#🍲 மீன் குழம்பால் பறிபோன 2 உயிர்கள் 😢 #பிப்ரவரி 18 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மாமியார் - மருமகன் உயிர்களை பறித்த மீன் குழம்பு - மகளும் கவலைக்கிடம்.. கேரளாவில் அதிர்ச்சி | Kerala Fish Gravy
குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட நபரும், அவரது மாமியாரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரின் மனைவி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (வயது 48). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சஜினா (வயது 39), மாமியார் ரஷிதா பிவி (வயது 58) மற்றும் தனது இரண்டு குழந்தைகளை காரில் அழைத்துக் கொண்டு விழிஞ்ஞம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார் விழிஞ்ஞத்தில் உள்ள முஹ்யித்தீன் மசூதி அருகாமையில் உள்ள அஸ்மக் என்ற ஹோட்டலில் ஷாஜி தனது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநருடன் சென்று உணவு சாப்பிட்டுள்ளார். ஷாஜி உள்ளிட்ட 6 பேரும் மீன் குழம்பு, பரோட்டா, கணவாய் மீன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டு உள்ளனர்.
உணவு சாப்பிட்ட பிறகு அனைவரும் ஹோட்டலை விட்டு காரில் புறப்பட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது, பாதி வழியில் திடீரென ஷாஜி, அவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் பாரிப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஷாஜி மற்றும் அவரது மாமியர் ரஷிதா பீவி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் சஜினா மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் அங்கு அவர் கவலைக்கிடமான நிலைமையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
ஷாஜி, ரஷீதா பீவி, சஜினா ஆகியோரை தவிர்த்து கார் ஓட்டுனருக்கோ, குழந்தைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாரிபள்ளி போலீசார் ஷாஜி மற்றும் ரஷீதா பீவி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
முதல் கட்ட விசாரணையில் கெட்டுப்போன மீன் குழம்பை சாப்பிட்டதால் அது விஷமாக மாறி இரண்டு பேரின் உயிரை பறித்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். ஹோட்டலில் இருந்த சமைக்கப்பட்ட உணவுகளின் மாதிரிகளை சேகரித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஹோட்டலை தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர். இந்த ஹோட்டலில் அன்றைய தினம் சாப்பிட்ட நபர்கள் வேறு யாருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறியும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், உன்மையை கண்டறிவது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இருவரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.
ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியாரும், மருமகனும் அடுத்தடுத்து உயிரிழந்தது, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.