வைகுண்ட ஏகாதசி

190 Posts • 5M views
MUTHUPANDIAN RAMKUMAR
734 views 21 days ago AI indicator
*🙏🕉️25.07.2026 தேவசயனி ஏகாதசி🕉️🙏* *🙏🪷தேவசயனி ஏகாதசி,🪷🙏* *🙏🪷சாதுர்மாஸ்ய விரதம்* *வாசுதேவ துவாதசி* *விரத மகிமைகள், வழிமுறைகள்..🌷🙏* *🙏🕉️கடுமையான துயரங்கள் மற்றும் இக்கட் டான தருணங்களை நம் வாழ்வில் சந்திக் கும்போது இவற்றிலிருந்து மீண்டுவர வழியே இல்லையா என்பதுதான் மனித மனத்தில் எழும் கேள்வி.🙏* *🙏அத்தகைய கேள்விகளுக்கான விடைகளா க நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத் திருக்கும் முறையே விரதங்கள். 🕉️🙏* *🙏ஒரு மாதத்தில் ஓரிரு நாள்கள் விரதமிரு ந்து இறை வனை வழிபட ஏற்பட இருக்கும் அல்லது ஏற்பட்டிருக்கும் துன்பங்களிலிரு ந்து காத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். 🙏* *🙏அவற்றைக் கடைப்பிடித்து அதன் பலனை யும் புராணங்களாக எழுதிவைத்தார்கள். அப்படிப்பட்ட விரதங்களில் மிகவும் முக்கி யமானது ஏகாதசி விரதம்.🕉️🙏* *🙏🪷தேவசயனி ஏகாதசி🪷🙏* *🙏🪷‘ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை’ என் பது ஆன்றோர் வாக்கு. ஏகாதசி திதி ஒரு மாதத்தில் இருமுறை வரும். ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அப்படி ஆஷாடமாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். 🪷🙏* *🙏சயனம் என்றால் உறக்கம். தேவர்களும் மகாவிஷ்ணுவும் உறங்கச் செல்லும் நாள் தேவசயனி ஏகாதசி. இந்த நாளில் யோக நித்திரையில் ஆளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். 🙏* *🙏புராண வரலாறு🙏* *🙏மக்களுக்காக வாழ்ந்த மன்னன் மாந்தாதா* *ஏகாதசி விரத மகிமைகளை பாண்டவர்க ள்* *கேட்பதுபோலவும் பகவான் கிருஷ்ணர் சொல்வதுபோலவும் அமைந்திருப்பது ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூல்.*🙏 *🙏இதன் காரணம், பகவான் கிருஷ்ணரே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளை ப் போற்றிக்கூறியிருப்பதுதான். மேலும் கிருஷ்ண பரமாத்மாவின் காலத்துக்கு முன்பாகவே ஏகாதசி விரதங்கள் புகழ் பெற்று விளங்கின என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.🙏* *🙏யுதிஷ்ட்டிரர் கண்ணனிடம் தேவ சயனி ஏகாதசியின் மகிமைகளைக் கேட்க, கிருஷ்ணரோ, பிரம்மா, நாரதருக்கு எடுத் துச் சொன்ன ஒரு நிகழ்வைச் சொல்லி இதன் சிறப்பை விளக்குகிறார்.* *🙏சூரிய வம்சத்தில் பிறந்த மன்னன் மாந்தாதா. தன் நாட்டில் நீதி வழுவாமல் ஆட்சி செய்துவந்தான். நாடும் சுபிட்சமாக இருந்தது. ஒருமுறை அவன் நாட்டில் மழை குறைந்து பஞ்சம் ஏற்பட்டது.* *🙏தான் நீதி வழுவாமல் ஆட்சி புரிந்தும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திய மன்னன் இதன் காரணம் அறிய கானகத் தில் வாழும் ரிஷிகளைச் சந்திக்கச் சென்றான்.* *🙏அங்கு ஆங்கிரஸ முனிவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அப்போது தன் நாட்டின் பஞ்சத்துக்கு என்ன காரணம்? தான் நீதி வழுவாமல்தானே ஆட்சி செய்கிறேன்’ என்று கேட்டார்.* *🙏இதைக் கேட்ட முனிவர் அவனின் சிந்தை யைச் சோதிக்கும்விதமாக, “ஒருநாட்டில் குடிமக்கள் செய்யும்பாவம் மன்னனையே சாரும். எனவே உன் நாட்டு மக்களில் ஒருவன் செய்த பாவமே உன் நாட்டை இப்படி வாட்டுகிறது. நீ அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொலை செய்துவிட்டா ல் இந்தப் பஞ்சம் நீங்கிவிடும்” என்றார்.* *🙏அதைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டு, “ஓர் உயிரை கொல்லும் பாவத்தை செய்யாது, இதிலிருந்து மீள வேறு வழியில்லையா” என்று கேட்டான்.* *🙏இதைக் கேட்ட மகரிஷி குடிமக்கள் மீதான அவன் அன்பை உணர்ந்து மகிழ்ந்து ஆஷாட மாதத்தில் வரும் ஏகாதசி விரதத் தைப் பின்பற்று. அன்றைய தினத்தில் நீயும் உன் நாட்டு மக்களும் விரதம் இருந் து அந்த நாராயணரை வழிபட்டால், அவர் ஜல நாராயணராக பெருமழை பெய்து உன் நாட்டின் பஞ்சத்தைப் போக்குவார்” என்று ஆசிவழங்கினார்.* *🙏மன்னனும் அவ்வாறே விரதம் இருந்து வணங்கினான். முனிவர் சொன்னது போ ல் மழை பொழிந்து பஞ்சம் நீங்கியது. அன்று முதல் தேவசயனி ஏகாதசி என்பது இக்கட்டான தருணங்களில் கடைப்பிடித்து ப் பயன் பெற வேண்டிய ஏகாதசிவிரதமாக ப் போற்றப்பட்டது என்று கிருஷ்ணர் விளக்கினார்.* *🙏விரத முறைகள்🙏* *🙏🌷பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன் று நாள்கள் கொண்டது. ஏகாதசிக்கு முன் தினம் அதாவது தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி பெருமாளை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயண மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.🌷🙏* *🙏🌷ஏகாதசி அன்று முழு உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் முழு அரிசி சோற் றைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற் கான துளசியை தசமி அன்றே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் துவாதசி காலையில் பாரனை செய்து விரதம் முடிக்க வேண்டும்.🌷🙏* *🙏🌷இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியில் இருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது.🌷🙏* *🌷சாதுர்மாஸ்ய விரதம்🌷* *🙏தேவசயனி ஏகாதசிக்குப் பின்வரும் பௌ ர்ணமியிலிருந்து நான்கு மாத காலம் மேற் கொள்ளப்படும் விரதமே சாதுர்மாஸ்ய விரதம். அதாவது ஆஷாட பௌர்ணமியி ல் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரை யான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.🙏* *🙏இந்தக் காலம் மிகவும் புனிதமான காலமா கப் போற்றப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் தங்கள் உணவு முறை யில் ஒரு நெறிமுறையைப் பின்பற்றுவார் கள்.*🙏 *🙏குறிப்பாக, முதல் மாதம் உணவில் காயும் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வார் கள். இரண்டாம் மாதத்தில் பால் அருந்து வதை த் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரை த் தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்க ள். இப்படி உணவிலு ம் ஒரு கட்டுப்பாடு கொள்வதோடு மனதை இறைவழிபாட்டி லேயே வைத்திருப்பார்கள்.*🙏 *🙏இந்தக் காலகட்டத்தில் சூரியன் தன் உத்தி ராயண சஞ்சாரத்திலிருந்து விலகி தட்சி ணாயின சஞ்சாரத்தில் பிரவேசிப்பார். இவை எல்லாமே தேவசயனி ஏகாதசியை அடுத்துவரும் நிகழ்வுகள்.* *🙏வாஸுதேவ துவாதசி🙏* *🙏🌷தேவ சயனி ஏகாதசியை அடுத்துவரும் துவாதசி வாசுதேவ துவாதசி ஆகும். இந்த நாளில் வாசுதேவ கிருஷ்ணரை வழிபடும் முறை உள்ளது.* *🙏இந்த நாளில் காலையில் நீராடி பகவான் கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட வேண்டும். மேலும் வாசு தேவ துவாதசி அன்று செய்யும் தானம் பல மடங்கு பலன் அளிக்கக் கூடியது. இந்த நாளில் உணவு தேவை உள்ளவர்களுக்கு த் தானியம் தானம் செய்வது சிறப்பு.*💐🌷🌹🙏 *🙏🕉️ஓம் நமோ நாராயணாய....🕉️🙏* *🙏🕉️ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்....🕉️🙏* ##ஏகாதசி விரதம்# #வைகுண்ட ஏகாதசி #ஆடி தேய்பிறை ஏகாதசி #வருத்தினி ஏகாதசி
16 likes
10 shares
Saranya Gopi
6K views 6 months ago
39 likes
2 comments 48 shares