நீ அருகில் இருக்கிறாய்
தொலைவில் இருக்கிறாய் என்பதெல்லாம் எனக்கு
இரண்டாம் நிலை.
முதலில் நீ என்னுள் இருக்கிறாய்...
எங்கேயோ இருந்து கொண்டு
என்னில் இறங்கி
என்னை ஆள்கிறாய்.
மகுடிக்கு தலையசைவது போல
நீ சொல்வதையும்,
நீ சொல்வதாக நினைத்துக்
கொண்டு சொல்லாததையும்
செய்து முடிக்கிறேன்...
செய்கின்ற வேலைகளை கெடுத்துவிட்டு
அதில் வந்து அமர்ந்து கொள்கிறாய்.
போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றாய்.
பிடித்து தள்ளுவது போல தள்ளிவிட்டு திரும்பினால்
அங்கேயும் நிற்கிறாய்.
இம்சைபடுத்துகிறாய்.
இருகரம் கூப்பி வழியனுப்பி வைத்தால் மனமிறங்கி ஓரிரு நொடிகளில் மாயமாகிறாய்...
பிடித்தவர்களை பேருந்தில் அனுப்பிவிட்டு அந்த பேருந்து போன பாதையே நிலைகுத்தி பார்ப்போமே அதுபோல உன்னையே பார்த்திருக்கும் வேளையில்,
ஏன் துயர்படுகிறாய்?
இதோ வந்துவிட்டேனென குதூகலிக்க வைக்கிறாய்.
இப்படியொரு வாழ்வு வாழ்கிறேன்.
நீ அருகில் இருந்தாலென்ன?
இல்லாவிடில் என்ன..???
"'நான் உன்னுடனே வாழ்கிறேன்."' #அவளுக்காக