Sivasakthi
983 views 5 months ago
🔥🌷#இருளாயிஅம்மன்🌷🔥 🌴கருப்பனின் தங்கை பெண் தெய்வங்களில் சிறுமியாக தெய்வமானவள் தான் இருளாயி அம்மன்.. தீயில் மாண்ட காளியின் அவதாரம்.. பெண் தெய்வ வழிபாட்டில் இருளாயி வழிபாடு மிகவும் உக்கிரமான வழிபாடு.. இருளாயி அம்மன் தனது 12 வயதில் தீயில் மாண்டு மக்களை காத்தவள் என கூறுவார்கள்.. இருளாயி வழிபாடு என்னவென்றால் சாம வழிபாடு.. அதாவது நள்ளிரவு 12மணி நேரத்தில் அப்ப வாங்கிய நெல்மணிகளை அவித்து அப்பவே சாதம் வடித்து தாயிக்கு நாட்டு கோழி பலியிட்டு கறிசோறு படைத்து வழிபாடு செய்வார்கள்.. இதில் ஒரு முறை உள்ளது அதாவது ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. திருமணம் முடிந்த பிறகு இருளாயி அம்மன் வழிபாட்டில் அந்த பெண் கலந்து கொள்ளகூடாது. காரணம் இருளாயி கன்னி கழியாத பெண் சிறுமி.. மேலும் தாயிக்கு படைக்கபட்ட படையலை வெளிஆட்கள் உண்ணக்கூடாது.. நாய் கூட அந்த உணவை உண்ணக்கூடாது என்பதற்காக புதைத்து விடுவார்கள்.. இவ்வழிபாடு இருளாயிக்கு செய்யும் பூசை முறைகள்.. 🌷🌷 #💖என்னை கவர்ந்த பெண்மணிகள் 👑 #🙏கோவில் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏நமது கலாச்சாரம் 🙏🏻🙏🏻 🌹நல்லதே நடக்கும் 🌹
14 likes
17 shares

More like this