ShareChat
click to see wallet page

விழிகள் இரக்கத்தை பார்வையாகவும்... இதழ்கள் அன்பை சொற்களாகவும்... இதயம் தியாகத்தை துடிப்பாகவும்... இனிதாய் உயிரோடு ஒட்டிக் கொண்டவள்..! மகளாய் பிறப்பெடுத்து... இல்லத்து இளவரசியாய் இனிதாய் இன்பமாய் வலம் வந்து... பேரன்பிலே ஒரு அன்னையாய் உருமாறி அரவணைத்தே காத்து நிற்பவள்... நதிகள் எல்லாம் பெண் பெயர் சூடிட... பூமியும் சூட்டிக் கொண்டது தன் பெயரை பூமா தேவியென்று..! உறவு முறை ஆராய்ந்து பார்த்தால் உறவு படைத்த பிரம்மா ஆவாள்! அன்னையாய் காதலியாய், மனைவியாய் இன்னும் பல உறவுகளாய் இவளிருந்தாலும்.., இவளுக்கினையாய் ஈரேழுலகிலும் இல்லை எதுவும்... இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்களுடன் S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖

858 ने देखा
1 दिन पहले