# ***அழைக்கிறான் இறைவன் ??!! ( கொஞ்சம் ஆழ்ந்த , அழுத்தமான பதிவு ..)***
யாரோ அழைப்பது போல !! என்னிடம் ஏமாறு ?? என்று இறைவன் ஒருபோதும் அழைப்பது இல்லை ..
எப்போதும் புலன்கள் வழியே !! சுற்றி திரிந்துகொண்டே இருக்கிறாய்யே ..
கண்ணின் காட்சி !! அதை ஒத்த சிந்தனை என்றே ஓடுகிறாய் ??
காதில் ஓசை !! அதன் இருப்பில் ஓடுகிறாய் ??
நாசியின் வாசம் !! அதை நோக்கி ஓடுகிறாய் ??
நாக்கின் சுவை !! பேச்சு !! அதை சுவைக்கும் ?? கேட்க ஆள் தேடியும் ஒட்டுகிறாய் ??
உடலின் உணர்வு !! அந்த உணர்வை அடக்க ஓடுகிறாய் ??
ஆனால் ஒன்று !!
உன்னிடம் இருக்க மட்டும் ?? உன்னால் முடியவே இல்லை என்பதே எதார்த்தம் ..
யாரோடு ஓடலாம் !!
எந்த நினைவோடு ஓடலாம் !!
யாரைப்பற்றி விமர்சிக்க !! புகழ !! ஏமாற !! ஏமாற்ற !! ஓடலாம் !! என்று இரவு பகல் பாராதே !!
நிஜமாய் ?? நினைவாய் ?? கணவாய் ?? கற்பனையாய் ?? ஓடிக்கொண்டே இருக்கும் உன்னை .........
" இறைவன் அழைக்கிறான் "
எங்கே இருந்து அழைக்கிறான் ?? என்ற கேள்வி உடனே கேள்வி எழும் ..
வேறு எங்கே இருந்து ??
உன் உள்ளே இருந்தே அழைக்கிறான் !!
என்ன சொல்லி அழைக்கிறான் ??
" உள்ளே வா !! வெளியே சுற்றி , கொடுத்த ஆற்றலை தொலைத்த வரை போதும் !! "
" உள்ளே வா !! உன்னுள்ளே வா !! " என்றே அழைக்கிறான் ..
என்னோடு இரு !! தருவதை உன்னுள்ளே , உனக்காக பெருக்கிக்கொள்ள வா !!
எதன்மீதோ பொய்யான நம்பிக்கை ?? சந்தேகம் ?? ஆறுதல் ?? அன்பு ?? என்று அலைபாய்ந்து இதுவரையில் ஏமாற்றத்தையே பெற்று !! இருப்பதை தொலைத்தவரையில் போதும் உள்ளே வா " என்ற அழைக்கிறான் இறைவன் !!
" நீ தான் இறைவன் ஆயிற்றே !! என்னை இழுத்து உள்ள போட உன்னால் முடியாதா ?? " - என்ற திமிர் கேள்வி நம்முள்ளும் எழும் ..
அதற்க்கும் இறைவன் பதிலளிக்கிறான் ..
அப்படி இழுத்து போட்டு !! உன்னை நித்தமும் புதுப்பித்து !! நீ கெடுத்துக்கொண்ட உன்னை சரிப்படுத்தி !! தினமும் கொடுக்கின்றேன் !! தூக்கம் / விழிப்பு என்றே ..
அந்த ஆற்றலை தான் வலிய போய் தொலைக்க ஓடிக்கொண்டே இருக்கின்றாய் ..
இப்படி இழுத்து போடுவதை விட ..
நீயே உவந்து உணர்ந்து உள்ள வா !! உணர்ந்து வா !! என்று தான் உன்னை அழைக்கின்றேன் ..
வருவாயோ ??
உன்னில் கலந்த கடவுளாய் என்னை உணர்வாயோ !! அனுபவிப்பதையோ !! நினைத்ததை எல்லாம் பெறுவாயோ ?? என்று உனக்கு உன்னையே மேன்மேலும் கொடுக்கவே அழைக்கிறான் இறைவன் !!
வாழ்த்துகள்
புரிந்தால் சந்தோஷம் !!
புரியாவிட்டால் புரியவைக்கவும் நானே இருக்கிறேன் என்ற சந்தோஷம் !! ஏதோ இறையின் குரலாய் இவனுள் ..
இவனோடு சேர்த்து யாருக்கோ ........................
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்