இந்த வீடியோவை நான் பலமுறை பார்த்து விட்டு என் பார்வையில் இருந்து சொல்கிறேன்...கை தெரியாம முதல்லபட்டது... அதை தொடர்ந்து அதையே சாக்கா வச்சு தெரிஞ்சே ஒரு தடவ வேணும்னே உரசுறது தெரியுது... ஆனா...அந்தப் பெண் நெனச்சிருந்தா.. அதை தவிர்த்திருக்கலாம்...
அங்கயே விலகி வந்திருக்கலாம்....செல்போனை பிடித்து வீடியோ எடுத்த கையை வைத்து மார்பை கவர் பண்ணியிருக்கலாம்...விரட்டி விரட்டி உரசுற நபர் மாதிரி தெரியல... கிடைச்ச சான்ஸ use பண்ண மாதிரி தெரியுது...வீடியோவ பல தடவ பார்த்திட்டு தான் சொல்றேன்...எங்கள் வீட்டிலும்... ஆண்கள் இருக்கிறார்கள்.. மூச்சு கூட விட முடியாத அளவுக்கு பேருந்தில் பயணம் செய்யும் சூழலில் என்ன செய்வது? பேருந்து நெரிசலில் எல்லா உடல் உறுப்புகளும்... பெண்களோட... பெண்களா இருக்கட்டும்.. ஆண்களோடு ஆண்களாக இருக்கட்டும்... ஆண்கள்..பெண்களாக இருக்கட்டும் தெரியாமல் உரசும் நிலை வரத்தான் செய்யும்...
இதை தவிர்க்க முடியாது...அருவருப்பாகத்தான் இருக்கும்... முடிஞ்ச வரை அதை தவிர்க்க முயற்சி செய்யணும்... உரசாத மாதிரி adjust பண்ணி நிற்க தெரியணும்..எப்படீன்னா...
பெண்கள் edge-ல் அமர்ந்திருக்கும் Seat பக்கம் நின்று கொண்டு ஆண்கள்.. நெருங்கி வரும் போதோ... கடந்து செல்லும் போதோ...பெண்கள் பக்கம் உடல் முழுவதுமாக சாய்த்து ஆண்களுக்கு வழி விட வேண்டும்...மார்பை உரசும் நிலை வந்தால் கைகளை கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும்.. பின்பக்கம் உரசுற மாதிரி சூழல் ஏற்பட்டால்..நம் கையில் உள்ள பை வைத்து பின்பக்கம் மறைத்துக் கொள்ள வேண்டும்... முடியலயா...driver Seat பக்கம் போய் நின்னுடனும்... ஒரளவுக்கு உரசுறத தவிர்க்க முடியும்... அத்துமீறல் அதிகமாகும் போது... பொறுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை... அந்த இடத்திலே கண்டிக்க வேண்டும்... உண்மையிலே இனி வரும் காலங்களில் இந்த நிகழ்வுக்கு பிறகு நிஜமாகவே நடக்கும் பட்சத்தில் பெண்கள் வீடியோ எடுத்தால் பெண்களைத் தான் குறை சொல்வார்கள்... உண்மையாக தவறான உரசுதல்..தொடுதல் உணர்ந்தால் அப்பவே react பண்ணிடனும்...Social media...ல போட்டா... Views தான் போகும் தீர்வு கிடைக்காது... தீர்வு கிடைக்கணும்னு நெனைக்கிறவுங்க அப்பவே... react பண்ணிட்டு போயிடுங்க...நிறைய பேர் நினைப்பு தப்பு பண்ணணும்..
ஆனா அது யாருக்கும் வெளியே தெரிஞ்சிடக் கூடாது.. ஏன்னா...மானம் போயிடும்ல... சுயக்கட்டுப்பாடு இருக்காது...
தான் செய்தது தவறுன்னு ஒத்துக்கவும் மாட்டாங்க.... அத்துமீறல் தொடரும் பட்சத்தில் பேருந்து ஒட்டுனர் நடத்துனர்கிட்ட சொல்லி இருந்தாலே அவர்கள் அந்த நபரை கண்டித்திருப்பார்கள்..இந்த வீடியோ எடுத்த பெண்ணையும் அந்த நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அந்த வீடியோவை போட்டு காண்பித்து அதில் யார் மீது தவறோ அதற்கு தகுந்த மாதிரி காவல் துறை நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம்... இதற்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை... தன் மீது தவறில்லை என நிரூபிக்க ஆயிரம் வழிகள் அந்த நபருக்கு இருக்கு...இருந்தும் அதை செய்யாமல் தற்கொலை செய்தது எதனால்? தவறு வீடியோ எடுத்த பெண் மீது என்றால் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வரவழைத்து அந்த பெண்ணயே அந்த நபர் மீது தவறில்லை என்பதை சொல்ல வைத்திருக்கலாம்...யார் மீது தவறோ...அவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை
எடுக்க...வைத்திருக்க முடியும்!... 42 வயது நபர் தன் மீது தவறில்லாத பட்சத்தில் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்க வேண்டியதில்லை...பழிகளையும்...அவதூறுகளையும் கடந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்... தவறு செய்திருக்கும் பட்சத்தில் அதை திருத்திக் கொள்ளலாம்... மறுபடியும் அந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம்...எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றால் யாருமே உயிரோடு இருக்க முடியாது... திருத்தி கொள்ளக் கூடிய தவறுகளில் இதுவும் ஒன்று...
அந்த சம்பவம் உண்மையாக நடந்ததோ... இல்லையோ...அந்த நபர் இறந்ததால் அது அந்த பெண்ணின் மீது தவறு என்று ஆகிவிட்டது... பெண்களே...உங்கள் உடலை அனுமதி இன்றி யாரேனும் தொட்டாலோ..தொட முயற்சி செய்தாலோ... வீடியோவெல்லாம்... எடுக்காமல் நீங்களே.. கண்டித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்...இது அந்த பேருந்தோடு முடிந்துவிடும்... இந்தப் ஆண் ((தற்கொலை) செய்த செயலால் உண்மையாகவே பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆண்கள் தப்பித்துக் கொள்வார்கள்... பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்து விட்டால்...சகிப்புத் தன்மை அவசியம்...சகிக்க முடியாத விசயங்கள் தினசரி ஒராயிரம் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்கிறது...சகித்து கொள்ள முடியவில்லை என்றால்...மகளிர் மட்டும் பேருந்தை பயன்படுத்தவும்... எல்லோரும் வீடியோ எடுத்து கயவர்களை நிரூபித்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? நேரம் வீண்... மன உளைச்சல்..சில நேரங்களில் தெரியாமல் நிகழும் நிகழ்வுகளுக்கு குற்றம் சுமத்தினால்... இதற்கு தீர்வு தான் என்ன?
என் பதில்:-
நம் உள்ளுணர்வு தவறான
உரசுதலையோ...தொடுதலையோ..உணர்ந்தால் கொஞ்சம் தள்ளி நில்லுங்கன்னு கோபமா... சொல்லுங்க..அப்படி சொல்லியிருந்தாலே...நம்
கோபத்தை புரிந்து கொண்டு அந்த நபர் ஒதுங்கி இருப்பார்...தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை... #🚹உளவியல் சிந்தனை