இப்போ தான் நகை வேணாம்....
சொத்து வேணாம்... வரதட்சணை வேணாம்...பொண்ணு மட்டும் இருந்தா போதும்னு தோணுதா?
பொண்ணு சுலபமா...
கிடைச்சிருந்தா... இதெல்லாம் வேணாம்னு சொல்ல தோணியிருக்காது...
இன்னும் அதிகமா எவ்வளவு வாங்கலாம்னு யோசிச்சு இருப்பீங்க...வாழ்க்கை ஒரு வட்டம்...எதுவும் இங்க எப்பவும் நிரந்தரம் இல்ல... இப்ப வழிக்கு வந்தீங்களா...?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி எந்த பிரையோஜனமும் இல்ல....
😂🤣😂🤣
அதே மாதிரி பெண்களே...சொந்த வீடு இருக்கா... ? கார் இருக்கா..? கல்யாணத்திற்கு பிறகு தனிக் குடித்தனம் போகணும்...
அரசு வேலை பார்க்கணும்....
பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவாங்க...இப்படியெல்லாம் பார்த்து மாப்பிள்ளை கேட்காதீங்க....
மாப்பிள்ளையோ...பொண்ணோ...ஒரு டிகிரியாவது கண்டிப்பா படிச்சிருக்கணும்....வயது பெண்ணை விட ஆணுக்கு 3 -லிருந்து 5-க்குள் அதிகமாக இருக்கலாம்... அதற்கு மேல் போகக் கூடாது... ஆணும் வேலைக்கு போகணும்...
பெண்ணும் வேலைக்கு போகணும்... முக்கியமாக ஆணுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது... ஆடம்பரமா திருமணத்தை நடத்தாம எளிமையா நடத்தி செவுகள இரு வீட்டாரும் பகிர்ந்திக்கிரணும்...
இப்படி தான் துணையை தேட வேண்டும்...
திருமணத்திற்கு பிறகு...
வீட்டு வேலைகள் ரெண்டு பேரும் பகிர்ந்து தான் பார்க்கணும்... வரவு செலவுகள ரெண்டு பேரும் சேர்ந்து பேசி எந்த ஒரு முடிவையும் எடுக்கணும்... பரஸ்பர மரியாதை அவசியம்...இருவருமே பிறரின் கருத்துக்களை பொறுமையா கேட்கணும்...இருவருமே தன் துணையின் குடும்ப உறுப்பினர்களை மதித்து நடக்க வேண்டும்... ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் கடன் வாங்க கூடாது... ஆடம்பரமா குடும்பம் நடத்தாம... எளிமையா நடத்த பழகிக்கணும்..இருவரும் செலவுகள குறைக்கணும்.. எதிர்கால திட்டமிடல் சேமிப்பு அவசியம்...குழந்தைகளை இருவருமே பராமரிக்க வேண்டும்... இப்படியெல்லாம் இருக்கிற மாதிரி
மனநிலை உள்ள ஆணையோ...பெண்ணையோ..
தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது இருவருக்கும் நலம்...
இரு குடும்பத்துக்கும் நலம்... சமுதாயத்துக்கும் நலம்...👍👍 #🚹உளவியல் சிந்தனை