ShareChat
click to see wallet page

மார்ச் 3, புனிதமிக்க ஃபால்குன பௌர்ணமி அன்று, காலபைரவ பிரதிஷ்டையின் ஒரு பகுதியாக சத்குரு அவர்கள் “காலபைரவ ஸ்தாபனா” என்னும் நிகழ்வை நடத்துவார். சத்குரு அவர்களால் முதன்முறையாக நிகழ்த்தப்படும் இந்த காலபைரவ பிரதிஷ்டையில் பங்கேற்பது என்பது உன்னதமான, அரிய வாய்ப்பாகும். காலபைரவர் என்பது காலத்தைக் கடந்த சிவனின் ஒரு உக்கிரமான வடிவமாகும். இந்த பிரதிஷ்டையின் மூலம், கோவை ஈஷா யோக மையம் ஒரு முழுமையான தீர்த்த க்ஷேத்திரமாக மாறுவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறது. இது பிறப்பு முதல் இறப்பு வரை மற்றும் அதை கடந்த நிலைகளுக்கும் உறுதுணையாக இருக்கும் ஒரு முழுமையான சக்தி அமைப்பாகும். க்ஷேத்திரபாலகராக, அதாவது இந்த புனித க்ஷேத்திரத்தின் பாதுகாவலராக, காலபைரவர் இந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தின் சக்தி வாய்ந்த காவலராக விளங்குவார். மேலும் விபரங்களுக்கு: https://sadhguru.co/kalabhairava #kalabhairava #isha

30.7K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்