
Sivasakthi
@arthanareeswarar
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இதென்னடா... gas - க்கு வந்த சோதனை...விறகு... இன்டக்சன் ஸ்டவுக்கு வந்த வாழ்வு...
பாருடா... ஆட்டத்த...எல்லாம் நேரம் தான்...வாழ்க்கை ஒரு வட்டம்... உண்மைதான்னு மறுபடியும் நிரூபணமாயிருக்கு... புதுசா இருக்குறது பழசாறதும்...
பழசா இருக்கிறது
புதுசாறதும்...புதுசில்ல...
தேவை இருக்கும்
வரை தான் மவுசு..
இல்லைனா.. ஓரமாத்தான் இருக்கணும்...gas...மாதிரி.... சிரிக்கிறதா...அழுகுறதா...
தெரியல...நாம சிரிச்சே வப்போம்!
😂🤣😂🤣 #🙏நமது கலாச்சாரம்
🔥🌷#இருளாயிஅம்மன்🌷🔥
🌴கருப்பனின் தங்கை பெண் தெய்வங்களில் சிறுமியாக தெய்வமானவள் தான் இருளாயி அம்மன்..
தீயில் மாண்ட காளியின் அவதாரம்.. பெண் தெய்வ வழிபாட்டில் இருளாயி வழிபாடு மிகவும் உக்கிரமான வழிபாடு..
இருளாயி அம்மன் தனது 12 வயதில் தீயில் மாண்டு மக்களை காத்தவள் என கூறுவார்கள்..
இருளாயி வழிபாடு என்னவென்றால் சாம வழிபாடு..
அதாவது நள்ளிரவு 12மணி நேரத்தில் அப்ப வாங்கிய நெல்மணிகளை அவித்து அப்பவே சாதம் வடித்து தாயிக்கு நாட்டு கோழி பலியிட்டு கறிசோறு படைத்து வழிபாடு செய்வார்கள்..
இதில் ஒரு முறை உள்ளது அதாவது ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..
திருமணம் முடிந்த பிறகு இருளாயி அம்மன் வழிபாட்டில் அந்த பெண் கலந்து கொள்ளகூடாது.
காரணம் இருளாயி கன்னி கழியாத பெண் சிறுமி..
மேலும் தாயிக்கு படைக்கபட்ட படையலை வெளிஆட்கள் உண்ணக்கூடாது..
நாய் கூட அந்த உணவை உண்ணக்கூடாது என்பதற்காக புதைத்து விடுவார்கள்..
இவ்வழிபாடு இருளாயிக்கு செய்யும் பூசை முறைகள்..
🌷🌷 #💖என்னை கவர்ந்த பெண்மணிகள் 👑 #🙏கோவில் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏நமது கலாச்சாரம் 🙏🏻🙏🏻
🌹நல்லதே நடக்கும் 🌹
https://youtu.be/nBnDNWePF-8?si=zaXBdsufEnfRgh5O விருச்சிக ராசி 2026 #பிரபஞ்ச ரகசியம்
இப்போ தான் நகை வேணாம்....
சொத்து வேணாம்... வரதட்சணை வேணாம்...பொண்ணு மட்டும் இருந்தா போதும்னு தோணுதா?
பொண்ணு சுலபமா...
கிடைச்சிருந்தா... இதெல்லாம் வேணாம்னு சொல்ல தோணியிருக்காது...
இன்னும் அதிகமா எவ்வளவு வாங்கலாம்னு யோசிச்சு இருப்பீங்க...வாழ்க்கை ஒரு வட்டம்...எதுவும் இங்க எப்பவும் நிரந்தரம் இல்ல... இப்ப வழிக்கு வந்தீங்களா...?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி எந்த பிரையோஜனமும் இல்ல....
😂🤣😂🤣
அதே மாதிரி பெண்களே...சொந்த வீடு இருக்கா... ? கார் இருக்கா..? கல்யாணத்திற்கு பிறகு தனிக் குடித்தனம் போகணும்...
அரசு வேலை பார்க்கணும்....
பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவாங்க...இப்படியெல்லாம் பார்த்து மாப்பிள்ளை கேட்காதீங்க....
மாப்பிள்ளையோ...பொண்ணோ...ஒரு டிகிரியாவது கண்டிப்பா படிச்சிருக்கணும்....வயது பெண்ணை விட ஆணுக்கு 3 -லிருந்து 5-க்குள் அதிகமாக இருக்கலாம்... அதற்கு மேல் போகக் கூடாது... ஆணும் வேலைக்கு போகணும்...
பெண்ணும் வேலைக்கு போகணும்... முக்கியமாக ஆணுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது... ஆடம்பரமா திருமணத்தை நடத்தாம எளிமையா நடத்தி செவுகள இரு வீட்டாரும் பகிர்ந்திக்கிரணும்...
இப்படி தான் துணையை தேட வேண்டும்...
திருமணத்திற்கு பிறகு...
வீட்டு வேலைகள் ரெண்டு பேரும் பகிர்ந்து தான் பார்க்கணும்... வரவு செலவுகள ரெண்டு பேரும் சேர்ந்து பேசி எந்த ஒரு முடிவையும் எடுக்கணும்... பரஸ்பர மரியாதை அவசியம்...இருவருமே பிறரின் கருத்துக்களை பொறுமையா கேட்கணும்...இருவருமே தன் துணையின் குடும்ப உறுப்பினர்களை மதித்து நடக்க வேண்டும்... ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் கடன் வாங்க கூடாது... ஆடம்பரமா குடும்பம் நடத்தாம... எளிமையா நடத்த பழகிக்கணும்..இருவரும் செலவுகள குறைக்கணும்.. எதிர்கால திட்டமிடல் சேமிப்பு அவசியம்...குழந்தைகளை இருவருமே பராமரிக்க வேண்டும்... இப்படியெல்லாம் இருக்கிற மாதிரி
மனநிலை உள்ள ஆணையோ...பெண்ணையோ..
தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது இருவருக்கும் நலம்...
இரு குடும்பத்துக்கும் நலம்... சமுதாயத்துக்கும் நலம்...👍👍 #🚹உளவியல் சிந்தனை
(ஒரு பொழுது அண்டை அயலார் பெண்கள் ஒன்று கூடி பொழுது போக்காக பேசி கொண்டிருக்கையில்...)
Neighbor 1 : இன்னைக்கு என் கணவருக்கு பிடித்த சமையல் செஞ்சிருக்கேன்!ரொம்ப நல்லா ருசியா... சமைச்சிருக்கேன்...🤤🤤
New Neighbor : என்னைக்குமே உன் கணவருக்கு பிடித்த சமையல் தானா..உங்க வீட்ல..? உன் கணவர் சாப்றதுக்கு முன்னாடியே நீ சாப்ட்ருவியா?
Neighbor 1: ஆமா அப்பத்தான் உப்பு... உரப்பு...சரியா இருக்கா..இல்லயான்னு பார்த்து சரி பண்ண முடியும்!
New Neighbor : புத்திசாலி தான்...
Neighbor 1: அது மட்டுமில்லாம... நேரத்துக்கு நான் சாப்டலைன்னா...
எங்க வீட்டுக்காரர் திட்டு வாரு..ஏங்கிட்ட பேசாம கோவிச்சிக்கிருவாரு...
New Neighbor :
(mind voice:-ரொம்பத்தான்... Scene... போட்றா... என்னமோ...இவ தான் புருசன் மேல பாசம் இருக்குற மாதிரி... இவ புருசன் தான் பொண்டாட்டி மேல பாசம் வச்சு இருக்கிற மாதிரி 😤😤
பொறு... எதுத்த வீட்டுக்காரி என்ன சொல்றான்னு... கேட்போம்.....) ஏங்க...உங்க வீட்ல யாருக்கு பிடிச்ச சமையல் daily...? நீங்க எப்ப சாப்பிடுவீங்க?
Neighbor 3: எங்க வீட்ல எப்பவுமே எனக்கு பிடிச்ச சமையல் தான்...ஆனா...நான் என் வீட்டுக்காரர் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவேன்...
New Neighbor : 🤔🤔🤔
இப்ப இவுங்க என்ன சொல்ல போறாங்கன்னு எனக்கு தெரியும்!
Neighbor 1 : என்ன..என்ன...?
Neighbor 2 : என் புருசன் என் மேல அதீத அன்பு வச்சிருக்கிறாதால எனக்கு பிடிச்ச சமையல் தான் daily- அது மட்டுமில்லாம... அவர் உப்பு ...உரப்பு...சரியா இருந்தா..உன்ன சாப்பிட சொல்லுவாரு அதான்ன..
சொல்ல போற
(mind voice : இவளும் அவள மாதிரியே over...ஆ...சீன போடுறா....)
Neighbor 3: அதெல்லாம் ஒண்ணுமில்ல...
Neighbor 2: என் கணிப்பு தப்பாதே...
அப்போ..நீ என்ன சொல்ல வர்ற....?
Neighbor 3: என் வீட்டுக்காரர் சாப்றதுக்கு முன்னாடி நான் சாப்பிட்டா... கொஞ்சமா பாத்து பாத்து சாப்பிடணும்...ஆஆசைய அதிகமா...சாப்பிட்டு அவருக்கு பத்தாம போயிடுச்சுன்னா...அதேது என் புருசன் சாப்பிட்டதுக்கு அப்புறம் நான் சாப்பிட்டா... எல்லாத்தையும் போட்டு வயித்துக்கும் மனசுக்கும் குறைவில்லாம... திருப்தியா... சாப்பிடலாம்ல.. அதுக்குத்தான்....
Neighbour 1 and New :
😱😱😱😱😱😱
Neighbour 1: உன் கணிப்புல தீய வைக்க...
New Neighbour :😔😔😔
Neighbour 3:😎😎😎 #🤓தமிழ் காமெடி😄 (மிஸ்)





