ShareChat
click to see wallet page

🌹பிரசித்தி பெற்ற இனிய சிவபெருமான் திருத்தலங்கள்... 1, திருவையாறு – இனிய ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது. 2, முக்கீச்சுரம் – உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது. 3, திருபூந்திருத்தி – நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல். 4, திருவீழிமிழலை – சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல். 5, கீள்வேளூர் – கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசனம் தரல். 6, திருக்கழுக்குன்றம் & திருப்பெருந்துறை – மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது. 7, கொட்டையூர் – சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல். 8, திருநல்லூர் – அமர்நீதி நாயனார் துலையேறிய போது இறைவன் காட்சி தரல். 9, திருவாவடுதுறை – முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது. 10, அச்சிறுப்பாக்கம் – திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி. 11, கஞ்சனூர் – பிரம்மனுக்கு திருமண காட்சி. 12, வடதிருமுல்லைவாயில் தொண்டமானுக்கு காட்சி. 13, திருவையாறு – காவிரி வெள்ளம் விலகி வழிபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி. 14, குடவாயில் – திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி. 15, கைச்சினம் – சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம். 16, திருப்புறம்பியம் – கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி. 17, கொள்ளம்புதூர் – சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல். 18, திருப்பைஞ்சிலி – வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது. 19, திருக்கானப்பேர் – இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது. 20, கடம்பந்துறை – கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல். 21, திருக்கண்டியூர் – சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா. 22, திருக்கானூர் – உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது. 23. திருவலம்புரம் – ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது. 24. திருத்தினைநகர் – பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல். நந்தி கொம்பு ஒடிந்த தலம்: திருவெண்பாக்கம் ஈசனோடு நந்தி இணைந்த உருவ தலம்: திருக்கூடலையாத்தூர், பவானி நந்தி விலகிய தலம் : திருப்புங்கூர் , பட்டீஸ்வரம் , திருப்பூவனம் திருப்பூந்துருத்தி நந்தி நின்ற தலம் : திருமால்பேரு நந்தி திருமண தலம் : திருமழபாடி நந்தி பிரதோஷ தலம் : திருஅரிசிலி நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல் திரும்பியவாறு கோபுரம் நோக்கிய தலம் : திருவோத்தூர் , திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.🍁 நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்

13.6K ने देखा