைந்தார். 36 ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க் கீந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமைஎன் அளவிற் றாமே மருவிய கமரிற் புக்க மாவடு விடேலென் னோசை உரிமையால் கேட்க வல்லார் திறமினி யுரைக்க லுற்றேன். 37 *"மலை மலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
11 likes
17 shares
A Mohan Raj
1K views 22 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* *ஏனாதிநாத நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில், சேக்கிழாரால் பாடப்பட்ட உன்னதமான சிவனடியார் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான எயினனூர் என்ற தலத்தில் அவதரித்தவர் ஆவார். திருநீற்றின் மீது கொண்ட பக்தி மற்றும் அடியார்களுக்குச் செய்யும் தொண்டிற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. அரசர்களுக்கு வாள்வித்தைப் பயிற்சி அளிக்கும் தலைமை வாளாசிரியர். வாள் வித்தையின் மூலம் ஈட்டும் பொருள் முழுவதையும் சிவனடியார்களுக்கு அமுது படைக்கவும், திருப்பணிகள் செய்யவும் செலவிட்டார். திருநீறு அணிந்தவர்களைச் சிவனாகவே மதிக்கின்ற மாபெரும் சிவதொண்டராக விளங்கினார்.* *ஏனாதிநாதரிடம் வாள் பயிற்சி பெறப் பலரும் வந்ததால், அவரிடம் கல்வி பயின்ற சீடர்களின் எண்ணிக்கை பெருகியது. இதனால், அதே ஊரில் வாள் வித்தை கற்பித்து வந்த இவருடைய தாயாதி உறவினரான அதிசூரன் என்பவனுக்கு வருவாய் குறைந்தது. வஞ்சகமும் பொறாமையும் கொண்ட அதிசூரன் தன் சுற்றத்தாரைத் திரட்டிக்கொண்டு ஏனாதிநாதருடன் போரிட முற்பட்டான். இரு தரப்பிற்கும் இடையே கடுமையான போர் மூண்டது. வில், வாள், வேல் ஏந்தி நடந்த இந்தப் போரில் ஏனாதிநாதரின் வீரத்திற்கு முன்னால் அதிசூரனின் படை தோற்று ஓடியது.தோல்வியால் அவமானம் அடைந்த அதிசூரன், நேர் வழியில் ஏனாதிநாதரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.* *ஏனாதிநாதர் திருநீறு (வெண்ணீறு) அணிந்த சிவனடியார்களைத் தன் உயிர் இருக்கும் வரை எதிர்க்க மாட்டார் என்ற ரகசியத்தை அதிசூரன் அறிந்திருந்தான்.ஒரு நாள் விடியற்காலையில், ஏனாதிநாதருக்கு ஒரு தூது அனுப்பினான். "நம் சுற்றத்தார் அழியாமல் நாம் இருவர் மட்டும் தனியிடத்தில் போரிட்டு வெல்பவர் இத்தொழிலை வைத்துக் கொள்வோம்" என்று அழைத்தான்.அதனை ஏற்ற ஏனாதிநாதர் தனியாகப் போர்க்களத்திற்குச் சென்றார்.அதிசூரன் தன் நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு, அதன் மேல் எவருக்கும் தெரியாதவாறு கேடயத்தால் மறைத்துக் கொண்டு வந்தான்.போர் தொடங்கியவுடன், ஏனாதிநாதர் அவனை வெட்ட முற்படும் வேளையில் அதிசூரன் தன் கேடயத்தை விலக்கித் தன் நெற்றியில் இருந்த திருநீற்றைக் காட்டினான்.* *அதிசூரனின் நெற்றியில் திருநீற்றைக் கண்ட ஏனாதிநாதர் திடுக்கிட்டார். "இவர் சிவபெருமானின் அடியவராகிவிட்டார்; இவரை நான் கொல்லக் கூடாது" என்று நினைத்தார்.அதே நேரத்தில், ஆயுதத்தை கீழே போட்டால் ஆயுதமில்லாதவரைக் கொன்ற பழி அதிசூரனுக்கு வந்து சேரும் என்று அஞ்சினார். எனவே, தன் கையில் வாளையும் கேடயத்தையும் ஏந்தியவாறே, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அசையாது நின்றார். வஞ்சகனான அதிசூரன், ஏனாதிநாதரின் நிலையைப் பயன்படுத்தித் தன் வாளால் அவரை வெட்டிக் கொன்றான். திருநீற்றுக்காகத் தன் உயிரையே ஈந்த ஏனாதிநாதரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி அவருக்கு சிவலோக முக்தி அளித்தருளினார். இப்புராணம் நமக்குத் திருநீற்றின் பெருமையையும், சிவனடியார் வேடத்தின் மீது ஒரு பக்தன் வைக்க வேண்டிய உன்னத மதிப்பையும் உணர்த்துகிறது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* கொச்சகக் கலிப்பா புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும் தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில் வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர். 1 வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில் தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய் வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில் ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார். 2 தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார். 3 வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில் தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார். 4 நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான். 5 மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான். 6 தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம் மேனாளுந் தான் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான். 7 கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப் பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான். 8 தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான். 9 வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா. 10 ஆர் கொல் பொர அழைத்தார் என்றரி ஏற்றின் கிளர்ந்து சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார். 11 புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும் விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார் மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள். 12 வந்தழைத்த மாற்றான் வயப் புலிப் போத்து அன்னார் முன் நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால் இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும் சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென. 13 என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக் கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார். 14 வேறு - மாச்சீரும் விளச்சீரும் விரவி வந்த அறுசீர் சந்த விருத்தம் மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர் காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர். 15 கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய வாளொளி வட்ட முனைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர் ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன. 16 வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர் செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன. 17 வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில். 18 குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின வெருவர எருவை நெருங்கின விசியறு துடிகள் புரண்டன இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை. 19 நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர் தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும். 20 கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர் ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர். 21 பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டர்கள். 22 அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில் விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன. 23 திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர். 24 வேறு - கொச்சகக் கலிப்பா இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார். 25 வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண் எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர் தஞ்சிரமும் தோளுரமும் தாளும் விழத் துணித்தார். 26 தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார். 27 இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு அன்னவர் தம் முன் சென்று . அதி சூரன் நேர் அடர்ந்தான். 28 மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச் சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப் பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான். 29 போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த மான மிக மீதூர மண் படுவான் கண் படான் ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமருவான் ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான். 30 சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும் நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத் தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான். 31 இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில் வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார். 32 சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து மற்றவன் முன் சொல்லி வரக்குறித்த அக் களத்தே பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார். 33 தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1 தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2 ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப் பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான். 34 வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான். 35 வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான். 36 அடல் விடையேறு என்ன அடர்த்தவனைக் கொல்லும் இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர் புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக் கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார். 37 கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என் அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று. 38 கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார். 39 அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான் இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார். 40 மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப் பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார். 41 தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும் நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம். 42 *"ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
6 likes
12 shares
A Mohan Raj
1K views 23 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* *எறிபத்த நாயனார் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணத்தில், முதற் காண்டத்தில் உள்ள "இலை மலிந்த சருக்கம்" என்னும் பகுதியில் ஒன்பதாவது புராணமாக இடம்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் வரும் "இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்" என்ற அடியை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிப்போரைத் தன் கையில் எப்போதும் இருக்கும் 'மழு' (கோடரி) என்னும் ஆயுதத்தால் தண்டிப்பதே இவரின் சிவத்தொண்டாக இருந்தது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* அறுசீர் விருத்தம் மல்லல் நீர்ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு ஒல்லை வந்துஉற்ற செய்கை உற்றிடத்து உதவும் நீரார் எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம். 1 பொன் மலைப்புலி வென்றுஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந்நெறி வழியே ஆகஅயல் வழி அடைத்த சோழன் மன்னிய அநபாயன் சீர் மரபின் மாநகர மாகும் தொன்நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர். 2 மாமதில் மஞ்சுசூழும் மாளிகை நிரை விண் சூழும் தூமணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் தேமலர் அளகஞ் சூழும் சிலமதி தெருவிற் சூழும் தாம் மகிழ்ந்து அமரர்சூழும் சதமகன் நகரம் தாழ. 3 கடகரி துறையில் ஆடும்களி மயில் புறவில் ஆடும் அடர்மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டுஆடும் படரொளி மறுகில் ஆடும்பயில் கொடி கதிர் மீதுஆடும் தடம்நெடும் புவி கொண்டாடும் தனிநகர் வளமை ஈதால். 4 மன்னிய சிறப்பின் மிக்கவள நகர் அதனில் மல்கும் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்கதொண்டர் தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில். 5 பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக்கோயில் மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருட்பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார். 6 மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழையரி என்னத் தோன்றிமுரண் கெட எறிந்து தீர்க்கும் பழமறை பரசும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார். 7 அண்ணலார் நிகழும் நாளில் ஆனி லைஅடிக ளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம்பூப் பறித்து அலங்கல் சாத்தி உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒருநாள் முன் போல். 8 வைகறை உணர்ந்து போந்துபுனல் மூழ்கி வாயும் கட்டி மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக் கையினில் தெரிந்து நல்லகமழ் முகை அலரும் வேலைத் தெய்வ நாயகருக்குச் சாத்தும்திருப் பள்ளித் தாமம் கொய்து. 9 கோலப் பூங்கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலியநேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும் காலை வந்துஉதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார். 10 மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள்குலப் புகழ்ச் சோழனார் தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகு மாநவமி முன்னாள். 11 மங்கல விழைவு கொண்டுவரு நதித் துறை நீராடிப் பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் எங்கணும் இரியல் போகஎதிர் பரிக் காரர் ஓடத் துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே. 12 வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் சென்றுஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல வன்தனித் தண்டில் தூங்கும் மலர்கொள் பூக்கூடை தன்னைப் பின்தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்துமுன் பறித்துச் சிந்த. 13 மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண்டு அகலப் போக நூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி மால்கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண்டு அடிக்க வந்தார். 14 அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்றுபோக மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்து பின்செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால்தரை அடித்து எழுந்து நின்று செப்புஅரும் துயரம்நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார். 15 வேறு - கலிவிருத்தம் களி யானையின் ஈர்உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!. 16 ஆறும் மதியும் அணியும் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிந் துவதே வேறுள் நினைவார் புரம்வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!. 17 தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் நெஞ்சே துயரம் கெடநேர் தொடரும் மஞ்சே எனவீழ் மறலிக்கு இறைநீள் செஞ்சே வடியாய்! சிவதா! சிவதா!. 18 நெடியோன் அறியா நெறியார் அறியும் படியால் அடிமைப் பணிசெய்து ஒழுகும் அடியார் களில்யான் ஆரா அணைவாய் முடியா முதலாய் எனவே மொழிய. 19 வேறு - அறுசீர் விருத்தம் என்றவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா நின்றவர் கேளாமூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி மன்றவர் அடியார்க்கு என்றும்வழிப் பகை களிறே அன்றோ கொன்று அதுவீழ்ப்பன் என்று கொலை மழுஎடுத்து வந்தார். 20 வந்தவர் அழைத்த தொண்டர்தமைக் கண்டு வணங்கி உம்மை இந்தவல் இடும்பை செய்த யானை எங்குற்றது என்ன எந்தையார் சாத்தும் பூவைஎன் கையில் பறித்து மண்மேல் சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றது இத்தெருவே என்றார். 21 இங்கது பிழைப்பது எங்கே இனிஎன எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையில் சென்றுபொரு கரி தொடர்ந்து பற்றும்* செங்கண் வாள்அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார். (*தொடர்ந்து செல்லும் என்றும் பாடம்) 22 கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்த அக்களிறே போலும் அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன் என்றுசுடர் மழு வலத்தில் வீசிக் கொண்டு எழுந்து ஆர்த்துச்சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார். 23 பாய்தலும் மிசைகொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்து மேற்கதுவ அச்சம் தாய்தலை அன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்து தோய்தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர். 24 கையினைத் துணித்த போதுகடல் எனக் கதறி வீழ்ந்து மைவரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்யகோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர்ஆக ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார். 25 வெட்டுண்டு பட்டுவீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி மட்டவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்ட நீர்கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார். 26 மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக்குரை கழல் பணிந்து போற்றிப் பற்றலர் இலாதாய் நின்பொற் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார். 27 வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற கிளர்மணித் தோள் அலங்கல் சுரும்பினம் கிளர்ந்து பொங்க அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் இளஅரி ஏறுபோல எழில் மணி வாயில் நீங்க. 28 தந்திரத் தலைவர் தாமும் தலைவன்தன் நிலைமை கண்டு வந்துறச் சேனை தன்னைவல் விரைந்து எழமுன் சாற்ற அந்தரத்து அகலம் எல்லாம் அணிதுகில் பதாகை தூர்ப்ப எந்திரத்தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி. 29 வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க வல்லெழும் உசலம் நேமிமழுக் கழுக்கடை முன் ஆன பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்தவன் கண் எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும். 30 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டைவியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம்பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான்கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பிமல்க. 31 தூரியத் துவைப்பும் முட்டுஞ்சுடர்ப் படை ஒலியும் மாவின் தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும் வீரர்தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடல்எனக் கலித்த அன்றே. 32 பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழுசேனை எல்லாம் மண்ணிடை இறுகால் மேன்மேல் வந்து எழுந்ததுபோல் தோன்றத் தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர் அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மாவீதி சென்றான். 33 கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படுகளம் குறுகச் சென்றான் பகைபுலத்து அவரைக் காணான் விடுசுடர் மழுஒன்று ஏந்தி வேறு இருதடக் கைத்தாய அடுகளிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான். 34 பொன்தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவரென்று ஓரான் வென்றவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான். 35 அரசன் ஆங்கருளிச் செய்ய அருகு சென்றணைந்து பாகர் விரை செய்தார் மாலையோய்நின் விறற் களிற்று எதிரேநிற்கும் திரை செய்நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்குசெய்தார் பரசு முன்கொண்டு நின்ற இவர்எனப் பணிந்து சொன்னார். 36 குழை யணிகாதி னானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின்அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டுஎன்று உட்கொண்டு மழை மதயானை சேனை வரவினை மாற்றி மற்ற உழை வயப்புரவி மேல் நின்று இழிந்தனன் உலகமன்னன். 37 மைத்தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரேஇந்த மெய்த்தவர் சென்றபோது வேறு ஒன்றும் புகுதா விட்ட அத்தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்என் கொலோ பிழைஎன்று அஞ்சி. 38 செறிந்தவர் தம்மைநீக்கி அன்பர் முன்தொழுது சென்று ஈது அறிந்திலேன் அடியேன் அங்குக் கேட்டது ஒன்றதுதான் நிற்க மறிந்த இக்களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார். 39 மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் சென்னி இத்துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன்பறித்துச் சிந்தத் தரைபடத் துணித்து வீழ்த்தேன். 40 மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீதங்கு கடாவு வாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் ஈதிங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன். 41 அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ்வப ராதத்துக்கு இங்கிது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்குமன்று இதுவாம் என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார். 42 வெந்தழல் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன் அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று தந்தவாள் வாங்க மாட்டார் தன்னைத் தான்துறக்கும் என்று சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார். 43 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே ஈங்கெனை வாளினால் கொன்று என்பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பால் என்றே ஆங்கவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி. 44 வன்பெருங் களிறுபாகர் மடியவும் உடை வாளைத் தந்து என்பெரும் பிழை யினாலே என்னையும் கொல்லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு முன்பெனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவென்று எண்ணி. 45 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம்கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவாறு இது என் கெட்டேன் என்று எதிர் கடிதிற் சென்று பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும். 46 வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற அளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக் களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளரொளி விசும்பின் மேல் வந்தெழுந்தது பலரும் கேட்ப. 47 தொழுங்கை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச் செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள் கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்றென்று அங்கு எழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்தது அன்றே. 48 ஈரவே பூட்டும் வாள்விட்டு எறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர் நிருபர் கோனும் போர்வடி வாளைப் போக எறிந்தவர் கழல்கள் போற்றிப் பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார். 49 இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்றுஅத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமி யாரும் நின்றார். 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
18 likes
19 shares