INSTALL
Your browser does not support the video tag.
A Mohan Raj
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 36. தத்துவமசி வாக்கியம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 36-வது பகுதியாக "தத்துவமசி" (Tat Tvam Asi) வாக்கியம் விளக்கப்பட்டுள்ளது. இது "நீயே அதுவாக இருக்கிறாய்" (தத்-அது, த்வம்-நீ, அஸி-ஆகின்றாய்) என்று பொருள்படும். சீவன், பரம் மற்றும் அசி என்ற மூன்று பதங்களின் மூலம் ஆன்மா இறைநிலை என்பதை உணர்த்தும் மகாவாக்கியம் இதுவாகும்*. *திருமூலர் 2568-வது பாடலில், "தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம், நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும்" என்று குறிப்பிடுகிறார். அதாவது சீவனும், பரனும், அசி என்ற இணைப்பின் மூலம் சிவனாய் (இறைவனாய்) ஒன்றி நிற்கும் நிலையைக் குறிக்கிறது.* பாடல் வரிகள் : *36. தத்துவமசி வாக்கியம்*. 2568 சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி யத்தனில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1. 2569 ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2. 2570 ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3. 2571 துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவைமன்னா வந்து வயத்தேகமான தவமுறு தத்துவ மசிவே தாந்த சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. 4. 2572 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார் உரிய பரம்பர மாமொன் றுதிக்கும் அருநிலம் என்பதை யாரறி வாரே. 5. 2573 தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்துமே னாடவே யும்பத மும்பத மாகும் உயிர்பரன் செம்பொரு ளான சிவமென லாமே. 6. 2574 வைத்த துரிய மதிற்சொரு பானந்தத் துய்த்த பிரணவ மாமுப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர் வைத்த படியே யடைந்து நின்றானே. 7. 2575 நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. 8. 2576 பூரணி யாது புறம்பொன்றி லாமையின் பேரணி யாதது பேச்சொன்றி லாமையின் ஓரணை யாததுவொன்றுமி லாமையிற் காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. 9. 2577 நீயது வானா யெனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே. 10. 2578 உயிர்பர மாக உயர்பர சீவன் அரிய சிவமாக அச்சிவ வேதத்து இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற வோமய மாமே. 11. 2579 வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும் தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே. 12. 2580 அறிவறி யாமை இரண்டும் அகற்றிப் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13. 2581 அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்புங் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி யோமே. 14. 2582 அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே. 15. 2583 அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங் கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே. 16. 2584 நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்திவன் என்னடி யானென்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17. 2585 துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாவென்னை வான்வர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. 18. 2586 மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத் தவ்வாய அந்தக் கரணம் அகில்மும் எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற் கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. 19. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1.7K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
14
27
கருத்து
Your browser does not support JavaScript!