நீயென்பது
என் தெளியா
மயக்கம் ..
நீயென்பது
என் பிதற்றல்
மொழி ..
நீயெபன்து
என் இதழ்
முணுமுணுப்பு ..
நீயென்பது
என் மோக
உணவு ..
நீயென்பது
என் நினைவு
பொதி ..
நீயென்பது
என் விழிகளின்
கனவு ..
நீயென்பது
என் ரசிப்பான
பிழை ..
நீயென்பது
என் கோடைகால
நிழல் ..
நீயென்பது
என் மழைக்கால
தேநீர் ..
நீயென்பது
என் குளிர்கால
நெருப்பு ..
நீயென்பது
என் கண்ணீரின்
அர்த்தம் ..
நீயென்பது
என் மகிழ்வின்
ஆணிவேர் ..
நீயென்பது
என் துன்பத்தின்
ஆறுதல் ..
நீயென்பது
என் அடைக்கல
வாசல் ..
நீயென்பது
என் அரவணைப்பின்
தாய்மடி ..
நீயென்பது
என் வாழ்நாள்
காதல் ..
நீயென்பது
இதோ நான் எழுதி
தீர்க்க முயன்றும் நீளும்
இந்த கவிதையும் 📝🖋️ ...!
#அவளுக்காக