திருப்பள்ளியெழுச்சி யாருக்கு ?? இறைவனுக்கா ?? - கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனை அவனருளால் ..
இமைப்பொழுதும் நீங்காதான் என்று இறைவனின் தன்மையை கொண்டே ஆடுகின்றோம் ..
நாம் உறங்கினால் கூட உள்ளிருந்து விழித்தே இருந்து,
நம் உறங்கும் போது செயல்பட வேண்டிய உறுப்புகளை சீராக இயக்கி,
சுவாசத்தை கூட மிக சரியாக கையாண்டு ..
நான் செத்துப்போய், நம்மை மறந்து நாமே தூங்கி போய் விழிக்கும் போது தான் ..
எங்கே இருக்கின்றோம் ??
நம் பெயர் என்ன ??
என்ன சிந்தனையோடு நேற்று உறங்கினோம் ??
இன்று என்ன செய்ய வேண்டும் ?? போன்ற அணைத்து நினைவுகளும் புத்துயிர் பெறுகிறது ..
புதிதாய் பிறப்பது போல !!
அதே உடல் !!
ஆனால் அநேக மாற்றங்கள், உற்சாகம் புத்துணர்வு போன்ற அனைத்துடன் ஓர் நாளை எதிர்கொள்ள தயார் ஆகிறோம் தானே ..
என்ன செய்தாலும் கிட்டாத புத்துணர்வு !! இப்போது இந்த காலை பொழுது ஏதும் உண்ணாதே கூட எப்படி சாத்தியம் ஆகியது ??
அப்போது சவமாய் நம்மை உறக்கம் என்ற பெயரில் சமர்ப்பித்து !!
இறையாற்றல் என்ற முழு ஆளுமையில் நம்மை புதுப்பிக்க செய்ய பெற்றோம் தானே ..
அப்போது
இறைவன் என்பவன் நம்மை போல தூங்கி எழுபவனா ??
அப்புறம் ஏன் திருப்பள்ளியெழுச்சி என்ற திருமுறை ??
திருப்பள்ளியெழுச்சியாருக்கு என்றால் அது நமக்கு தான் ..
நம்முள்ளே
நான் எழுந்தேன் !!
எனக்கு இன்று இவ்வளவு வேலை இருக்கு !!
நான் அதை / இதை செய்ய வேண்டும் !! போன்ற எண்ணங்கள் வழியே ..
உன்னை புதுப்பித்து !! உன்னை நீயாகவே இன்றைய நாளை எதிர்கொள்ள கூடிய தன்மையை உனக்கு கொடுத்தவனை நீ உணர்ந்து ..
நான் ?? எனது ?? போன்ற எண்ண மாயை கடந்து ..
இறையால் இறையே உன்னுள் நீயாகவும் எழுந்தருள செய்தது என்ற மெய் உணர்வே திருப்பள்ளி எழுச்சி ..
அதிலும்
அதில் திருப்பெருந்துறை சிவபெருமானே என்று குறிப்பிடவும் ஆழ்ந்த பொருள் உள்ளது ...
அந்த திருப்பெருந்துறை கோவிலின் மற்றோர் பெயர் ஆவுடையார் ( ஆ - பசுவாகிய நாம், உடையார் - நம்மை உடையவன் ) கோவில் ..
அங்கே உள்ள சிவத்தின் திருநாமம் ஆத்மநாதர் ( ஆன்மாவுக்கு நாதர் )
அத்திருக்கோயிலில் ஆவுடை மட்டுமே இருக்கும்,
ஆவுடை என்றால் ஆ - ஆன்மா சூடி இருக்கும் உடை, ஆவின் - உடை ( ஆவுடை )
அதன் மீது பாணம் என்ற லிங்கம் இருக்காது அந்த இடத்தில் சூட்சமாக நம் ஆன்மாவை பொருத்தி அதையே ஆத்ம நாதனாக நாம் வழிபட வேண்டும் ..
அங்கே காட்டப்படும் தீபாராதனை கூட நம்மிடம் கொண்டு வரப்படாது ..
உங்களோடு சேர்த்து உங்கள் ஆத்மநாதனுக்கே தானே வழிபாடு என்பதால் ..
திருநீறு மட்டுமே கொடுக்க படும் ..
அத்தகைய சிவப்பரம்பொருளை முன்னிறுத்தி..
நீ தூங்கி எழவில்லை !! உன்னை எழவைத்தவன் உன்னோடு இருக்கிறான் ..
அவ்வுணர்வை மெய்ஞானத்தை உணரவே திருப்பள்ளியெழுச்சி உனக்காக நீ உணர்ந்து அந்த நாளை எதிர்கொள்ளவே,
நான் !! நான் !! என்று உன்னையே நீ ஏமாற்றிக்கொள்வதில் இருந்து தெளியவே ..
தினமும் திருப்பள்ளியெழுச்சி பாடி ..
உன்னுள் உன்னை கடந்த உத்தமன் உனக்கு என்றும் இருக்கிறான் என்ற உணர்வோடு அந்த நாளை இறைவுணர்வோடு எதிர்கொள்ளவே அருளப்பட்டது ..
பலருக்கு சந்தேகம் இருக்கோ இல்லையோ ???
இவனுக்கு அவனால் இருந்து !! அவனே பதிலுமாகி !! யாருக்கு உணர்விக்கிறானோ ?? அவனே அறிவான் ..
வாழ்த்துகள்
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய