ShareChat
click to see wallet page

மனச்சோர்வை நீக்கும் மாமருந்து... 1)சோர்வு என்பது அதிக உடல் தளர்வினால் ஏற்படுவது. மனசோர்வு என்பது மன தளர்வினால் அதாவது அதிகமான வீண் சிந்தனையின் சுமைகளின் சூழ்நிலையால் ஏற்படும் ஒரு கவனக்குறைவு.இந்த மனச்சோர்வானது தானாகவே உடல் சோர்வையும் ஏற்படுத்திவிடும். மனம் ஏன் சோர்வடைகின்றது. உடல் ஏன் சோர்வடைகின்றது. உடல் சோர்வடைய காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவை அளிக்காததே காரணம். மனச்சோர்வுக்கு மகிழ்ச்சி நிறைந்த எண்ணங்களை நேர்மறையான குஷி நிறைந்த எண்ணங்களை மனதிற்கு வழங்காததே மனச்சோர்விற்கான காரணம். உடல் பழுதுபட்டிருக்கும் பொழுது உள்ளம் சுமை நிறைந்திருக்கும் போது எப்படி மனச்சோர்வு வராமல் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். உடல் பழுதுபட்டிருந்தால் அதற்கு மருந்து தேவைப்படுவதைப் போல உள்ளம் பழுதுபட்டிருந்தாலும் அதற்கு மகிழ்ச்சி என்று மருந்து தேவை. இதைத்தான் நேர்மறையான எண்ணம் அதாவது பாசிட்டிவ் தாட்ஸ் என்று உலகம் சொல்கின்றது. 2) உடல் சோர்வு அடையும்போது அதை புத்துணர்ச்சி பெற வைப்பதற்காக எந்த செலவும் இல்லாத அரசாங்க ஆஸ்பத்திரி இருப்பதைப் போல மனம் சோர்வடையும் போது இருக்கவே இருக்கின்றது கோவில்கள் மற்றும் தியான நிலையங்கள். மனம் சோர்வடையும் பொழுதெல்லாம் இறைவனுடைய புகழை பாடுவது மனதை மீண்டும் புத்துணர்ச்சி பெற வைப்பதற்கான மாமருந்து ஆகும். மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் செய்வது மனதிற்குள் சுப எண்ணங்களை உற்பத்தி செய்யும். 3) எல்லாவற்றையும் இங்கே தான் இழந்திருக்கின்றோம். இழந்தது திரும்ப வர வேண்டும் என்றால் நமக்குள் உறுதியான சுப எண்ணங்கள் தேவை. எப்படி துர்நாற்றம் வரும் இடத்தில் தானாகவே மூக்கை மூடி கொள்கின்றோம். அதுபோல நம்மைப் பற்றிய பலஹீனமான எண்ணங்களை மனச்சோர்வின் காரணமாக மனம் உற்பத்தி செய்தால் உடனடியாக மனதின் கதவை அங்கே மூட வேண்டும். உங்களைப் பற்றிய பலவீனமான எண்ணங்களை பிறர் உற்பத்தி செய்து அதை பிறருக்கு சொல்வதன் மூலம் உங்களை மேலும் பலவீனப்படுத்த கூடிய செயல்களை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது. எது உங்களை நிலைகுலையச் செய்கின்றதோ அதை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள். ஒரு போதும் இறைவனைத் தவிர வேறு ஒன்றை காணாதீர்கள். ஏனென்றால் தீர்ப்பு அவர் கையில் உள்ளது எனும் பொழுது தீரப் போகும் மனிதர்களைப் பற்றி என்ன கவலை உள்ளது. 3) மனச் சோர்வுக்கு முக்கிய காரணம் தாழ்வு மனப்பான்மை. பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம். யார் உங்களைப் பற்றி என்ன நினைத்தால் என்ன? யாராவது உங்களுக்கு உணவளிக்க போகின்றார்களா? அல்லது கஷ்டத்தில் பங்கு கொள்ள போகின்றார்களா விமர்சனம் செய்ய முன்னால் வரும் மனிதன் அதற்கான தீர்வை தர ஒருபோதும் வருவதில்லை. யார் ஒரு இக்கட்டான நிலையில் தீர்வைத் தருகின்றார்களோ அவர்கள்தான் உங்களது உண்மையான நண்பர்கள். விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். அவர்கள் நெற் பயிரோடு சேர்ந்த களைகள். அறுவடையின் போது அழிக்கப்படுபவர்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் மனச்சோர்வு‌. அடையாதீர்கள். ஒருபோதும் நல்லவனால் கெட்ட பெயர் ஏற்படாது. கெட்டவனால் நல்ல பெயர் ஏற்படாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 4) எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் பொழுது அந்த முடிவு உங்களை மனச்சோர்விலிருந்து நிரந்தரமாக அகற்றி விடும். சிந்திக்காமல் சிக்கிக் கொள்வதன் காரணமாக மனச்சுமை ஏற்படுகின்றது. நாம் யாருக்கும் சுமையாகவோ யாரும் நமக்கு சுமையாகவோ வராமல் இருக்க வேண்டுமென்றால் நம்மை நாம் முன்னரே யோசித்து தற்காத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இதில் காலம் கடந்து விட்டால் சுப எண்ணங்கள் மூலம் இழந்த காலத்தை மீட்டெடுத்து நிலை நிற்க வேண்டும். மனச்சோர்வு அநேக வியாதிகளுக்கு காரணம். மனதை மகிழ்ச்சியாக எப்பொழுதும் வைத்திருந்தால் உடல் தானாகவே ஆரோக்கியமாக மாறிவிடும். எனவே உடற்பயிற்சி செய்வது போல மனப்பயிற்சிக்கு தியானங்களில் ஈடுபடலாம். ஒவ்வொருவரும் அதிமேலான இராஜயோக தியானம் அவசியம் செய்ய வேண்டும். எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்று சொல்பவர்கள் கற்றுக் கொண்டு இருக்கும் இடத்திலேயே நடைமுறைப்படுத்தி அதன் லாபத்தை எடுக்கலாம். 5) மனச்சோர்வு அகல வேண்டும் என்றால் இறைவனை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். மனிதனை நண்பன் ஆக்கினால் அவன் சூழ்நிலைக்கு ஏற்றார் போல மாறி விடுவான். அவனுடன் பழக்கம் வைத்த காரணத்திற்காக நமது மனமும் சூழ்நிலையால் மேலும் கீழுமாக மனச்சோர்வு அடைந்துவிடும். எனவே இறைவன் சிவனை நண்பனாக மாற்றி விடுங்கள். ஒரு நிரந்தர மகிழ்ச்சி அடையக்கூடிய நண்பனாக தந்தை சிவன் இருக்கும்பொழுது வேறு யார் துணை வேண்டும். அவர் எப்பொழுதும் சதாசிவனாக இருக்கின்றார். என்றும் மாறாதவராக என்றும் புன்னகை பூத்தவராக என்றும் மன மகிழ்ச்சியை தருபவராக உடன் இருக்கின்றார். நீங்கள் உங்கள் மனச்சோர்வை போக்க தைரியம் என்ற ஒரு அடி எடுத்து வைத்தால் அந்த தைரியத்திற்கு இறைவன் ஆயிரம் அடி உதவி செய்ய முன்னால் எடுத்து வைப்பார். 6) மனம் சோர்வடைந்தால் முகம் சோர்வடையும். சோர்வடைந்த முகத்தை பார்ப்பவர்கள் அவர்களும் சோர்வடைவார்கள். மன மகிழ்ச்சியே முகமலர்ச்சி. நாம் மனிதர்களாக இந்த பூமியில் வாழும் வரை மனச் சோர்வு எனும் வியாதியை பரப்ப கூடாது. அதற்காக மனதிற்குள் ஆயிரம் சங்கடங்களை வைத்துக்கொண்டு வெளியில் சிரிப்பவராகவும் காட்டிக் கொள்ள கூடாது. உண்மையான சுப எண்ணங்களால் நாம் நிறைந்து மகிழ்ந்திருக்க வேண்டும். நமது கவலைகளை வாங்கிக் கொள்ள நம்முடன் தந்தையாகிய சிவன் இருக்கையில் நாம் எதற்காக கவலைப்பட வேண்டும். சத்தியமாக நடந்து சுத்தமாக இருந்தால் போதும் எல்லாம் வெற்றி மேல் வெற்றியாக மாறிவிடும். இதுவரை எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. இந்த நிமிடம் முதல் இறைவன் எனக்குத் துணையாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையின் முதல் அடியை உறுதியாக எடுத்து வையுங்கள் பிறகு பாருங்கள் என்னைப் போன்ற மகிழ்ச்சியான மனிதன் உலகில் யாருமே இல்லை என்று உங்கள் மனம் பாடுவதை நீங்களும் கேட்பீர்கள் இந்த உலகமும் கேட்கும். நல்வாழ்த்துக்கள். ஓம் சாந்தி. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்

1K ने देखा